Tag Archives: #கொரோனா

முதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்
இந்து முன்னணி பேரியக்கத்துடன் இணைக்கப்பட்டது.
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. தொலைபேசி : 044 28457676, 9841769852

த. மனோகரன்
மாநில தலைவர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.

பொருள்: ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க அனுமதி அளிப்பது வேண்டி.

தங்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் கொரானா நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க பலவிதமான வழிமுறைகளை கையாண்டதின் விளைவாக, தமிழகத்திலும், பாரதத்திலும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அரசு, பலவிதமான நிவாரண உதவிகள் செய்து வந்தாலும், பல லட்சம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடரும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் அளித்த நிவாரண உதவிகள் கிடைத்தாலும், ஆட்டோ பராமரிப்பு, அதற்குரிய தவணை தொகை மற்றும் குடும்ப செலவினங்கள் ஆகியன தொழிலாளர்களை பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

எனவே, ஆட்டோ இயங்குவதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறோம்.
நன்றி,

என்றும் தேசியப் பணியில்
த. மனோகரன்
மாநிலத் தலைவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி

16.05.2020
அனுப்புநர்:
C. P. சண்முகம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இந்து இளைஞர் முன்னணி
+919150359693
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்’சென்னை
பொருள்:இந்து இளைஞர் முன்னணி சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க
அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள்
மாணவர்களின் அழுத்தத்தைப்போக்கும் வகையில் ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்
இந்த ஆண்டுக்கான மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும், பயணச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்லூரிகளில் 50% கட்டணம் மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
இறுதியாண்டு முடிக்கும் அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும
வருகின்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்களை தயார்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளைப்போல அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
மாணவர்கள்
வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களுடன் கலந்துரையாட தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும்.
அரியர்” வைத்துள்ள மாணவர்கள் அரியரை முடிக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வங்கிக்கடன் பெற்றுள்ள மாணவர்களின் இந்த ஆண்டுக்கான தவணைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டின் தேர்வுகளில் கடினமான கேள்விகளை தவிர்க்கவேண்டும்.
ஒருசில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தற்போது நிலுவையிலுள்ள உதவித்தொகையை அரசு உடனே வழங்கிட வேண்டும்.
மற்றவர்களுக்கு வழங்குவதைப்போன்று மாணவர்களுக்கும் கொரோனாகால நிவாரணமாக நிதியுதவி வழங்கவேண்டும்.
நன்றி
நகல்
1.மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு.
2.உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு.
தாயகப்பணியில்
C.P.சண்முகம்
இந்து இளைஞர் முன்னணி

போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர  ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு – கடலூர் சம்பவத்திற்கு இந்துமுன்னணி கண்டனம்

01.05.2020

பத்திரிகை அறிக்கை

வி பி ஜெயக்குமார் இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம்

வணக்கம்!
இன்று காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு.

இதனுடைய விளைவாகத்தான் இதுபோன்ற அவமதிப்பு செயல்கள் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்று நடவாது இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவமதித்த நபரை உடனடியாக கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும் இந்த தவறான செயலை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட நினைக்கின்ற நபர்கள், கலவரத்தை தூண்டுகிற மாதிரி வீடியோ பதிவிட்ட அந்த நபர் மீதும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

காவல்துறை எடுக்கின்ற அமைதி நடவடிக்கைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாறு இந்து முன்னணி வேண்டிக் கொள்கிறது.

இன்று கொரோனா தீ நுண் கிருமியின் கொடூரத்தால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற இந்த காலகட்டத்தில் நாம் எல்லோரும் பொறுமையாக இருந்து நிதானமாக சிந்தித்து எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அவலமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்குள் ஜாதி பிரச்சனையால் மேலும் அல்லல் ஏற்படுத்தாமல் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்!! தமிழகத்தை காப்போம்!!

தாயகப் பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
‌‌

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளினால் நலிவடைந்துள்ள சிறு-குறு தொழில்சாலைகள் (MSME) மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றி அரசு விவேகத்துடன் செயல்படவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி. சுப்பிரமணியம் அறிக்கை

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் திரு.அந்தோனியோ குத்தரேசு ஒரு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் உற்பத்தியை நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும், நாட்டில் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

நமது இந்திய நாட்டில் ஊரடங்கு சமயத்தில் விவசாயம் சார்ந்தவைகளுக்கு கட்டுபாடுகள் இல்லாது விலக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் புதிய யுக்தியைக் கையாளுவது அவசியம்.

கொரோனா பாதித்த பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவான பகுதிகள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியான திட்டங்களை வகுக்கவேண்டும்.

அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.

உதாரணமாக பழுது பார்க்கும் கடைகள் நோய்த் தடுப்பு கட்டுபாடுகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.

சிறு-குறு தொழில் (உற்பத்தி) நிறுவனங்கள் முதலில் செயல்படத் துவங்கினால்தான் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட MSME துறைகள் முதலில் களமிறங்க வேண்டும்.

உற்பத்தி தொடர்ந்து நடைபெற அனைத்து விதமான வழிகளையும் ஆய்ந்து விவேகத்துடன் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கோருகிறது.

அதே சமயம் இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி, குறுகிய நோக்கத்துடன் சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராகவும், கலவரத்தை ஏற்படுத்தவும் ஒரு சிலர் திட்டமிட்டுலாதாகத் தெரிகிறது. அத்தகையவர்களை முதலிலேயே கண்டறிந்து கில்லி எரிய அரசு கவனாமாக செயல்படவேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் விடுக்கிறது.
தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை

24.04.2020

இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி
கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

இராம. கோபாலன்

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ! பாலிமர் தொலைக்காட்சி மிரட்டும் மத அடிப்படைவாத கும்பலை கைது செய்க – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

23.04.2020

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.

எதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்சியை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.

எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன்? என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

குறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா?

ஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

மிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

சென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்

21.04.2020

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்!

இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.
கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது!

எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..

டெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.

முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.

சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.

கிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!

எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.
கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

உங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.

தமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி
9443382380

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்

வழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

எனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.