Monthly Archives: August 2020

சேலம் சிவனடியார் தற்கொலை – இந்து முன்னணி மாநிலத் தலைவர் நேரில் பார்வை- நிலை குறித்து மாநில செயலாளர் VS செந்தில் குமார் அறிக்கை

25.08.2020
சிவனடியார் தற்கொலை – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்ட விவரங்கள் குறித்து மாநிலச் செயலாளர் திரு.V.S.செந்தில்குமார் அறிக்கை

சேலம் மாவட்டம் புளியம்பட்டி கிராமம் புல்லா கவுண்டம்பட்டி அக்ரகாரம் பஞ்சாயத்து குண்டக்கல் காடு என்ற பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் மைக்கேல் அந்தோணி என்ற காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து வாக்குமூலம் வீடியோ வாக பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திகள் சமூக வலைத்தளைங்களில் வந்து கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் அந்த சிவனடியார் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அவரது வீட்டிற்கு நேரில் சென்றார்கள்.
அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காணப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

அந்தப் பகுதி மக்கள் சிலர் மாநிலத் தலைவரை சந்தித்தனர்.
அங்குள்ள மக்கள் சொல்கின்ற விஷயங்கள் பல நமது மனதில் ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது.

அந்த ஊர் மக்கள் சொன்ன விஷயங்களின் அடிப்படையில், மாநிலத் தலைவரோடு உடன் சென்று விஷயங்களை சேகரித்த வகையில் கீழ்க்கண்ட விஷயங்களை அறிக்கையாக சமர்பிக்கிறேன் –
தாயகப் பணியில்

V.S.செந்தில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

1.அந்தப் தேவூர் – குண்டக்கல் காடு என்கிற பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது எனவும் அந்த பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றை கிறிஸ்தவர்கள் நடத்திக் கொண்டு அதன் மூலமாக இருக்கக்கூடிய புறம்போக்கு நிலங்களை எல்லாம் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கித் தருகிறோம் என்று கூறி பொய் சொல்லி மதம் மாற்றி அந்த பகுதியில் மதம் மாற்றப்பட்டவர்களை மட்டுமே திட்டமிட்டு குடியேற்றி வருகிறார்கள் எனவும் மக்கள் சொல்கிறார்கள்

2.இந்த நிலையில் தேவூர் காவல் நிலையத்திற்கு மைக்கேல் அந்தோனி என்ற உதவி ஆய்வாளர் இடம் மாறுதல் பெற்று வந்த அவர் கிறிஸ்தவத்தின் மீது ஆழமான நம்பிக்கை உடையவர், மதபோதகர் என்றெல்லாம் அறிந்து அவரை வைத்து, சிவனடியார் சரவணன் செயல்பாட்டை விரும்பாதவர்கள் தவறான, பொய்யான புகாரை கூறியுள்ளனர் என்று அங்குள்ள சிலர் கூறுகிறார்கள். (உதவி ஆய்வாளர் அவர்களின் முகநூல் பக்க விவரங்கள் அதை மேப்பிப்பதாகவே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. )

3.எழுத்துப்பூர்வமாக எந்தவித புகாரும் இல்லாமலேயே உதவி ஆய்வாளர் அந்தோணி தன்னிச்சையாக சென்று அங்கு சரவணனை அடித்து துன்புறுத்தி இருப்பதாக தகவல்கள் சொல்கிறார்கள்.

4.மேலும் அவர் அந்த சம்பவத்தன்று விடுமுறையில் இருந்திருக்கிறார் என்ற செய்தியை அறிகிறோம் .விடுமுறையில் இருக்கக்கூடிய ஒரு ஆய்வாளர் இந்த வேலையில் ஈடுபட்டார் என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனபதும் மக்கள் கருத்து.

5.மேலும் சிவனடியாரின் உறவினரென்று சொல்லிக் கொண்டு சிலர் அங்கு உள்ளனர். இவர்களை காவல்துறை நியமித்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

6.இந்த சந்தேகம் நமக்கே ஏற்படுகிறது ஏனெனில் தற்போது அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காணப்படவில்லை. அவர்களை வேறு எங்கோ , யாரோ அழைத்துச் சென்று விட்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள் . அதாவது கிட்டத்தட்ட கடத்தப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.

7.அங்கு சில காவலர்கள் மப்டியில் இருந்து கொண்டு வருபவர்களை மிரட்டுவதாகவும் மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கிறார்கள்.

8.மேலும் சில அரசியல்வாதிகள் தங்களது சந்துக்கடை (சட்டவிரோத டாஸ்மாக் – சாரயக்கடை) சீராக நடக்கவேண்டும் என்பதற்காகவும் , மணல் கொள்ளை தடையின்றி நடைபெறவேண்டும் என்பதற்காகவும் காவல்துறைக்கும், அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்த விஷயத்தை மூடி மறைக்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன..

9.சிவனடியார் மீது புகார் கொடுத்தவர்கள் மீது ஏற்கனவே கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் இந்த தற்கொலை விஷயத்தில் மிகப் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

10.பல சட்டவிரோத செயல்களுக்கு மறைமுகமாக காவல்துறை உதவி செய்வதால், காவல்துறை சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் எனது மக்கள் கருத்து .

இந்த தகவல்களின் அடிபடையில், தேவையெனில் இவற்றை விரிவாக விசாரிக்க இந்துமுன்னணியின் வழக்கறிஞர் பிரிவான இந்து வழக்கறிஞர் முன்னணி சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கலாம் எனவும்,

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்கவேண்டும், ஆகவே உண்மை நிலையை கண்டறிய விசாரணையை முதலிலிருந்து வேறு ஒரு துரையின் மூலம் நடத்தலாம் எனவும்

காவல்துறை அதிகார துஷ் பிரயோகம் செய்துள்ளதா என்பதை முறையாக விசாரிக்கவேண்டும் எனவும்

அரசு இந்த விஷயங்களை உடனடியாக கவனிக்காவிட்டால், உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கைக்குப் பிறகு அதன் அடிப்படையில் தீவிர போராட்டங்களை முன்னெடுபதைப் பற்றியும் ஆலோசிக்கலாம் எனவும் கூறி இந்த அறிக்கையை சமர்பிக்கிறேன்.
தாயகப் பணியில்

V.S.செந்தில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

தனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

21.08.2020இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறது.தமிழகத்தில் நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத் திட்ட பணிகளை தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்திருக்கிறது இந்து முன்னணி பேரியக்கம்.ஆகவே சமுதாய அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிட்டது. அந்த அடிப்படையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறாது, ஊர்வலங்கள் இருக்காது, சேர்ந்து சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு தற்போது மாண்பமை உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லியிருக்கிறது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.22 ம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரவர் ஏற்பாடுகளில் (கூட்டம் சேராமல்) அன்று மாலையே விநாயகர் திருமேனிகளை விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.அரசும், அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய் தொற்றானது அழியும். தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும்.தாயகப் பணிகளில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மாநிலத்தலைவர்

ஹிந்துக்களுக்கு அநீதி – விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை – துரோகம் விளைவிக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு – இந்துமுன்னணி கடும் கண்டனம் – திட்டமிட்டபடி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர்கள் வைக்கப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

13.08.2020விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை
இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர். மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது.விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு.தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு .ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.ஒடிசாவில் ஜகந்நாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து உச்சநீதி மன்றம் கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி அளித்தது. இதே நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுடன் நடத்த இந்து முன்னணி அரசை கேட்டுக்கொண்டது.ஆனால் தற்போது தமிழக அரசு ஹிந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில், இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி
நடக்கும் என்பதை இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.தாயகப் பணியில்காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

10.08.2020

கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடுமையான மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசும், மாநில அரசும் நிதி அளித்துள்ளது .

இந்த சமயத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் இந்து முன்னணியின் பணிவான கோரிக்கை

சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரண்டு பேருக்கு இலட்சக்கணக்கில் அனைத்து கட்சிகளும் பணம் வழங்கினார்கள் .தமிழக அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது .

அதேபோல மூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது இந்து முன்னணி கோரிக்கை

ஒருவேளை தமிழக அரசு அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்காவிட்டால், இதற்காக எதிர்கட்சி தலைவர் குரல் கொடுக்காவிட்டால், சிறுபான்மை மக்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? என்ற ஒரு கேள்வி எழும் அல்லது இன்னும் தேர்தல் எட்டு மாதம் தான் இருக்கிறது அந்த தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு நிதிஉதவி, அரசு வேலை தமிழக அரசு கொடுத்ததா என்ற ஒரு ஐயப்பாடு வரும்

ஆகவே நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

ஆகவே சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்திற்கு வழங்கியது போல நிதிஉதவியும், அரசு வேலையும் கேரளாவில் மண்சரிவு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்

மேலும் இதற்கு முன் கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கேரள அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனால் தற்போது தமிழக கூலி தொழிலாளர்களுக்கு கம்யூனிச கேரள அரசு 2 லட்சம் ரூபாய் தான் வழங்கியுள்ளது இது கண்டிக்கத்தக்கது.

அரசுகள் பாகுபாடு பார்க்காமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் மீது புகார் கூறும் அரசியல் கட்சிகள் இப்பொழுது பாராமுகமாக இருப்பது ஏன்?

*வி.பி.ஜெயக்குமார்*
*இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர்*
பரமன்குறிச்சி

இந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

07.08.2020

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது.

இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக்கூடாது.

எனவே நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாக பேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

9 ம் தேதி (ஞாயிறு) அன்று களமிறங்குவோம். நமது பலத்தை காட்டுவோம்.

அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும். மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டும். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)

நமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல்படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.

நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக.

வணக்கம்

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

ஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

03.08.2020

ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் அதே இடத்தில் கோவில் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. தற்போது நமது கனவு நனவாகப் போகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

மக்கள் அனைவரும் அன்றைய தினம் (ஆகஸ்ட் 5 ம் தேதி – 2020) காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்வோம்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த புண்ணிய தினத்தில் நாமும் பங்கேற்று ஸ்ரீ ராமனது அருளுக்கு பாத்திரமாவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

01.08.2020

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஆகஸ்ட் 31 வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த சமயத்தில் முழுமுதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இது இந்துக்கள் அனைவரது வீட்டிலும் கொண்டாடப் படும் விழா . விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி பேரியக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக, அதே சமயம் எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலங்கள் இல்லாமல் எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது.

கொரோனா காரணமாக பீதியிலுள்ள மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான்.

ஆகவே விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்துகொடுக்கவேண்டும்.

மேலும் மக்கள் அவரவர் இல்லங்களில் குறைந்த பட்சம் மஞ்சள் பிள்ளையாரையாவது வைத்து விநாயகர் பெருமானை வழிபட்டு இந்த கொடிய காலகட்டம் மாறிட மனமார பிரார்த்தனை செய்திடவேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்

மாநிலத்தலைவர்