Tag Archives: temples

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு பாராட்டுக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடிதம்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2. தொலைபேசி : 044 28457676,
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

7.5.2020

உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,
முதன்மை செயலர் / ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை,
சென்னை 34.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணுவது குறித்த தங்களின் சுற்றறிக்கை அறிந்து மகிழ்ந்தோம்.

தங்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கண்டு, இந்து முன்னணி தங்களை மனதார பாராட்டுகிறது.

நமது திருக்கோயில்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் நோய் தொற்று ஏற்பாடாத வண்ணமும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் அளித்துள்ள சுற்றறிக்கை குறிப்புகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

அதே சமயம் பணியாளர்கள் நலனிலும், அவர்கள் பாதுகாப்பிலும் தாங்கள் காட்டியுள்ள அக்கறை மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த நோய் தொற்றிலிருந்து, உலகமும், நமது நாடும், தமிழகமும் மீண்டு, நல்ல நிலைக்குத் திரும்பி அனைவரும் நலமுடன் வாழ்ந்திட இறைவன் திருவருள் புரிவாராக.

நன்றி.

என்றும் தேசியப் பணியில்,

(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345

இந்து நாகரிகம் – கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்;

“முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேருன்றிய காலம் அது.

அப்போதைய இந்து தன்னுணர்வு குறைந்தவனானான்.பிற மதத்தவரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.

முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக்கொண்டான். கிருஸ்தவர்களிடமிருந்து விவஸ்தையற்ற கட்டுப்பாடற்ற சுக போகங்களைக் கற்றுக் கொண்டான்.

தனக்கென்று ஒரு தனி நாகரிகம் இருப்பதை அவன் மறந்து போனான்.நாளடைவில் அந்த மறதி வளர்ந்திருக்கிறதே தவிர குறைவில்லை.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரிகத்தை போதிக்கவில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.

சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக்கூடாதது எது, என்பதிலிருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பதுவரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

மேற்கத்திய நாகரிகம் மத நாகரிகமல்ல. அது மதம் பிடித்த நாகரிகம்.

ஆனால் ஓர் இந்துவின் நாகரிகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.

அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது. கணவனை தேவனாக்கியது.மனைவியைத் தேவியாக்கியது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் “ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.

அப்படி ஒரு வீடு இருக்குமானால் அது அதிதிகளை(விருந்தினரை) வரவேற்று உபசரிப்பதற்காகவே”பிறரை வரவேற்று கருணை காட்டுவதே கோவில்.

ஆகவே இந்துவின் குடும்பம் ஒரு கோவில். அவன் தினமும் பூஜை செய்கிறான்.

காரணம் அன்றைக்கு தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறான். அவன் விபூதியை “திருநீறு ” என்கிறான்.

நாமத்தை “திருமண்” என்கிறான். அவற்றைத் தினமும் இ‍ட்டுக்கொள்கிறான்.

காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப்”போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.

அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம் “சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக்கூடாது” என்று சத்தியம் பூணுவதற்காகவே.

அவன் நீராடி உடலைக் கழுவுகிறான். பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான். நான் குறிப்பிடுவது சரியான-நல்ல இந்துவை.

இந்து சமுதாயம் மறந்து விட்ட நாகரிகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.

நமது நாகரிகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.

அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம். இந்து நாகரிகம் குழந்தை பிறந்தது முதல் சாகும்வரை அதற்கு வழி காட்டுகிறது…

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் – சமுதாய சமர்ப்பண தினம் – செயலையும், செல்வத்தையும் தந்து தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

இந்து தர்மத்தையும் , தேசத்தையும் காக்கும் பணியை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை, நிலங்களை, குளங்களை மீட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிறித்துவ மோசடி மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது .

பிரிவினைவாதிகளால் தேசத்திற்கு ஆபத்து நேரிடும் போதும் , இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் போதும் நேரிடையாக களத்தில் இறங்கி போராடிவருகிறது .

தன்னலம் கருதாத பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கமாக இந்து முன்னணி இயங்கி வருகிறது.

இதுபோன்று பல்வேறு வகையில் இந்து தர்மத்தை பாதுகாக்கக்கூடிய பணிகளை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தங்களைப்போன்ற நல்லோர்களின் ஆதரவைக் கொண்டு இந்து தர்மத்தைக் காக்க இந்துமுன்னணி பாடுபட்டு வருகிறது.

இந்துமுன்னணியின் முதல் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினத்தை சமுதாய சமர்ப்பணதினமாக கொண்டாடி வருகிறோம் .

நாம் நமது சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .

எனவே , தங்களது ஆக்கப்பூர்வமான செயலையும், செல்வத்தையும் தந்து இந்த தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

தாங்கள் சமர்பிக்கும் நிதி….

1. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதியில் இயங்கி வருகின்ற பாரதியார் குருகுலம் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கின்ற 76 குழந்தைகளின் படிப்பிற்கும், பராமரிப்பிற்கும் செலவிடப்படுகிறது.

இவர்களுக்கு உணவு அளிக்க விரும்புவோர் தாங்கள் அளிக்கும் நிதியை Bharathiyar Gurukulam Trust என்னும் பெயரில் DD / Check ஆகவும் அளிக்கலாம்.

(ஒரு வேளை உணவு செலவு ₹2000, ஒரு நாள் உணவு செலவு ₹5000, ஒரு மாத உணவு செலவு ₹ 1,50,000)

2 . இந்து சமுதாயத்திற்காக இந்து முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேரமாக பணியாற்றும், முழு நேர ஊழியர்களின் அடிப்படை செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. 84 முழுநேர ஊழியர்கள் தர்மம் காக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களை பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

3. குழந்தைகளுக்கு நமது இந்து தர்மத்தை போற்றும் பண்பாட்டு வகுப்புகள் நடத்த செலவிடப்படுகிறது.

4. கோசாலைகளுக்கு வரும் வயதான பசுக்களை பராமரிக்க செலவிடப்படுகிறது.

5. இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக ஜக்கத் என்ற பெயரில் தனது வருமானத்தை கொடுக்கிறார்கள். கிறிஸ்துவர்களும் தனது வருமானத்தில் தசமபாகம் எனும் பெயரில் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக கொடுக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தை மேம்படுத்த ஒவ்வொரு இந்துவும் இயன்றதை செய்வோம்.

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? – இணைவீர் இந்துமுன்னணி

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை?

இது அரசியல் கட்சி அல்ல –
இது இந்துகளுக்கான அமைப்பு

1. நமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க

2. இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க

3. இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க

4. நம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க

5. வேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த

6. நம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட

7. பள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க

8. கோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த

9. கோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க

10. தினமும் நமது கிராம கோவில்களில்
ஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…

11. நமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.

12. கட்சியால் பிளவு பட்டாலும்
மதத்தால் ஒன்று படுவோம்

13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள

நாம்
நமது ஊர் கோயில்களில்
நாம் வாரந்தோறும் சந்திக்க…..
இணைவீர்…..இந்து முன்னணியில்…

தேசம் காக்க, தெய்வீகம் காக்க

தர்மம் காக்க அதர்மம் அகற்ற
இந்துமுன்னணி
தமிழ்நாடு

தொடர்புக்கு

hmrss1980@gmail.com

9047027282

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்