Tag Archives: #Hindumunnani

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345

இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்

12.03.2020

நா. முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்

இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம்

இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும்,

தியாக மனப்பான்மையுடன் ஹிந்து சமுதாயத்திற்காக பாடுபடும் இந்துமுன்னணி தொண்டர்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் நோக்கத்துடனும்

சுயநலத்தோடு மிகக் கேவலமான செயலில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அவரைச் சேர்ந்த 3 பேரும் இந்துமுன்னனியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பகிடுறார்கள்.

தாயகப் பணியில்

நா.முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்.

மங்கலம் சொல்லும் சேதி- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது

நேற்று 08/03/2020
திருப்பூர் மங்கலத்தில்
நடந்தது என்ன..?திருப்பூர் அருகே உள்ளது மங்கலம்..
இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கிறார்கள்.மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில்
இந்துக்களே பெரும்பான்மை .இந்நிலையில்
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது
என இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.இதற்கு முடிவு கட்ட
ஒட்டுமொத்த கிராம மக்களும்
ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.அந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கியது.
நேற்று காலையில் இருந்தே
இஸ்லாமியர்களின் அராஜகமும் துவங்கியது.நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது .அதை கழட்ட வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் .எனவே மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் போலீசாரின் நெருக்கடியால் கழட்டப்பட்டன.பொதுக்கூட்டத்திற்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு
ஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை,நான்கு சாமளாபுரத்லிருந்து வரும் சாலை…அவிநாசி சாலையை தவிர
மற்ற மூன்று சாலைகளையும்
முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை
மறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது..பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.பொதுக் கூட்டம் முடிந்து
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடைசிவரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை.ஒரு பக்கம் இந்து பொதுமக்கள் தன்னெழுச்சி பெற்று
இஸ்லாமிய அராஜகத்திற்கு எதிராக போராட வந்தது மகிழ்ச்சி என்றாலும்
இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி
ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஒரு உதாரணம்.முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறைகூவல் விடுத்தார். அது காலத்தின் கட்டாயம்

இந்து நாகரிகம் – கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்;

“முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேருன்றிய காலம் அது.

அப்போதைய இந்து தன்னுணர்வு குறைந்தவனானான்.பிற மதத்தவரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.

முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக்கொண்டான். கிருஸ்தவர்களிடமிருந்து விவஸ்தையற்ற கட்டுப்பாடற்ற சுக போகங்களைக் கற்றுக் கொண்டான்.

தனக்கென்று ஒரு தனி நாகரிகம் இருப்பதை அவன் மறந்து போனான்.நாளடைவில் அந்த மறதி வளர்ந்திருக்கிறதே தவிர குறைவில்லை.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரிகத்தை போதிக்கவில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.

சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக்கூடாதது எது, என்பதிலிருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பதுவரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

மேற்கத்திய நாகரிகம் மத நாகரிகமல்ல. அது மதம் பிடித்த நாகரிகம்.

ஆனால் ஓர் இந்துவின் நாகரிகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.

அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது. கணவனை தேவனாக்கியது.மனைவியைத் தேவியாக்கியது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் “ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.

அப்படி ஒரு வீடு இருக்குமானால் அது அதிதிகளை(விருந்தினரை) வரவேற்று உபசரிப்பதற்காகவே”பிறரை வரவேற்று கருணை காட்டுவதே கோவில்.

ஆகவே இந்துவின் குடும்பம் ஒரு கோவில். அவன் தினமும் பூஜை செய்கிறான்.

காரணம் அன்றைக்கு தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறான். அவன் விபூதியை “திருநீறு ” என்கிறான்.

நாமத்தை “திருமண்” என்கிறான். அவற்றைத் தினமும் இ‍ட்டுக்கொள்கிறான்.

காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப்”போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.

அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம் “சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக்கூடாது” என்று சத்தியம் பூணுவதற்காகவே.

அவன் நீராடி உடலைக் கழுவுகிறான். பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான். நான் குறிப்பிடுவது சரியான-நல்ல இந்துவை.

இந்து சமுதாயம் மறந்து விட்ட நாகரிகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.

நமது நாகரிகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.

அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம். இந்து நாகரிகம் குழந்தை பிறந்தது முதல் சாகும்வரை அதற்கு வழி காட்டுகிறது…

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கைலாஷ் யாத்திரை உதவித்தொகை- கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா? மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கேள்வி

நா. முருகானந்தம் 03.03.2020
மாநில பொதுச் செயலாளர்

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா?

கைலாஷ் , முக்திநாத் , மானசரோவர் போய் வந்தவர்களில் 500 பேர்களுக்கு ரூ10000/- உதவித்தொகை என இந்து அறநிலையத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான நயவஞ்சகம், ஏமாற்றும் செயல்.

இந்துமுன்னணி இதை வன்மையாக கண்டிக்கிறது.

மெக்கா, மதீனா செல்ல முஸ்லீம்களுக்கு அரசின் பணம்.

ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசின் பணம்.

இந்துக்களுக்கு மட்டும் இந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை எடுத்து 500 பேருக்கு மட்டும் விநியோகமா?

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கண்ணில் வெண்ணை , இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் மதசார்பின்மையா?

இந்த பாரபட்சத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு வக்ப் வாரியப் பணத்திலிருந்தும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்களது நலவாரியத்திலிருந்தும் தான் கொடுக்கவேண்டும்.

மானியம் வழங்குவதிலும் அதுவும் வழிபாட்டிற்கு செல்ல பணம் கொடுப்பதில் கூட சிறுபான்மையினைரைத் தாஜா செய்யும் போக்கு மிக கேவலமான அரசியலாகத் தோன்றுகிறது.

இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு மானியம் அரசின் பணத்திலிருந்துதான் தரவேண்டும் என இந்துமுன்னணி தமிழக அரசிற்கு கடுமையாக வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்
நா. முருகானந்தம்

மாநில பொதுச் செயலாளர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஹயக்ரீவர் பூஜை- தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை – இந்து அன்னையர் முன்னணி சாதனை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பெண்களின் அணியான இந்து அன்னையர் முன்னணி தமிழகத்தில் மிக சிறப்பான வகையில், ஆன்மீகத்தின் மூலம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

தற்சமயம் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயம் நீங்க வேண்டும், மனவலிமை ஏற்பட வேண்டும், தன்னம்பிக்கை உருவாக வேண்டும், எதையும் சந்திக்கின்ற ஆற்றல் பெருகவேண்டும் என்பதற்காக ஹயக்ரீவர் பூஜை அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களில் நடத்தி வருகிறது .

சமீபகாலமாக தேர்வில் தோல்வியுற்றால் விபரீத முடிவை எடுக்கின்ற மாணவர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ஹயக்ரீவர் பூஜை மாணவர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களுக்கு ( பள்ளியில், கிராமங்களில்) மேல் அன்னையர் முன்னணி பெண்கள் ஹயக்ரீவர் பூஜை நடத்தியுள்ளனர் .

வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று இன்று அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி என்பது நம்முடைய தர்மத்தில் வழிபாடோடு சேர்ந்தது என்பதை இந்த பூஜைகள் நிரூபிக்கின்றன.

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்