Tag Archives: #கொரோனா

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கேள்வி??

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் நேற்று (08/04/2020) நம் பாரத பிரதமர் அவர்கள் அனைத்து எதிர் கட்சி தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் திமுக கட்சி சார்பாக பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்கள் பங்கேற்றார்.

அப்போது பிரதமரிடம் அவர், சிலர் கொரோனா நோய் தொற்றை மதச்சாயம் பூசுவதாகவும் தாங்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்கிறது.

அதேசமயம் வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் வந்த 11 நபர்கள்
[அவர்களின் பெயர் விபரங்கள்: ஏ. கம்ரன் இஸ்லாம்.(19),ஏ. தன்வீர் ரெய்ஹாகான் (26),எஸ் .மனீர்ஹாசன்(19),ஏ. சுலைமான்(36).,கே. அப்துல் ஹாலீக்(59)., ஹெச். கமால்பப்ரீ(32).,சோ. அப்துர் ரசாக்(62)., எஸ். மொக்தர் அலி(59).,
ஓ .ரபியுல் ஹாசி(26)., ஏ.சம்சுல்லாஹ்(66)., ஷபின் மத் மத்(43),]

டெல்லி தப்லிக் மத மாநாட்டில் கலந்துகொண்டு அதன் பின்னர் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அடியானூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பதினொரு பெயரையும் கைது செய்து விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்தல் கொரோனா வைரசை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் திண்டுக்கல் வந்தனர்? வங்காளதேசத்தில் இருப்பவர்களுக்கும் திண்டுக்கல்லில் இருப்பவர்களுடன் என்ன தொடர்பு?? அந்தத் தொடர்பு உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டாமா?? தமிழக அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்தால் பல உயிர் பலிகள் ஏற்படும் அல்லவா??

மதச்சார்பின்மை மீது பெரும் அக்கறை உள்ள திமுக முன்னாள் அமைச்சர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும் தமிழகத்தின் மீதும் பெரிதும் அக்கறை இருந்தால் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்த பயப்படுவது ஏன்??

இஸ்லாமியர்கள் மீது பெரிதும் அக்கறையோடு அவர்கள் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு கட்சி உங்களுடைய திமுக கட்சி, அவ்வாறு இருக்கையில் உங்களுடைய கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதனை உங்களால் வலியுறுத்தி பேச முடியுமா??

அவ்வாறு தங்களால் சொல்ல முடியவில்லை எனில் இதில் மதரீதியாக செயல்படுவது நீங்கள்தான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வீர்களா?? அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கிறதா??

என்றும் தாயக பணியில்

V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.
9486482380

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்

நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.

நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இருக்க செந்தில் ஆண்டவன் அருள் புரிவார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரிவினைவாத அரசியலை கைவிட்டு , மத உணர்வை புறந்தள்ளி, துளியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.

அவ்வாறு மத உணர்வு உள்ளவர்கள்தான் சிகிச்சைக்கு வர மறுக்கிறார்கள்.

அந்தத் தலைவர்களிடம் நீங்கள் பேசி மேலும் இந்த கொடிய நோய் பரவாமல் இருக்க, தடுக்க முயற்சி செய்யலாம் அல்லவா??

ஒரு இஸ்லாமியர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உறவினர் மற்றும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மதச்சார்பின்மை பேசும் நல்லவர்கள், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் ஏன் இந்த முயற்சி எடுக்க கூடாது??

தனிமையில் இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல உலக மருத்துவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். இதை ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஒரு பதிவு எனக்கு வந்தது அதில் ஒரு இஸ்லாமிய டாக்டர் அந்த நோய் எப்படி கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவாக சொல்லி இருந்தார். அந்த பதிவை நான் பலருக்கும் பகிர்ந்துள்ளேன். அவர் பெயர் டாக்டர் பீர்மைதீன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனிபுறிந்தவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரும் நாட்டில் உள்ளனர் .

மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள்தான் பார்க்கின்றீர்கள். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பிரிக்கின்றனர். இந்த பிரிவினை வருங்கால இந்தியாவுக்கு நல்லதல்ல.

இன்று எங்கள் ஊரில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்! எங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காயல்பட்டினத்தில் துப்புரவு பணிக்கு செல்கிறார்கள் அவர்களை திமுக பிரமுகர்கள் அங்கு போகக் கூடாது என்று தடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதற்கு காரணம் யார்? காயல்பட்டினத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பஷீர்.

டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மத மாநாட்டிற்கு சென்றுள்ளார் அவருக்கு கொடிய நோய் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

ஆண்டவன் அருளால் அவருக்கு நோய் வரக்கூடாது… ஆனால் அந்த டாக்டர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இஸ்லாமிய மத தலைவர்களிடம் உங்கள் வாதத்தை ஆணித்தரமாக வைத்து அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். அது தான் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்லது.

நன்றி வணக்கம்
பாரத் மாதா கீ ஜெய்!!

V.P. ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி 628213
9443382380

மாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு! விழித்திரு!! வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

தனித்திரு! விழித்திரு!!
வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்”
கொரோனா தடுப்பு –மக்கள் உதவி மையம்_- இந்துமுன்னணி
மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு வருகின்றனர். மார்க்கெட் மளிகை மருந்து போன்ற கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரானா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

இந்த முக்கியமான பிரச்சனையை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வீடு தேடி கொண்டு போய் சேர்க்கும் “தனித்திரு! விழித்திரு!! வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” என்ற சேவையை தமிழகம் முழுவதிலும் செய்ய இந்து முன்னணி முடிவு செய்திருக்கிறது.

மாநில தலைமை உதவி மையம் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டு அந்த அலுவலகத்தின் அலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும்.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறோம் தங்களுக்கு என்ன பொருள் தேவை என்பதை தெரிவித்தால் அலுவலக பொறுப்பாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள இந்து முன்னணி ஊழியர்கள்
மூலம் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று அந்த பொருட்களை உரிய நேரத்தில் பொதுமக்களிடம் கொடுப்பார்கள். பொருளுக்கான தொகையை பெற்றுக் கொள்வார்கள்.

இதனால் பொதுமக்கள் கடைகளில் சாலைகளில் பொது இடங்களில் கூறுவது தவிர்க்கப்பட்டு கொரானா பரவுவதை பெருமளவில்

முறியடிக்க முடியும்.

ஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா

கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .

பாரதப் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்துமுன்னணி மனதார பாராட்டுகிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள். அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.

எனவே இதைத் தடுப்பது மிக மிக அவசியமாகிறது.
தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால், நாமாக எதையாவது செய்து அது மேலும் சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதை இந்துமுன்னணி இயக்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

அதே சமயம் அரசே இத்தகைய சூழலில் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஆகவே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், இதற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் , மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.

தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அரசின் அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது .
எங்களது சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என ஊடகங்களின் வாயிலாக இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தமிழக மக்கள் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதில் எப்போதும் முன்னோடியானவர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறைகள் மிகக் கட்டாயமாக கடைபிடிப்பது நல்லது.

சாணம் , மஞ்சள் நீர், வேப்பிலை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வேப்ப எண்ணெய் தீபத்தை வீட்டு வாசலிலும் , வீட்டினுள்ளும் ஏற்றி நமது வீட்டை , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மிகுந்த பலனைத் தரும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்ரீ ராமநவமி வருகிறது. ஆகவே ஸ்ரீ ராமநவமி துவங்கி தினந்தோறும் வீடுகளில் இவைகளைக் கடைபிடிப்பதோடு, அன்றிலிருந்து தினசரி மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து 21 தடவை ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராமா மந்திரத்தை சொல்லவேண்டும் .
லட்சக்கணக்கானோர் இந்த நாம ஜெபம் சொல்லும் போது, கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கும் , அரசுக்கும் , சேவைப் பணியாற்றிடும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆன்ம பலத்தை, நம்பிக்கையை தரும். ராம நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம், ஆகவே மக்கள் அனைவரும் இந்த ராம நாம ஜெபத்தை செய்திட வேண்டும் எனவும் ஊடகங்களின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்