Tag Archives: #Hindumunnani

சென்னை மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்

21.04.2020

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் “பொதுமக்கள்” என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்!

இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.
கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான சாதிச்சண்டையை இது பிரதிபலிக்கிறது!

எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையின் போது கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை “பொதுமக்கள்” என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்..

டெல்லி மாநாட்டுக்கு ( தப்லீக் ஜமாஅத் மாநாட்டு ) சென்றுவந்தவர்களை இதே ஊடகங்கள் தான் “தனியார் அமைப்பினர்” என அழைத்தனர்.

முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்.

சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது.

கிறித்தவ மதத்திற்குள் சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தை ஜாலம்.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் “பாதர்கள்” போல, நிஜ வாழ்க்கை பாவாடை பாதர்கள் இல்லை. வெள்ளை அங்கி பாவாடை பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!

எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்.
கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

உங்கள் பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மயானங்களில் கூடி, பிணத்தை தடுத்து கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்.

தமிழக மீடியாக்களால் ஜாதிய-மத வாதிகளாக அவதூறு பரப்படும் இந்துக்கள்தான் அயனாவரம் வேலங்காட்டில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் டாக்டர் சைமன் என்கிற கிறித்தவரின் உடலை புதைக்க அனுமதித்தனர் என்பதை அன்பு மதத்தை சேர்ந்தவர்களும், மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல்வாதிகளும் , இந்து விரோத பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரையும் அரவனைக்கும் சனாதன தர்மம் என்பது தான் உண்மை.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

தீபாவளி,பொங்கல் இனாம் வழங்குவது போல் ரம்ஜான் நோன்பு அரிசியை அனைவருக்கும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துமுன்னணி மனு தாக்கல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450 மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக 2895 பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு 16.4.3020 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக இந்துமுன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சென்னை உயர்நிதிமன்றத்தில் தடை உத்திரவு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்…

தை பொங்கலுக்கு அரிசியும், வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும் எனவும்

மேலும் கொரோணோ ஊரடங்கு காலத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூலம் வழங்குவதால் கொரோணோ தொற்று மேலும் பரவலுக்கு வழி ஏற்படும்

அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. எனவே ரேசன் கடைகள் மூலம் அதனை அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும்

எனவே 16.4.2020 ல் அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் பள்ளிவாசல் மூலம் முஸ்லீம்களுக்கு மட்டும் அரிசி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது

இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு T.அண்ணாமலை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்

இம் மனு நாளை திங்கள் கிழமை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

போலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்

15/04/2020

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
தூத்துக்குடி.
9486482380

பெறுநர்
உயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
சென்னை
தமிழ்நாடு

ஐயா வணக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

புதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

செங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது?

சட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா? என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.

நேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்?

இவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

மக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகப் பணியில்

V.P.ஜெயக்குமார்
15/04/2020
பரமன்குறிச்சி

நகல்
1) உயர்திரு தமிழக DGP அவர்கள்
2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்
3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்

வீட்டை கோவிலாக்கி வழிபாடு நடத்துவோம் – வீரத்துறவி இராம கோபாலன்… புத்தாண்டு செய்திகள்

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
பத்திரிகை அறிக்கை
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
வீட்டை கோயிலாக்கி வழிபாடு நடத்துவோம்..
தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டு, சித்திரை 1ஆம் தேதி. அன்று குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று விசேஷமாக வழிபாடு நடத்துவது நமது மரபு.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் நமது பாரம்பர்யத்தை கைவிடலாமா?
எனவே, புத்தாண்டு வழிபாட்டை நமது வீட்டில் உள்ளோர் அனைவரும், இந்த உலகமும், நமது புண்ணிய பூமியும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல நிலையில் வாழ புத்தாண்டான சித்திரை (14.4.2020) 1ஆம் தேதி அன்று விளக்கேற்றி வைத்து குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வோம்.
அனைவருக்கும் இந்து முன்னணியின் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெறவும், இந்த தீய சூழலில் இருந்து மீண்டு, வளம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

ஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா

கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .

பாரதப் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்துமுன்னணி மனதார பாராட்டுகிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள். அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.

எனவே இதைத் தடுப்பது மிக மிக அவசியமாகிறது.
தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால், நாமாக எதையாவது செய்து அது மேலும் சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதை இந்துமுன்னணி இயக்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

அதே சமயம் அரசே இத்தகைய சூழலில் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஆகவே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், இதற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் , மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.

தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அரசின் அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது .
எங்களது சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என ஊடகங்களின் வாயிலாக இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தமிழக மக்கள் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதில் எப்போதும் முன்னோடியானவர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறைகள் மிகக் கட்டாயமாக கடைபிடிப்பது நல்லது.

சாணம் , மஞ்சள் நீர், வேப்பிலை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வேப்ப எண்ணெய் தீபத்தை வீட்டு வாசலிலும் , வீட்டினுள்ளும் ஏற்றி நமது வீட்டை , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மிகுந்த பலனைத் தரும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்ரீ ராமநவமி வருகிறது. ஆகவே ஸ்ரீ ராமநவமி துவங்கி தினந்தோறும் வீடுகளில் இவைகளைக் கடைபிடிப்பதோடு, அன்றிலிருந்து தினசரி மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து 21 தடவை ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராமா மந்திரத்தை சொல்லவேண்டும் .
லட்சக்கணக்கானோர் இந்த நாம ஜெபம் சொல்லும் போது, கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கும் , அரசுக்கும் , சேவைப் பணியாற்றிடும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆன்ம பலத்தை, நம்பிக்கையை தரும். ராம நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம், ஆகவே மக்கள் அனைவரும் இந்த ராம நாம ஜெபத்தை செய்திட வேண்டும் எனவும் ஊடகங்களின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்- மதம் பிரச்சாரம் மூலமாக கொரோனா- சந்தேகம் எழுகிறது…

அனுப்புநர்:

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
அன்புடையீர் வணக்கம்..
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடங்கிய மதப் பிரச்சார குழுக்கள் தங்கி இருந்ததும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் மூலம் பலருக்கும் கொரோனா பரவி இருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மதப்பிரச்சாரம் செய்ய இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சார்ந்த மௌல்விகள் பதுங்கி இருந்ததை அந்த ஊர் மக்களின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பல மசூதிகளில் கூட்டமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த அனுமதியில் இந்தியாவிற்குள் வந்தார்கள்? சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து மத பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இத்தனை நபர்கள் வந்திருப்பதும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியிருப்தும் பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது.
“பயோ ஜிகாத்” என்ற பெயரில் திட்டமிட்டு கொரானா வைரசை பரப்பியதாக மக்கள் பேசி வருகின்றனர். இது பற்றியும் அரசு விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை சோதனை செய்து கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் இருந்தால் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்