Tag Archives: #இஸ்லாமியர்கள்

தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்

மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்

வணக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.

மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.

மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக DGP அவர்கள்

தாயகப் பணியில்

V.P. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன – ஆட்சியருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
மாநில துணைத் தலைவர்
‌இந்து முன்னணி

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தூத்துக்குடி.

ஐயா :
தூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகர் 1 ஆம் தெருவில் உள்ள மசூதியில் மாலை 7.30 மணிக்கு அரசு பிரப்பித்துள்ள 144 வழிமுறைகளுக்கு மாறாக கூம்பு ஒலிபெருக்கியில் (கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ள நிலையிலும்) அழைப்பு விடுத்து நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது , அதுமட்டும் அல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவும் திரட்டப்படுகிறது, விசாரித்தால் “மைக் செக்” என்று கூறுகிறார்கள்.

அதே போல் பிரையன்ட் நகர் 9 ஆம் தெருவில் உள்ள இம்மானுவேல் சர்ச்சில் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது, தாசில்தார் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தும், கூட்டு பிரார்த்தனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனால் தூத்துக்குடி சிவன் கோவில் வாசலை திரை போடு மூடியுள்ளனர், மாவட்ட நிர்வாகத்திடம் சுவாமியை மறைக்க வேண்டாம் திரையை எடுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு , மீ.கா. தெருக்களில் சுமார் 40 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பர்மா காலனி, செல்வநாயகபுரம் பகுதியில் வாங்கு ஓதுவதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலே கூறியுள்ள விடயங்களுக்கு தாங்கள் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

போலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்

15/04/2020

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
தூத்துக்குடி.
9486482380

பெறுநர்
உயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

ஐயா வணக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

புதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

செங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது?

சட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்?

இவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகப் பணியில்

V.P.ஜெயக்குமார்
15/04/2020
பரமன்குறிச்சி

நகல்
1) உயர்திரு தமிழக DGP அவர்கள்
2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கேள்வி??

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் நேற்று (08/04/2020) நம் பாரத பிரதமர் அவர்கள் அனைத்து எதிர் கட்சி தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் திமுக கட்சி சார்பாக பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்கள் பங்கேற்றார்.

அப்போது பிரதமரிடம் அவர், சிலர் கொரோனா நோய் தொற்றை மதச்சாயம் பூசுவதாகவும் தாங்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்கிறது.

அதேசமயம் வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் வந்த 11 நபர்கள்
[அவர்களின் பெயர் விபரங்கள்: ஏ. கம்ரன் இஸ்லாம்.(19),ஏ. தன்வீர் ரெய்ஹாகான் (26),எஸ் .மனீர்ஹாசன்(19),ஏ. சுலைமான்(36).,கே. அப்துல் ஹாலீக்(59)., ஹெச். கமால்பப்ரீ(32).,சோ. அப்துர் ரசாக்(62)., எஸ். மொக்தர் அலி(59).,
ஓ .ரபியுல் ஹாசி(26)., ஏ.சம்சுல்லாஹ்(66)., ஷபின் மத் மத்(43),]

டெல்லி தப்லிக் மத மாநாட்டில் கலந்துகொண்டு அதன் பின்னர் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அடியானூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பதினொரு பெயரையும் கைது செய்து விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்தல் கொரோனா வைரசை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் திண்டுக்கல் வந்தனர்? வங்காளதேசத்தில் இருப்பவர்களுக்கும் திண்டுக்கல்லில் இருப்பவர்களுடன் என்ன தொடர்பு?? அந்தத் தொடர்பு உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டாமா?? தமிழக அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்தால் பல உயிர் பலிகள் ஏற்படும் அல்லவா??

மதச்சார்பின்மை மீது பெரும் அக்கறை உள்ள திமுக முன்னாள் அமைச்சர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும் தமிழகத்தின் மீதும் பெரிதும் அக்கறை இருந்தால் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்த பயப்படுவது ஏன்??

இஸ்லாமியர்கள் மீது பெரிதும் அக்கறையோடு அவர்கள் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு கட்சி உங்களுடைய திமுக கட்சி, அவ்வாறு இருக்கையில் உங்களுடைய கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதனை உங்களால் வலியுறுத்தி பேச முடியுமா??

அவ்வாறு தங்களால் சொல்ல முடியவில்லை எனில் இதில் மதரீதியாக செயல்படுவது நீங்கள்தான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வீர்களா?? அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கிறதா??

என்றும் தாயக பணியில்

V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.
9486482380

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்

நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.

நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இருக்க செந்தில் ஆண்டவன் அருள் புரிவார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரிவினைவாத அரசியலை கைவிட்டு , மத உணர்வை புறந்தள்ளி, துளியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.

அவ்வாறு மத உணர்வு உள்ளவர்கள்தான் சிகிச்சைக்கு வர மறுக்கிறார்கள்.

அந்தத் தலைவர்களிடம் நீங்கள் பேசி மேலும் இந்த கொடிய நோய் பரவாமல் இருக்க, தடுக்க முயற்சி செய்யலாம் அல்லவா??

ஒரு இஸ்லாமியர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உறவினர் மற்றும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மதச்சார்பின்மை பேசும் நல்லவர்கள், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் ஏன் இந்த முயற்சி எடுக்க கூடாது??

தனிமையில் இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல உலக மருத்துவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். இதை ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஒரு பதிவு எனக்கு வந்தது அதில் ஒரு இஸ்லாமிய டாக்டர் அந்த நோய் எப்படி கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவாக சொல்லி இருந்தார். அந்த பதிவை நான் பலருக்கும் பகிர்ந்துள்ளேன். அவர் பெயர் டாக்டர் பீர்மைதீன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனிபுறிந்தவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரும் நாட்டில் உள்ளனர் .

மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள்தான் பார்க்கின்றீர்கள். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பிரிக்கின்றனர். இந்த பிரிவினை வருங்கால இந்தியாவுக்கு நல்லதல்ல.

இன்று எங்கள் ஊரில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்! எங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காயல்பட்டினத்தில் துப்புரவு பணிக்கு செல்கிறார்கள் அவர்களை திமுக பிரமுகர்கள் அங்கு போகக் கூடாது என்று தடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதற்கு காரணம் யார்? காயல்பட்டினத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பஷீர்.

டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மத மாநாட்டிற்கு சென்றுள்ளார் அவருக்கு கொடிய நோய் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

ஆண்டவன் அருளால் அவருக்கு நோய் வரக்கூடாது… ஆனால் அந்த டாக்டர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இஸ்லாமிய மத தலைவர்களிடம் உங்கள் வாதத்தை ஆணித்தரமாக வைத்து அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். அது தான் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்லது.

நன்றி வணக்கம்
பாரத் மாதா கீ ஜெய்!!

V.P. ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி 628213
9443382380