Category Archives: நெல்லை கோட்டம்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.

27.06.2020

வி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம்

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

இரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள் ?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா ?

இந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா?

தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?

இன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் ?

குற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் ?

திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் ?

முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா ?

அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா?

மரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே

சாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது

இரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம்

V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணை தலைவர்

2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.628213
9443382380

பெறுநர் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

ஐயா வணக்கம்,

கடந்த மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத் தலைமை பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் பகுதியை சார்ந்த அரசு மருத்துவர் Dr.பாஷில் என்பவர் கலந்து கொண்டு ஊர் திரும்பி உள்ளார். அவருடன் காயல்பட்டணத்தை சேர்ந்த ஷேக் முகமது என்பவரும் சென்று வந்துள்ளார் . ஷேக் முகமதின் மனைவி Dr.நசிலிம் பாத்திமா திருச்செந்தூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவர்).

சேக் முகமது அவர்கள் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தது அவருடைய மனைவி Dr.நசிலிம் பாத்திமா அவர்களுக்கு நன்கு தெரியும்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் இந்த சூழ்நிலையில் அந்த நோயின் தாக்கம் முழுவதும் ஒரு மருத்துவராகிய இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் இவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அவர்களுடைய மருத்துவப் பணியைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.இது மன்னிக்க முடியாத குற்றம்.

நம் பாரத பிரதமர் அவர்கள் பல முறை தொலைக்காட்சி வாயிலாக மக்கள் முன் இந்த கொடிய நோயின் உடைய தாக்கம் குறித்தும் பல முன்னேறிய நாடுகள் இந்த நோயினால் படும் திண்டாட்டம் குறித்தும் விளக்கம் கொடுத்து மக்களை சுயக்கட்டுப்பாடு உத்தரவு மூலம் வீட்டிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தினார். மேலும் வெளியூர் சென்று வந்தவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அனைவரையும் பரிசோதனை மேற்கொள்ளவும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினார்.

அதனையும் மீறி இந்த இரண்டு மருத்துவர்களும் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

ஒரு பாமர மக்கள் கூட இந்த நோயின் கொடுமையை புரிந்துள்ள இன்றைய சூழ்நிலையில் இவர்கள் வெளியே வந்து மருத்துவம் பார்ப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

ஒரு நாளைக்கு எத்தனை பொதுமக்களை இவர்கள் சந்திக்க நேர்ந்திருக்கும், இவர்கள் மூலம் எத்தனை பேருக்கு அந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு அந்த அறிகுறி தென்படாமல் இருந்தாலும் அவர்கள் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பரவும் என்பது மருத்துவத் துறையில் இருக்கும் இவ்விருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.

ஆனால் இவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறு பணியை தொடர்ந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அரசாங்கமே அந்த மாநாட்டிற்கு சென்று வந்த பயணிகளின் விபரங்களை வைத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது. இந்த இரண்டு மருத்துவர்கள் செய்த தவறினை வேறு யாரும் செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இவர்களுடைய மருத்துவர் சான்றையும் (degree certificate) அவர்கள் மருத்துவம் பார்ப்பதற்கான அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யுமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

கோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்
#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது

நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

11.10.18

நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்துமுன்னணி மாநில தலைவர் திரு. #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
1. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இயக்க வேலைகளை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்டல பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

2.மேலும் விவசாயி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் மானத்தை தலைநகரில் வாங்கிய அய்யாக்கண்ணு திருச்செந்தூர் கோவிலில் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விதத்தை கண்டித்தார்.
3. ஈவேரா பிரச்சனையில் வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளை கண்டித்தார்.
4. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

தாணுலிங்க நாடார் நூற்றாண்டு நிறைவு விழா ரதயாத்திரைக்கு தடை

                     நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும் என முதலமைச்சர் எம் ஜி ஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னது யார் ? எப்போது ? ஏன் தெரியுமா ?

மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில்  முதலமைச்சராக இருந்தவர் எம் ஜி ஆர்…கலவரத்தை நிறுத்தும் விதமாக அவர்  சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை. அப்போது அக்கினி பிழம்பாக கொதித்து போனார் இந்துக்களின் காவலர் அய்யா தாணுலிங்க நாடார் …

நான் முதலமைச்சர் என்றும் தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம்  ,சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ,மொழி எல்லை போரில் தலைமை தாங்கி.MPயாக ,
MLA வாக ,எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர்  என்பதை இப்போது அறிந்தேன் என்னுடன் மோதியது எனக்கு  இணையான தலைவரே  பெருமை  படுகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பதிவுசெய்தவர் முதலமைச்சர் எம்ஜிஆர்.

பொதுமேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபொது  படியே  என்னை இறைவன் அழைக்கிறான் என்று சொல்லி உயிர் விட்டார் அய்யா தாணுலிங்க நாடார் (தன் இறப்பை தானேஅறிவித்தவர் ) .  புண்ணியம் செய்த உயிர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள்.
தன் இறுதி மூச்சு வரை இந்துக்களுக்காக் போராடியவர்.

அப்படி பட்ட மாவீரரின் நூற்றாண்டு நிறைவுவிழா ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  இந்து இயக்க தலைவர்களையும் 800 க்கும் மேற்பட்ட இந்துக்களையும் கைது செய்ததை கண்டித்து

இன்று 27/01/2016 புதன்கிழமை  மாலை 4.00 மணிக்கு
மாவட்ட ஆட்சியாளர்  அலுவலகம் , நாகா்கோவில்,
முன்பு வைத்து தமிழக அரசையும் தடை ஏற்படுத்திய  காவல்துறையையும் கண்டித்து சங்கபரிபார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து இந்துமுன்னணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார்  கநாடார் நூற்றாண்டுநிறைவுவிழா  ரதயாத்திரை தடுத்துநிறுத்தி  800-யஅது மேற்பட்ட இந்து இயக்க தலைவர்களையும் பொதுமக்களையும் கைது செய்த காவல் துறையை கண்டித்து மாவட்ட அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4மணிக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு வைத்து நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்தை விளக்கி இந்து இயக்க தலைவர்கள்  இந்துமுன்னணி மாவட்ட தலைவர் மிசா.சோமன் , மாநிலதலைவர் டாக்டர்.அரசுராஜா ஆகியோர் கண்டனஉரையாற்றினர்கள்.ஆர்பாட்டத்தில் 900-ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியாளரை  சந்தித்து மனு கொடுக்கபட்டது மனுவில்
1.திட்டமிட்டபடி ரதயாத்திரை நடத்துவோம்
2.ரதயாத்திரை தடுத்தால் அணைத்து ஒன்றியத்திலும் ஆர்ப்பாட்டம் ,மறியல்,அதையும் மீறி கைதாகவும் தயார் .
3.அதற்கும் ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் பந்த் நடைபெறும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

image

ஏர்வாடி பாகிஸ்தானா ?

ஏர்வாடி – பாகிஸ்தானா ??

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா    ஏர்வாடியில் உள்ள LNS புரம் என்ற இடத்தில் வைத்த விநாயகர் சிலையை முஸ்லிம்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்குநேரி DSP அவர்கள் கோவிலுக்குள் ஷீ (செறுப்பு) காலுடன் சென்று விநாயகர் சிலையை அகற்றினார்.

மேற்படி அதிகாரியின் இச்செயல் இந்து க்களின் மனதை புண் படுத்தும் விதமாகவும் இந்து தெய்வத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது மேற்படி அதிகாரியை கண்டிக்கும் வகையில் மாலை முதல் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து நமது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஆயினும் விநாயகர் திருமேனியை திரும்பத் தரும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என மக்கள் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஏர்வாடி உள்ளிருப்பு  உண்ணாவிரத போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் .அரசுராஜா அவர்கள் நேரில் வந்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நாங்கள் எங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டோம் என உறுதி அளித்தனர்.

போராட்டம் தொடர்வதால் பதட்டம் நீடிக்கிறது.

image

image

சதுர்த்தி ஆலோசனை கூட்டம் – நாகர்கோவில்

குமரி மாவட்டம் நாகர்கோவில் நகர இந்துமுன்னணி விநாயகர்சதுர்த்தி விழா 5வது ஆலோசனைகூட்டம்  பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

image

மண்டலப் பொதுக்குழு – மார்ச் 8 – (தெற்கு மாவட்டங்கள்)

நெல்லை,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டலப்  பொதுக்குழு  மார்ச் 8 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெறும்

.siva3.jpg

அரசுப்பள்ளியில் மதமாற்றம்

அரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.

நெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி  அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….

DSC_0198DSC_0201