Tag Archives: இந்து

ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்

25.11.2020

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூர் மங்கலம் பகுதியில் CAA மற்றும் NRC சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர் .
சிறப்பு பேச்சாளர்களை வெளியூரில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் போராட்டம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களையும், இந்து மத பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை கொச்சை படுத்தி தொடர்ந்து பேசினார்கள் .

இதைத் கண்டு பொதுமக்கள் வெகுண்டெழுந்து CAA மற்றும் NRC ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடத்தினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் .

இது இஸ்லாமியர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது . கூட்டம் முடிந்து மக்கள் திரும்பி செல்லும் வழிகளை மறைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் இஸ்லாமியர்களின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்து எண்ணிக்கை காண்பித்தால் மட்டும் இந்த பிரச்சினை ஓயாது என்பதை புரிந்து கொண்டனர்.

வியாபார தலைமை நம்மிடம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, அவர்களின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்த இஸ்லாமிய வியாபார நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இந்துஸ்தான் என்ற பெயரில் கூட்டு வியாபார நிறுவனங்கள் துவங்கினர்.

ஹிந்துஸ்தான் கால்நடை தீவனக் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது .

இதை அடுத்து வேலாயுதசாமி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் ஹிந்துஸ்தான் ஹோட்டல் மற்றும் பேக்கரி திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதை அடுத்து ஹிந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் விரைவில் துவங்கப்பட உள்ளது .

ஒருங்கிணைந்த இந்து சக்தியின் வெளிப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கு
திருப்பூர் மங்கலம் பகுதி நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு பாராட்டுக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடிதம்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2. தொலைபேசி : 044 28457676,
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

7.5.2020

உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,
முதன்மை செயலர் / ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை,
சென்னை 34.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணுவது குறித்த தங்களின் சுற்றறிக்கை அறிந்து மகிழ்ந்தோம்.

தங்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கண்டு, இந்து முன்னணி தங்களை மனதார பாராட்டுகிறது.

நமது திருக்கோயில்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் நோய் தொற்று ஏற்பாடாத வண்ணமும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் அளித்துள்ள சுற்றறிக்கை குறிப்புகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

அதே சமயம் பணியாளர்கள் நலனிலும், அவர்கள் பாதுகாப்பிலும் தாங்கள் காட்டியுள்ள அக்கறை மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த நோய் தொற்றிலிருந்து, உலகமும், நமது நாடும், தமிழகமும் மீண்டு, நல்ல நிலைக்குத் திரும்பி அனைவரும் நலமுடன் வாழ்ந்திட இறைவன் திருவருள் புரிவாராக.

நன்றி.

என்றும் தேசியப் பணியில்,

(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

SDPI மற்றும் PFI அமைப்புகளை தடை செய்யவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

23.03.2020

SDPI மற்றும் PFI அமைப்புகளை தடை செய்யவேண்டும் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பூர் கோட்ட செயலாளர் திரு. மோகன சுந்தரம் கார் எரிப்பு சம்பவத்தில் SDPI அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் SDPI அமைப்பானது சம்பந்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மிக பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மறு பதிப்பே ஆகும்.

கேரளாவில் ஒரு பேராசிரியரை வெட்டியது முதற்கொண்டு , ராமலிங்கம் கொலை மற்றும் பலவேறு கார் எரிப்பு சம்பவங்களிலும் SDPI சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது கேரளா, கர்நாடக, தமிழ்நாடு, அஸ்ஸாம், உபி ஆகிய இடங்களை தலைமையகமாகக் கொண்டு KPF, KGF, PFI போன்ற பல்வேறு பெயர்களில் இயங்கிய இந்த அமைப்புகள் தற்போது SDPI என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு திட்டமிட்ட பொய் செய்திகளை பரப்புகிறது. முஸ்லீம் இளைஞர்களிடம் பல்வேறு பொய் வீடியோக்கள் மூலம் முஸ்லீம்களுக்கு ஆபத்து என்று கூறி மூளைச் சலவை செய்கிறது. ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்கிறது. இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் SDPI தடை செய்யப்பட்டுள்ளது .

எனவே அமைதிப்பூங்காவான தமிழகத்தைக் காக்க மத்திய , மாநில உளவுத் துறைகள் நன்கு கண்காணிக்க வேண்டும். இந்த SDPI வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பெற்று பாரத நாட்டில் வன்முறைகளை தூண்டுகிறது. எனவே இந்த அமைப்பை மாநில உளவுத்துறை மட்டுமல்லாமல் மத்திய உளவுத் துறையும் சேர்ந்து இவர்களது செயல்பாடுகளைக் கவனித்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும். மேலும் இவர்களது பண ஆதாரத்தையும் கண்டு பிடிக்க வேண்டும் . இவர்களது மறைமுக ஆதரவாளர்கள், இவர்களுக்கு இடம் கொடுக்கும் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டித்து, இரும்புக் கரம் கொண்டு அடக்கி தமிழகத்தையும், பாரதத்தையும் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

இந்து நாகரிகம் – கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கல்கி வார இதழில் 1975இல் எழுதிய இந்து நாகரிகம் என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்;

“முஸ்லிம்களும் ஆங்கிலேயர்களும் அடுத்தடுத்து வந்து வேருன்றிய காலம் அது.

அப்போதைய இந்து தன்னுணர்வு குறைந்தவனானான்.பிற மதத்தவரது பழக்க வழக்கங்களால் கவரப்பட்டான்.

முஸ்லிம்களிடமிருந்து குருமாவையும்,பிரியாணியையும் பெற்றுக்கொண்டான். கிருஸ்தவர்களிடமிருந்து விவஸ்தையற்ற கட்டுப்பாடற்ற சுக போகங்களைக் கற்றுக் கொண்டான்.

தனக்கென்று ஒரு தனி நாகரிகம் இருப்பதை அவன் மறந்து போனான்.நாளடைவில் அந்த மறதி வளர்ந்திருக்கிறதே தவிர குறைவில்லை.

வேறு எந்த மதமும் வாழ்க்கை நாகரிகத்தை போதிக்கவில்லை; இந்து மதம் ஒன்றே போதிக்கிறது.

சாப்பிடக் கூடியது எது, சாப்பிடக்கூடாதது எது, என்பதிலிருந்து எந்த ஆடைகளை எப்போது அணிய வேண்டும் என்பதுவரை அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறது.

மேற்கத்திய நாகரிகம் மத நாகரிகமல்ல. அது மதம் பிடித்த நாகரிகம்.

ஆனால் ஓர் இந்துவின் நாகரிகம் தெய்வீக அடிப்படையில் அமைந்தது.

அது நம் குடும்பத்தைக் கோவிலாக்கியது. கணவனை தேவனாக்கியது.மனைவியைத் தேவியாக்கியது.

சுவாமி விவேகானந்தர் சொல்வது போல் “ஓர் இந்துவுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.

அப்படி ஒரு வீடு இருக்குமானால் அது அதிதிகளை(விருந்தினரை) வரவேற்று உபசரிப்பதற்காகவே”பிறரை வரவேற்று கருணை காட்டுவதே கோவில்.

ஆகவே இந்துவின் குடும்பம் ஒரு கோவில். அவன் தினமும் பூஜை செய்கிறான்.

காரணம் அன்றைக்கு தன்னை புனிதப்படுத்திக் கொள்கிறான். அவன் விபூதியை “திருநீறு ” என்கிறான்.

நாமத்தை “திருமண்” என்கிறான். அவற்றைத் தினமும் இ‍ட்டுக்கொள்கிறான்.

காரணம் இந்த உடல் தீயில் வெந்து “நீறாகப்”போகிறது. அல்லது மண்ணில் புதைந்து மண்ணாகப் போகிறது என்பதை தினமும் நினைத்துக் கொள்வதற்காகவே.

அப்படி நினைத்துக் கொள்வதன் மூலம் “சாகப்போகிற இந்த உடல் தவறு செய்யக்கூடாது” என்று சத்தியம் பூணுவதற்காகவே.

அவன் நீராடி உடலைக் கழுவுகிறான். பூஜை செய்து உள்ளத்தைக் கழுவுகிறான். நான் குறிப்பிடுவது சரியான-நல்ல இந்துவை.

இந்து சமுதாயம் மறந்து விட்ட நாகரிகத்தை நாம் நினைவு படுத்தியாக வேண்டும்.

நமது நாகரிகத்துக்கு ஒவ்வோர் அணுவிலும் உயர்ந்த நோக்கம் உண்டு.

அது தர்மத்தில் முளைத்தெழுந்த கர்மம்-காரியம். இந்து நாகரிகம் குழந்தை பிறந்தது முதல் சாகும்வரை அதற்கு வழி காட்டுகிறது…

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள் – இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள்…

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் எனக் கூறிக்கொண்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி இந்து கடவுள்களை மிக கேவலமாகவும், இழிவுபடுத்தி பேசியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து வருகிறார்கள். மேலும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அப்பகுதி வாழ் மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதி கிராம மக்கள் – மங்கலம், கணியம்பூண்டி இடுவாய், புத்தூர் வேலாயுதம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென இன்று மாலை நாலு மணிக்கு மலைக்கோவிலில் கூடி மேற்படி சட்ட விரோத அராஜக போக்கை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மங்கலம் காவல் நிலையத்திற்கு சுமார் 300 பேர் சென்று புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து “இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு “ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்மூலம் மங்கலத்தில் நடைபெறும் அனைத்து சட்ட விரோத தேசத்துரோக நடவடிக்கைகளையும் கண்டித்து மக்களைத் திரட்டி போராட உள்ளதாக உள்ளனர்.

இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு.