Tag Archives: இந்து விரோதம்

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? – இணைவீர் இந்துமுன்னணி

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை?

இது அரசியல் கட்சி அல்ல –
இது இந்துகளுக்கான அமைப்பு

1. நமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க

2. இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க

3. இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க

4. நம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க

5. வேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த

6. நம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட

7. பள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க

8. கோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த

9. கோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க

10. தினமும் நமது கிராம கோவில்களில்
ஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…

11. நமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.

12. கட்சியால் பிளவு பட்டாலும்
மதத்தால் ஒன்று படுவோம்

13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள

நாம்
நமது ஊர் கோயில்களில்
நாம் வாரந்தோறும் சந்திக்க…..
இணைவீர்…..இந்து முன்னணியில்…

தேசம் காக்க, தெய்வீகம் காக்க

தர்மம் காக்க அதர்மம் அகற்ற
இந்துமுன்னணி
தமிழ்நாடு

தொடர்புக்கு

hmrss1980@gmail.com

9047027282

வீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .

14-8-2019

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.

அந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.

ஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..?

3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா? இது மதத்தின் அடையாளமாகவில்லையா? இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன?

4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்?!

7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.

எனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்