Tag Archives: கோவில்கள்

முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

23.05.2020

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி

இந்து நாகரிகம் – கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்;

“முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேருன்றிய காலம் அது.

அப்போதைய இந்து தன்னுணர்வு குறைந்தவனானான்.பிற மதத்தவரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.

முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக்கொண்டான். கிருஸ்தவர்களிடமிருந்து விவஸ்தையற்ற கட்டுப்பாடற்ற சுக போகங்களைக் கற்றுக் கொண்டான்.

தனக்கென்று ஒரு தனி நாகரிகம் இருப்பதை அவன் மறந்து போனான்.நாளடைவில் அந்த மறதி வளர்ந்திருக்கிறதே தவிர குறைவில்லை.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரிகத்தை போதிக்கவில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.

சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக்கூடாதது எது, என்பதிலிருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பதுவரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

மேற்கத்திய நாகரிகம் மத நாகரிகமல்ல. அது மதம் பிடித்த நாகரிகம்.

ஆனால் ஓர் இந்துவின் நாகரிகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.

அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது. கணவனை தேவனாக்கியது.மனைவியைத் தேவியாக்கியது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் “ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.

அப்படி ஒரு வீடு இருக்குமானால் அது அதிதிகளை(விருந்தினரை) வரவேற்று உபசரிப்பதற்காகவே”பிறரை வரவேற்று கருணை காட்டுவதே கோவில்.

ஆகவே இந்துவின் குடும்பம் ஒரு கோவில். அவன் தினமும் பூஜை செய்கிறான்.

காரணம் அன்றைக்கு தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறான். அவன் விபூதியை “திருநீறு ” என்கிறான்.

நாமத்தை “திருமண்” என்கிறான். அவற்றைத் தினமும் இ‍ட்டுக்கொள்கிறான்.

காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப்”போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.

அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம் “சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக்கூடாது” என்று சத்தியம் பூணுவதற்காகவே.

அவன் நீராடி உடலைக் கழுவுகிறான். பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான். நான் குறிப்பிடுவது சரியான-நல்ல இந்துவை.

இந்து சமுதாயம் மறந்து விட்ட நாகரிகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.

நமது நாகரிகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.

அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம். இந்து நாகரிகம் குழந்தை பிறந்தது முதல் சாகும்வரை அதற்கு வழி காட்டுகிறது…

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? – இணைவீர் இந்துமுன்னணி

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை?

இது அரசியல் கட்சி அல்ல –
இது இந்துகளுக்கான அமைப்பு

1. நமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க

2. இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க

3. இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க

4. நம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க

5. வேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த

6. நம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட

7. பள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க

8. கோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த

9. கோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க

10. தினமும் நமது கிராம கோவில்களில்
ஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…

11. நமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.

12. கட்சியால் பிளவு பட்டாலும்
மதத்தால் ஒன்று படுவோம்

13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள

நாம்
நமது ஊர் கோயில்களில்
நாம் வாரந்தோறும் சந்திக்க…..
இணைவீர்…..இந்து முன்னணியில்…

தேசம் காக்க, தெய்வீகம் காக்க

தர்மம் காக்க அதர்மம் அகற்ற
இந்துமுன்னணி
தமிழ்நாடு

தொடர்புக்கு

hmrss1980@gmail.com

9047027282

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் அறிக்கை – நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

நிர்வகிக்க முடியாவிட்டால் மூடுவற்கு கோவில்கள் என்ன அரசாங்க பெட்டி கடையா ?

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி வருத்தம்

சிலை கடத்தல் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் மகாதேவன் மற்றும் நீதியரசர் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதியரசர்கள் சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை அரசு மூடிவிடலாமே என கருத்து தெரிவித்ததாக நாளிதழில் இன்று செய்தி வெளியாகி உள்ளது

நீதியரசர்களின் இந்த கருத்து மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

சிலை கடத்தல் வழக்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பினால் தான் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வருமானம் கிடைக்கிறது அப்படி இருக்கும் போது சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் தமிழக அரசு கோவில்களை மூடி விடலாமே என கேள்வி எழுப்பியுள்ளர்.

இந்து கோவில்களை தமிழக அரசு பராமரிக்க பாதுகாக்க தவறியதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது மிகச்சரியானது. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அதற்காக கோவில்களை மூடிவிடலாமே என்ற கருத்து ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே தமிழக அரசு கட்டுபாட்டிலுள்ள பல கோவில்கள் பாழைடைந்து சிதிலமடைந்து மூடப்பட்டுள்ளது.

இந்து கோவில்கள் அனைத்தும் மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்டுள்ளதே தவிர அரசாங்கத்தால் அல்ல. அதை மூடுவதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

சொல்லப்போனால் அரசு கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது.

எனவை தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். அதை இந்து ஆன்மீக குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறலாமே தவிர கோவில்களை மூடலாமே என்ற நீதியரசர்களின் கேள்வி மிகுந்த வருத்தத்திற்குரியது ஆகும்.

அரசின் இயலாமைக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கலாமா ?

எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கோவில்களை இழுத்து மூடுவதற்கு நீதிமன்றமே வழிகாட்டுவது போல் ஆகிவிடும்

கோவில்களை மூடலாமே என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு இந்துமுன்னணி சார்பில் வருத்தத்தை பதிவு செய்கிறோம்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.
மக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.
எந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர்? அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா?
அதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.
இந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து போராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

24-9-2018
இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.

இந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.

அப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.

அதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.

சமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.

அதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா?

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.
இது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.

எனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)