Tag Archives: #Corona

தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி

01.06.2020

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை

அன்புடையீர் வணக்கம் ,

பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள்.

இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

தாயகப் பணிகளில்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

மாநிலத் தலைவர்

தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

23.05.2020

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி

மதுக்கடைகளை திறக்கும் முடிவு – கொரோனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் முயற்சி- தமிழக நலன் கருதி இதை உடனடியாக கைவிட இந்துமுன்னணி கோருகிறது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

05.05.2020
பத்திரிகை அறிக்கை
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

எதிர்வரும் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.

கொரோனா தாக்குதளில் வெகுவாக பீடித்துள்ள இந்த நிலையில் தமிழக அரசின் இந்தமுடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

இதனால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகி கொரோனா பரவுவது அதிகரிக்கும் என்பது உறுதி.

கொரோனாவுக்கு அரசே சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி மக்கள் அன்றாட உணவிற்கே பெருத்த சிரமங்களை சந்தித்து வருகின்ற நிலையில், மதுக் கடைகள் திறக்கப்பட்டால் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்றுக் குடிக்க மக்களை அரசே தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை, பணத்தை மதுக்கடைகள் மூலம் வசூல் செய்ய அரசு இந்த முயற்சியை மேற்கொள்கிறதோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

அரசு மதுக் கடைகளை திறக்க காண்பிக்கும் ஆர்வத்தை, பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவில் அன்னதான திட்டத்திற்கு காண்பித்தால், மீண்டும் துவக்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இந்துமுன்னணி எண்ணுகிறது.

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் இந்துமுன்னணி பேரியக்கம் கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

ஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

25.04.2020

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).

பின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்ததாகவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.

தற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இவர்கள் செயல் நாகரிகமானதா?
கொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா?

மேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ!! ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா? என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி