Tag Archives: #antihindu

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

சென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்

21.04.2020

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்!

இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.
கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது!

எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..

டெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.

முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.

சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.

கிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!

எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.
கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

உங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.

தமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

மங்கலம் சொல்லும் சேதி- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது

நேற்று 08/03/2020
திருப்பூர் மங்கலத்தில்
நடந்தது என்ன..?திருப்பூர் அருகே உள்ளது மங்கலம்..
இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கிறார்கள்.மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில்
இந்துக்களே பெரும்பான்மை .இந்நிலையில்
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது
என இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.இதற்கு முடிவு கட்ட
ஒட்டுமொத்த கிராம மக்களும்
ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.அந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கியது.
நேற்று காலையில் இருந்தே
இஸ்லாமியர்களின் அராஜகமும் துவங்கியது.நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது .அதை கழட்ட வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் .எனவே மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் போலீசாரின் நெருக்கடியால் கழட்டப்பட்டன.பொதுக்கூட்டத்திற்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு
ஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை,நான்கு சாமளாபுரத்லிருந்து வரும் சாலை…அவிநாசி சாலையை தவிர
மற்ற மூன்று சாலைகளையும்
முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை
மறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது..பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.பொதுக் கூட்டம் முடிந்து
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடைசிவரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை.ஒரு பக்கம் இந்து பொதுமக்கள் தன்னெழுச்சி பெற்று
இஸ்லாமிய அராஜகத்திற்கு எதிராக போராட வந்தது மகிழ்ச்சி என்றாலும்
இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி
ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஒரு உதாரணம்.முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறைகூவல் விடுத்தார். அது காலத்தின் கட்டாயம்

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கைலாஷ் யாத்திரை உதவித்தொகை- கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா? மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கேள்வி

நா. முருகானந்தம் 03.03.2020
மாநில பொதுச் செயலாளர்

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா?

கைலாஷ் , முக்திநாத் , மானசரோவர் போய் வந்தவர்களில் 500 பேர்களுக்கு ரூ10000/- உதவித்தொகை என இந்து அறநிலையத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான நயவஞ்சகம், ஏமாற்றும் செயல்.

இந்துமுன்னணி இதை வன்மையாக கண்டிக்கிறது.

மெக்கா, மதீனா செல்ல முஸ்லீம்களுக்கு அரசின் பணம்.

ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசின் பணம்.

இந்துக்களுக்கு மட்டும் இந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை எடுத்து 500 பேருக்கு மட்டும் விநியோகமா?

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கண்ணில் வெண்ணை , இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் மதசார்பின்மையா?

இந்த பாரபட்சத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு வக்ப் வாரியப் பணத்திலிருந்தும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்களது நலவாரியத்திலிருந்தும் தான் கொடுக்கவேண்டும்.

மானியம் வழங்குவதிலும் அதுவும் வழிபாட்டிற்கு செல்ல பணம் கொடுப்பதில் கூட சிறுபான்மையினைரைத் தாஜா செய்யும் போக்கு மிக கேவலமான அரசியலாகத் தோன்றுகிறது.

இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு மானியம் அரசின் பணத்திலிருந்துதான் தரவேண்டும் என இந்துமுன்னணி தமிழக அரசிற்கு கடுமையாக வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்
நா. முருகானந்தம்

மாநில பொதுச் செயலாளர்

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி .சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

வணக்கம்.

திரைப்பட நடிகர் யோகிபாபு அவர்கள் நடித்து வெளிவர உள்ள காக்டெய்ல் என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .

இந்த விளம்பரத்தில் தமிழ் கடவுள் முருகனின் போன்று யோகிபாபுவின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது .மது வகைகளின் பெயரைத் தாங்கி வரும் திரைப்படம் ஒன்றிற்கு முருகப்பெருமான் போல வேடமணிந்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது முருக பக்தர்களையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக உள்ளது .

சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் யோகி பாபு ஆகியோர் இந்த செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நடிப்புத்துறை, கலை என்ற பெயரில் இந்து கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து புண்படுத்தும் போக்கு தமிழ் திரைப்படத்துறையில் வாடிக்கையாக உள்ளது.

இதே போன்று மற்ற மத விஷயங்களை கிண்டல் செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்துக்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்தால் இந்துக்களை புண்படுத்தும் தமிழ் திரையுலகம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன் விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

தாயக பணியில்
சி.சுப்பிரமணியம் மாநிலத்தலைவர் ஹிந்து முன்னணி

மேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக இருந்த, பள்ளி ஆசிரியர் திரு. பந்து மண்டல் மற்றும் அவரது குழந்தை, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இந்த கொடூர செயலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது, மாநில அரசுகள், மதத்தின் பெயரால் கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சுயலாபத்திற்காக வழக்கை இழுத்தடிப்பதாலும், நீர்த்துப்போக செய்வதாலும் குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போகிறது. இஸ்லாமிய மதவாதிகள் மூளை சலவை செய்து கொடூர செயலை செய்ய தூண்டுகிறார்கள். இது போன்ற கொடூரமான சம்பவங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகைய கொடூர செயல்களை செய்பவர்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகளுக்கு உதவுபவர்கள், குற்றவாளிகள் மறைந்திருக்க இடமும் பொருள் உதவியும் அளிப்பவர்கள் ஆகியோரும் தண்டிக்கும்போது மட்டுமே இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுக்க முடியும்.
இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், மதபயங்கரவாதிகளால் செய்யப்படும் தனிப்பட்ட முறையிலான கொலைகள் தொடர நமது நாட்டு நீதி பரிபாலனத்தின் பலவீனமும் காரணமாக இருக்கிறது என்பது வேதனையான உண்மை.
நமது தமிழகத்தில், தஞ்சையில் ராமலிங்கம் என்பவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டாக வழக்கு விசாரணை அளவிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாட்டால் குற்றவாளிகளுக்கு, பயம் விட்டுப்போகிறது. மேலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படும் அவலம் நீடிக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதும், தாக்குவதும் எந்த அளவு குற்றவாளிகள் தைரியமாக செயல்பட முடிகிறது என்பதற்கு அவை எடுத்துக்காட்டாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கொடூர தாக்குதல் தொடர்கிறது என்பதை கவனத்தில்கொண்டு, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மாநில காவல்துறைக்கு வழிகாட்டுவதன் மூலம் மத பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேற்கு வங்க மாநில அரசு, குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்