Tag Archives: #அறநிலையத்துறை

அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு பாராட்டுக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடிதம்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2. தொலைபேசி : 044 28457676,
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

7.5.2020

உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,
முதன்மை செயலர் / ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை,
சென்னை 34.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணுவது குறித்த தங்களின் சுற்றறிக்கை அறிந்து மகிழ்ந்தோம்.

தங்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கண்டு, இந்து முன்னணி தங்களை மனதார பாராட்டுகிறது.

நமது திருக்கோயில்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் நோய் தொற்று ஏற்பாடாத வண்ணமும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் அளித்துள்ள சுற்றறிக்கை குறிப்புகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

அதே சமயம் பணியாளர்கள் நலனிலும், அவர்கள் பாதுகாப்பிலும் தாங்கள் காட்டியுள்ள அக்கறை மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த நோய் தொற்றிலிருந்து, உலகமும், நமது நாடும், தமிழகமும் மீண்டு, நல்ல நிலைக்குத் திரும்பி அனைவரும் நலமுடன் வாழ்ந்திட இறைவன் திருவருள் புரிவாராக.

நன்றி.

என்றும் தேசியப் பணியில்,

(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

கோவில்களின் நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்- வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் அறிக்கை

24.04.2020

இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர் இந்துமுன்னணி சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது,

நமது கோவில்கள் பண்டைய காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோவில்களில் அன்னதான திட்டத்தை துவங்கிவைத்தார்கள்.

கொரானா தொற்று காரணமாக
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
இந்த நேரத்தில் ஆலயங்களில் செயல்பட்டுவந்த அன்னதான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த அவசிய சேவையை இந்து அறநிலையத்துறை முடக்கி வைத்துள்ளது

அண்டை மாநிலமான ஆந்திராவில் தினசரி 1 லட்சம் பேருக்கு திருப்பதி கோவில் மூலமாக உணவு வழங்குவதாக கூறப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியில் கோவில்களில் நடைபெற்று வந்த அன்னதான திட்டத்தை ஊரடங்கு நேரத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டுபோய் சேர்க்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை இதுபோன்ற சேவைகளை செய்ய முன்வராமல். காணிக்கையாக செலுத்திய நிதியினை பக்தர்களின் ஆலோசனையின்றி
கோவில் பணியாளர்கள், மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் ஒப்புதலுடன் அவசரகதியில் மடை மாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் சலுகை கொடுக்கப்படும் அதே நேரத்தில் இந்துகோவில் வருமானம் சுரண்டப்படுவது நியயாமா என்பதை அரசு சிந்திக்கவேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் செயல்படுத்தபடும் அன்னதான திட்டங்களை விரிவுபடுத்தி கோவில்களின் சேவை மக்களுக்கு சென்றடைய அரசு வழிவகைசெய்ய வேண்டும்.

இந்து சமய நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருகோவில் உள்பட 47 கோவில்களின் உபரி நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

இராம. கோபாலன்