Tag Archives: #தமிழகஅரசு

உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு

22.05.2020

பத்திரிகை அறிக்கை..

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும்

கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.

தமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.

பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு .கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில்
கிராம ப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம்.
உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம்.

எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது. மேலும் மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம்.

ஆகவே கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி ,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளினால் நலிவடைந்துள்ள சிறு-குறு தொழில்சாலைகள் (MSME) மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றி அரசு விவேகத்துடன் செயல்படவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி. சுப்பிரமணியம் அறிக்கை

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் திரு.அந்தோனியோ குத்தரேசு ஒரு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் உற்பத்தியை நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும், நாட்டில் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

நமது இந்திய நாட்டில் ஊரடங்கு சமயத்தில் விவசாயம் சார்ந்தவைகளுக்கு கட்டுபாடுகள் இல்லாது விலக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் புதிய யுக்தியைக் கையாளுவது அவசியம்.

கொரோனா பாதித்த பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவான பகுதிகள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியான திட்டங்களை வகுக்கவேண்டும்.

அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

உதாரணமாக பழுது பார்க்கும் கடைகள் நோய்த் தடுப்பு கட்டுபாடுகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.

சிறு-குறு தொழில் (உற்பத்தி) நிறுவனங்கள் முதலில் செயல்படத் துவங்கினால்தான் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட MSME துறைகள் முதலில் களமிறங்க வேண்டும்.

உற்பத்தி தொடர்ந்து நடைபெற அனைத்து விதமான வழிகளையும் ஆய்ந்து விவேகத்துடன் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கோருகிறது.

அதே சமயம் இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி, குறுகிய நோக்கத்துடன் சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராகவும், கலவரத்தை ஏற்படுத்தவும் ஒரு சிலர் திட்டமிட்டுலாதாகத் தெரிகிறது. அத்தகையவர்களை முதலிலேயே கண்டறிந்து கில்லி எரிய அரசு கவனாமாக செயல்படவேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் விடுக்கிறது.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

போலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்

15/04/2020

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
தூத்துக்குடி.
9486482380

பெறுநர்
உயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

ஐயா வணக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

புதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

செங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது?

சட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்?

இவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகப் பணியில்

V.P.ஜெயக்குமார்
15/04/2020
பரமன்குறிச்சி

நகல்
1) உயர்திரு தமிழக DGP அவர்கள்
2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கோரிக்கை

15.04.2020

பத்திரிகையில் அறிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அரசாங்கமே கூழ் காய்ச்சுவதற்கு உண்டான அரிசி மற்றும் தானியங்களை
இலவசமாகக் கொடுத்தது உதவ வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கின்றது.

கடந்த காலங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் வந்த போது” குறிப்பாக பிளேக் நோய் வந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு வேண்டுதல்களை வைத்து ப்ளேக் என்ற பெயரிலேயே பல பிளேக் மாரியம்மன் கோவில்கள் நிறுவப்பட்டு
அவற்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பது கடந்த கால வரலாறு. இது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆகவே தமிழக அரசாங்கம் தற்போது இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும்
நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதுடன் அதற்குண்டான தானியங்கள்” அரிசி போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்”

மேலும் கூழ் வினியோகிக்க ஏதுவாக அரசாங்கமே தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அல்லது தன்னார்வலர்கள் கையில் அதை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”
உடனடியாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று இந்துக்களும் மற்றும் இந்துமுன்னணி இயக்கமும் ஆவலோடு
எதிர்பார்க்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி
9443382380

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்

வழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

எனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.