Monthly Archives: January 2019

ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.

திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
21-1-2019

பத்திரிகை அறிக்கை

அநாகரிமாக, தேசவிரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இதுபோன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

தேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது. அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

இராம கோபாலன்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

இதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்

நேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.

இந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,

இந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா ? என்று பல கருத்துக்களை கூறினர் )

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்

இந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.

கொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.

இந்துஆட்டோ முன்னணி ஓட்டுனர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் தேனி நகர் இந்துமுன்னணியின் சார்பாகவும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் சார்பாகவும் தேனி ஆனந்தம் ஆட்டோ நிலைய உறுப்பினர்களுக்கு அமைப்புசாரா ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக நல திட்ட அடையாள அட்டை ஒவ்வொரு (33 பேருக்கு) உறுப்பினர்களுக்கும் தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணி சார்பாக பெற்றுத்தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திரு. ராதாகிருஷ்ணன் கூடுதல் தொழிலாளர் ஆணையர் திருச்சிராப்பள்ளி அவர்களும்,திரு ஆர்.ராஜ்குமார் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் தேனி அவர்களும்,மற்றும் நமது தேனி மாவட்ட இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் திரு உமையராஜன் ஜி அவர்களும்,இந்துமுன்னணி தேனி நகர தலைவர் ஆச்சி கார்த்திக் அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர தலைவர் திரு ரவிக்குமார் ஜி அவர்களும்,தேனி நகர் ஆட்டோ இந்துமுன்னணியின் நகர பொதுச்செயலாளர் திரு ரமேஷ் ஜி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் தொழிலாளர் ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சி..