Monthly Archives: March 2019

இந்து ஓட்டு யாருக்கு ..? – இந்து விழிப்புணர்வு கூட்டம்- மாநிலத் தலைவர் அறிக்கை

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.. 23.03.19.

தேர்தல் தொடர்பாக…

அன்புடையீர் வணக்கம்.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது பாரதநாடு. ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் வாக்களிப்பதின் மூலம் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாம் அளிக்கப்போகின்ற வாக்கு நம் நாட்டை, நம் மக்களை பாதுகாக்க வளர்ச்சி அடைய செய்ய இருக்கிறது.

இந்த முறை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்து சமுதாயம் ஒற்றுமையுடன் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகம் வளமானதாக மாறும். தீயவர்கள் வெற்றி பெற முடியாது.

நாடு முழுவதும் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மதசார்பற்ற அரசியல் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது, அதுவும் தமிழகத்தில் கேட்டகவே வேண்டாம் முஸ்லீம் திருமண வீட்டிற்கு சென்று இந்து திருமண முறையை இழிவு படுத்தி பேசுவார் ஒரு தலைவர். இன்னொரு தலைவர் முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்து கோவில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று பேசுவார். மற்றும் ஒரு தலைவர் திருப்பதி ஏழுமலையான் சக்தி அற்றவர் என்ற ரீதியிலே பேசுவார். ஸ்ரீ ராமர் ரதயாத்திரை நடந்தால் பயங்கரவாத அமைப்புகளோடு சேர்ந்து மதசார்பற்ற கட்சி தலைவர்கள் தடுப்பார்கள்.
ரம்ஜான் கிருஸ்த்மஸ்க்கு வாழ்த்து சொல்லுவார்கள், விழா எடுப்பார்கள் ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை 1 போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள்.

சமீபத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக அடுத்த 6 மணி நேரத்தில் திருபுவனம் இராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த மதசார்பற்ற கட்சி தலைவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. தமிழகத்தில் இந்து இயக்க நிர்வாகிகள் குறிப்பிட்ட மத பயங்கரவாதிகளால் தாக்கி கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எப்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் மதசார்பற்ற தலைவர்கள் அமைதியாகி விடுவதோடு தேர்தல் நேரத்தில் இதே கொலை கும்பலோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்துக்களுக்கு மதசார்பற்ற வகுப்பு எடுப்பார்கள்.

அரசியல் கட்சிகளின் இந்த இந்து எதிர்ப்பு நிலையை மாற்ற இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து இந்து சமுதாய விழிப்புணர்வு பணியை செய்து வருகிறது. இந்து முன்னணி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்ல என்றாலும் தேர்தல் நேரத்தில் நாம் ஒற்றுமையோடு வாக்களிக்க வேண்டும் என்பதை தொடர் பிரச்சாரமாக செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மெல்ல மெல்ல தமிழகத்தின் நிலை மாறி தமிழகத்தின் பல இடங்களில் இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

கோவில் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், நாட்டுப் பசு பாதுகாப்பு, சேவை மையம், கல்வி நிலையங்கள் துவங்க சலுகை, மதமாற்ற தடைசட்டம், பயங்கரவாத அழிப்பு, தேச விரோத ஊடகங்கள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அனுப்பியுள்ளார்.

இந்த கோரிக்கை நிறைவேற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறித்தியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்,
இந்து ஓட்டு யாருக்கு ..? என்ற “இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்”
இந்து முன்னணி சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள், அன்னையர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், இந்து உணவாளர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்து ஓட்டு யாருக்கு..? ஊழியர் கூட்டங்கள்..

திருப்பூர் நாடாளுமன்றம் திருப்பூர் தெற்கு வடக்கு ஆகிய சட்ட மன்றங்களுக்கு
மார்ச் 26ம்தேதி மாலை 5.00 மணிக்கு திருப்பூர் வித்யாகார்த்திக் மண்டபத்தில் நடைபெறும்.

பவானி, அந்தியூர், பெருந்துரை, கோபி ஆகிய சட்டமன்றங்களுக்கு மார்ச் 31ம் தேதி காலை கவுந்தப்பாடியிலும் நடைபெறவுள்ளது.

கோவை நாடாளுமன்றம்,

27.3.19 மாலை 5.00 மணிக்கு வைஸ் திருமணமண்டபத்தில் சூலூர், பல்லடம் ஆகிய சட்ட மன்றங்களுக்கும்.,

29.3.19 மாலை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு தெற்கு ஆகிய சட்டமன்றங்களுக்கும்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு 31.3.19 அன்று மாலை பொள்ளாச்சியிலும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

அதில் சம்பந்தப்பட்ட ஒருவரும் தப்பிக்க விடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்ததை இன்று இந்து முன்னணி 20.3.2019 புதன் கிழமை நடத்தியது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:

* தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

* பெண்கள் வன்கொடுமையைத் தடுக்க காவல்துறை, நீதிமன்றம் துணை நிற்க வேண்டும். மனிதாபிமானமற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, மக்களிடையே நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையை குலைய வைக்கிறது.

* ஊடகம் முதலானவை, குற்றவாளிகளுக்கு எதிராக புகார் கொடுப்போரின் ஆதாரங்களை வெளியிடுவது, குற்றவாளியை காப்பாற்றுகின்ற முயற்சி மட்டுமல்ல, வழக்கை திசைத்திரும்பும் செயலும்கூட. இதுபோல் பாதிக்கப்பட்டு, புகார் கொடுத்தால், நாமும் சமூகத்தால் கேவலப்படுத்தப்படுவோம் எனப் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தங்களது டி.ஆர்.பி. ரேட் உயர்வதற்காக இதுபோல கீழ்த்தரமாக செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளிகளில், கல்லூரிகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்ற நிலை நீடிக்கிறது. உதாரணமாக, சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை! இதுபோல பல உதாரணங்கள் இருக்கின்றன!

* சின்னத்திரை, சமூக ஊடகங்கள் சமூக சீரழிவிற்கு வித்திடுகின்றன. அவற்றை முழுமையாக சென்சார் (தணிக்கை) செய்ய வேண்டும். சினிமா சென்சார், முன்போல இப்போது இல்லை, கடுமையான வரன்முறையை ஏற்படுத்த வேண்டும்.. மோசமான கருத்தை வெளியிடும் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும்.

* கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினம், முத்தபோராட்டம் போன்றவற்றை நீதிமன்றம், காவல்துறை துணிவோடு தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி, மாணவர்களை நல்வழி படுத்த தமிழக அரசு கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்த, ஆயுத போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் நகர்புற நக்ஸல்களையும், கிறிஸ்தவ என்.ஜீ.ஓக்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும், மேலும் அதில் தொடர்புடையவர்கள் பற்றி விசாரணையை முடுக்கி விட்டது மட்டுமல்ல, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

* பொள்ளாச்சியில் பெண்களை வன்கொடுமைப்படுத்தி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை, சிபிஐக்கு பூரண ஒத்துழைப்புக்கொடுத்த தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு  இந்து முன்னணியின் கோரிக்கைகள் -இராம. கோபாலன்

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
12-3-2019
பத்திரிகை அறிக்கை
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்து முன்னணி ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு சில கோரிக்கைளை முன் வைத்துள்ளது. அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை பத்திரிகையாளர்கள் பார்வைக்கு இத்துடன் அனுப்பி உள்ளோம்.
இந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட உதவிட ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள் :
ஆலயங்கள் பாதுகாத்திட..
புராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை, வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் முன்னுரிமை வழங்குக..
பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
நாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக..
நாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.
இந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..
சிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாகுபாட்டை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.
இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..
தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.
குடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மதுக்குடிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள் கொலை முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புகள் தடை செய்யப்படவில்லை., அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, முற்றிலும் பயங்கரவாதம் ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..
பொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்ட கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழிகாண வேண்டும்.
தேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிக்குத் தடை..
தேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..
பட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மதமாற்றத்தை தடை செய்க..
மதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதமாற்றுவதைத் தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
நீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..
நீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறைரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.
தேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..
தவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
ஆன்மீக நம்பிக்கையை காத்திடக..
ஐயப்பன் கோயிலில் வழிபாட்டில் தேவையில்லாமல் தலையீட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக கேரள இடதுசாரி அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும், ஐயப்ப வழிபாட்டில் ஆண், பெண் பாலின பாகுபாடு இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நெடுங்காலமாக இருந்து வரும் ஐதீகத்தை காத்திட உரிய நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
ஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..
நாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.
பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றிட நடவடிக்கை..
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஓரினசேர்க்கை குற்றம் இல்லை என்றும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமண செய்துகொள்ளலாம் என்றும், தகாத உறவு தவறில்லை என்றும் நமது பாரத பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாற்ற, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, நமது பாரம்பரிய பண்பாடு, நாகரிகம் காத்திட ஆவண செய்ய வேண்டும்.
கல்வியில்..
அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், தேசிய மொழியான இந்தி மொழியும் கற்பிக்க தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும் பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.
மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
இந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த
உங்களின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.
நன்றி, நல்வாழ்த்துகள்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)