Tag Archives: #மாணவர்நலன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி

16.05.2020
அனுப்புநர்:
C. P. சண்முகம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இந்து இளைஞர் முன்னணி
+919150359693
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்’சென்னை
பொருள்:இந்து இளைஞர் முன்னணி சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க
அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள்
மாணவர்களின் அழுத்தத்தைப்போக்கும் வகையில் ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்
இந்த ஆண்டுக்கான மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும், பயணச்செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்லூரிகளில் 50% கட்டணம் மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
இறுதியாண்டு முடிக்கும் அனைத்து துறை கல்லூரி மாணவர்களுக்கும் தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வழிமுறைகளை கண்டறிய வேண்டும
வருகின்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்களை தயார்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளைப்போல அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
மாணவர்கள்
வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களுடன் கலந்துரையாட தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும்.
அரியர்” வைத்துள்ள மாணவர்கள் அரியரை முடிக்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
வங்கிக்கடன் பெற்றுள்ள மாணவர்களின் இந்த ஆண்டுக்கான தவணைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டின் தேர்வுகளில் கடினமான கேள்விகளை தவிர்க்கவேண்டும்.
ஒருசில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தற்போது நிலுவையிலுள்ள உதவித்தொகையை அரசு உடனே வழங்கிட வேண்டும்.
மற்றவர்களுக்கு வழங்குவதைப்போன்று மாணவர்களுக்கும் கொரோனாகால நிவாரணமாக நிதியுதவி வழங்கவேண்டும்.
நன்றி
நகல்
1.மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு.
2.உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு.
தாயகப்பணியில்
C.P.சண்முகம்
இந்து இளைஞர் முன்னணி