Tag Archives: #விபிஜெயக்குமார்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை

27.11.2020

வி.பி. ஜெயக்குமார்
மாநிலத் துணைத் தலைவர், இந்து முன்னணி
தொலைபேசி: 04639-232240,

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..

நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.

அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.

கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
வி.பி. ஜெயக்குமார்,
மாநிலத் துணைத் தலைவர்

ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியை ராக்கெட் ஏவு தளம் அமைக்க விண்வெளி விஞ்ஞானிகள் தேர்வு செய்து உள்ளனர்.

பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் உள்ளதால் ராக்கெட் எரிபொருளும் மிக குறைந்த அளவு தேவை ஆகையால் தான் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்துள்ளோம் என்று தலைமை விஞ்ஞானி பத்திரிக்கைக்கையார் சந்திப்பில் கூறியுள்ளார்.

சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் தற்போது இல்லை.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

தற்போது தெலுங்கானா கவர்னராக இருக்கும் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த போது குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்க தொடர்ந்து பாரத மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் 2019 வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பாரத பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அந்த கடிதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைத்தால் நாடு பலனடையும் என மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் தொடர்பாக திருமதி.சசிகலா புஷ்பா MP எழுப்பிய கேள்விக்கு விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்பின் 2019ல நிலம் தேர்வு செய்து அந்த நிலத்தை எடுப்பதற்காக மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கி இடம் ஆய்வுசெய்து இடத்தை தேர்வு செய்து இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தாகிவிட்டது.

ஆனால் இப்போது மக்களை தூண்டிவிட்டு அதுவும் அப்பாவி மீனவ மக்களை தூண்டிவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக இந்த திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்..

மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அரசு உயரதிகாரிகள் அவர்களும் எக்காரணம் கொண்டும் மணப்பாடு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மணப்பாடு ஊருக்கு செல்ல கூடாது. தேச வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி குந்தகம் விளைவிக்கும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஓட்டுக்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் அப்பாவி மினவர்களை‌ பகடைக் காயாக பயன்படுத்தி இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றார்.

2019 ஆண்டு ராக்கெட் ஏவு தளம் அமைக்க ஆதரவளித்த திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தற்போது இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருவது அவரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது…

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டாலும்,கொலை நடந்தாலும், விபத்து ஏற்பட்டு இறந்தாலும், அதனை காரணமாக வைத்து பிண அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ராக்கெட் ஏவு தளம் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்???

வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்,
ராக்கெட் ஏவு தளம் ஆதரவு குழு தலைவர்,
பரமன்குறிச்சி

சமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

14.10.2020

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் திருமங்கலங்குறிச்சி‌ ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைகுளம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் (ஆடு சம்பந்தமாக) பிரச்சனை எனத் தகவல் வந்தது .

இந்தத் தகவல் கிடைத்ததும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளும், ஜாதிக் கட்சி தலைவர்களும் பிரச்சினையை ஊதி பெரிதாக்கி ஆதாயமடைய நினைத்தனர்
ஊடகங்களும் தங்கள் பங்குக்கு அதில் விளம்பர விளையாட்டை நடத்தினர்.

பிரச்சினை என்றால் இரு தரப்பையும் சந்தித்து பேசி அதை சீர் செய்ய வேண்டும். ஆனால் வந்த அரசியல்வாதிகள் உட்பட அத்தனை பேரும் தங்களுக்கு எது ஆதாயமோ அதை மட்டுமே செய்தனர்.

இந்நிலையில் இதில் உண்மை என்ன என்பதை கண்டு அறிய இந்துமுன்னணி தீர்மானித்தது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P.ஜெயக்குமார் அவர்கள் உண்மை நிலவரம் கண்டறிய நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்டவர் பால்ராஜ் என்பவர் . அவரது மகன் கருப்பசாமி.

தகப்பனார் அங்கு இல்லாத காரணத்தால் மகன் கருப்பசாமியிடம் பேசினோம்.

“எங்கள் ஊரில் கோவில் கொடை , விழா மற்றும் சுடுகாடு அனைத்தும் ஒன்றுதான்.
சாதி மற்றும் அரசியல் கட்சிக் கொடிகள் ஊரில் கிடையாது”, என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் அவர்களின் அண்ணன் திரு.தங்கபாண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்.

இரண்டு‌ பேரையும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் சந்தித்தோம். அவர்கள் ,”இந்த சம்பவம் எங்க ஊருக்கு ஒரு திருஷ்டி” எனக் கூறினார்கள்.

இந்த பிரச்சினையை இத்துடன் ‌முடிவுக்கு கொண்டு வருவதுடன், இதுபோல சம்பவம் இனி எங்கள் பகுதியில் நடை பெறாது என்று உறுதி படக் கூறினார்கள்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் பேசிய போது, “எங்கள் வீட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் சொந்த வீட்டிற்கு வந்து செல்வது போல் வருவார்கள்.இன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் பத்துபேர் வேலை செய்கின்றார்கள்.
எவ்வித மன பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக உள்ளதாக” ஊராட்சி மன்ற தலைவர் மனைவி அவர்கள் கூறிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தது.

ஒன்றாகக் கூடிவாழும் மக்களிடம் திட்டமிட்டு பிரிவினை உருவாக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சுயநல முகத்தை உணர்த்திவிட்டு எக்காலத்திலும் இந்துக்கள் பிரியக்கூடாது. ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை கூறி, இந்துமுன்னணி என்றும் உடனிருக்கும் என்ற உறுதிமொழி அளித்து வந்தனர் பொறுப்பாளர்கள்.

இந்து முன்னணி சார்பில் பார்வையிட்டு பேசவந்த இந்து முன்னணி மாநில துணைத் தலைவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் T.K.R.ராமச்சந்திரன் உடன் சென்றனர்.

இந்துக்களின் நலன் காக்கும் பணியில் என்றும் இந்துமுன்னணி முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு இது.

போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர  ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு – கடலூர் சம்பவத்திற்கு இந்துமுன்னணி கண்டனம்

01.05.2020

பத்திரிகை அறிக்கை

வி பி ஜெயக்குமார் இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம்

வணக்கம்!
இன்று காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு.

இதனுடைய விளைவாகத்தான் இதுபோன்ற அவமதிப்பு செயல்கள் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்று நடவாது இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவமதித்த நபரை உடனடியாக கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும் இந்த தவறான செயலை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட நினைக்கின்ற நபர்கள், கலவரத்தை தூண்டுகிற மாதிரி வீடியோ பதிவிட்ட அந்த நபர் மீதும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

காவல்துறை எடுக்கின்ற அமைதி நடவடிக்கைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாறு இந்து முன்னணி வேண்டிக் கொள்கிறது.

இன்று கொரோனா தீ நுண் கிருமியின் கொடூரத்தால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற இந்த காலகட்டத்தில் நாம் எல்லோரும் பொறுமையாக இருந்து நிதானமாக சிந்தித்து எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அவலமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்குள் ஜாதி பிரச்சனையால் மேலும் அல்லல் ஏற்படுத்தாமல் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்!! தமிழகத்தை காப்போம்!!

தாயகப் பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
‌‌

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன – ஆட்சியருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
மாநில துணைத் தலைவர்
‌இந்து முன்னணி

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தூத்துக்குடி.

ஐயா :
தூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகர் 1 ஆம் தெருவில் உள்ள மசூதியில் மாலை 7.30 மணிக்கு அரசு பிரப்பித்துள்ள 144 வழிமுறைகளுக்கு மாறாக கூம்பு ஒலிபெருக்கியில் (கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ள நிலையிலும்) அழைப்பு விடுத்து நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது , அதுமட்டும் அல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவும் திரட்டப்படுகிறது, விசாரித்தால் “மைக் செக்” என்று கூறுகிறார்கள்.

அதே போல் பிரையன்ட் நகர் 9 ஆம் தெருவில் உள்ள இம்மானுவேல் சர்ச்சில் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது, தாசில்தார் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தும், கூட்டு பிரார்த்தனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனால் தூத்துக்குடி சிவன் கோவில் வாசலை திரை போடு மூடியுள்ளனர், மாவட்ட நிர்வாகத்திடம் சுவாமியை மறைக்க வேண்டாம் திரையை எடுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு , மீ.கா. தெருக்களில் சுமார் 40 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பர்மா காலனி, செல்வநாயகபுரம் பகுதியில் வாங்கு ஓதுவதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலே கூறியுள்ள விடயங்களுக்கு தாங்கள் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

சென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்

21.04.2020

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்!

இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.
கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது!

எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..

டெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.

முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.

சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.

கிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!

எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.
கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

உங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.

தமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி
9443382380

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்

வழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

எனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.