Tag Archives: தமிழ்நாடு

இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

07.08.2020

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது.

இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக்கூடாது.

எனவே நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாக பேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

9 ம் தேதி (ஞாயிறு) அன்று களமிறங்குவோம். நமது பலத்தை காட்டுவோம்.

அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும். மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)

நமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல்படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.

நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக.

வணக்கம்

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் DGP க்கு கடிதம் – சட்டவிரோத போராளிகளினுடைய PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யவேண்டும்.

சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய , மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது .

இந்த போராட்டங்களை இனிவரும் காலங்களில் ஓரளவுக்கு கட்டுபடுத்த வேண்டுமானால் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்படும் நபர்களின் பெயர் விபரங்களை CCTNS பதிவேட்டில் எற்றினால் பிற்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு , கடவுசீட்டு , விசா , தனியார் துறை வேலைக்கான PCC சான்றிதழ் , NOC சான்றிதழ் , ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசியபணிகளில் அவர்களுக்கு தடை ஏற்ப்படும் .

எனவே PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யப்படவேண்டும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதற்கு பயந்து தவறான போராட்ட களத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கமாட்டார்கள் .

ஆகவே தாங்கள் விரைந்து போராட்டத்தில்ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழகத்தை மீண்டும் அமைதி பூங்காவாகமாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் .

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் இந்துமுன்னணி என்றும் பக்க பலமாய் இருக்கும்

அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .

பாதுகாக்கும் காவல் துறைக்கு ஒரு பாதிப்பு என்றால் எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?

அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும் . ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?

அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே…!
பொறுத்தது போதும் .

காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள், என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.

காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ….
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!

இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா? என்று புரியவில்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் .
#இந்துமுன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .

உங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றோம்…..