Tag Archives: #இந்துமுன்னணி

காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் சீமானின் அறிக்கைக்கு பதில்

நாம் தமிழர் நிறுவன தலைவர் சீமான் அவர்களுக்கு வணக்கம்.

நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இருக்க செந்தில் ஆண்டவன் அருள் புரிவார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரிவினைவாத அரசியலை கைவிட்டு , மத உணர்வை புறந்தள்ளி, துளியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அறிக்கை கொடுத்துள்ளீர்கள்.

அவ்வாறு மத உணர்வு உள்ளவர்கள்தான் சிகிச்சைக்கு வர மறுக்கிறார்கள்.

அந்தத் தலைவர்களிடம் நீங்கள் பேசி மேலும் இந்த கொடிய நோய் பரவாமல் இருக்க, தடுக்க முயற்சி செய்யலாம் அல்லவா??

ஒரு இஸ்லாமியர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உறவினர் மற்றும் பலபேர் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் மதச்சார்பின்மை பேசும் நல்லவர்கள், மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் நீங்கள் ஏன் இந்த முயற்சி எடுக்க கூடாது??

தனிமையில் இருங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல உலக மருத்துவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். இதை ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஒரு பதிவு எனக்கு வந்தது அதில் ஒரு இஸ்லாமிய டாக்டர் அந்த நோய் எப்படி கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவாக சொல்லி இருந்தார். அந்த பதிவை நான் பலருக்கும் பகிர்ந்துள்ளேன். அவர் பெயர் டாக்டர் பீர்மைதீன் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனிபுறிந்தவர். அப்படிப்பட்ட நல்ல மனிதரும் நாட்டில் உள்ளனர் .

மதம் என்று நாங்கள் பார்க்கவில்லை நீங்கள்தான் பார்க்கின்றீர்கள். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பிரிக்கின்றனர். இந்த பிரிவினை வருங்கால இந்தியாவுக்கு நல்லதல்ல.

இன்று எங்கள் ஊரில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்! எங்கள் பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் காயல்பட்டினத்தில் துப்புரவு பணிக்கு செல்கிறார்கள் அவர்களை திமுக பிரமுகர்கள் அங்கு போகக் கூடாது என்று தடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

இதற்கு காரணம் யார்? காயல்பட்டினத்தில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பஷீர்.

டெல்லியில் நடைபெற்ற இசுலாமிய மத மாநாட்டிற்கு சென்றுள்ளார் அவருக்கு கொடிய நோய் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

ஆண்டவன் அருளால் அவருக்கு நோய் வரக்கூடாது… ஆனால் அந்த டாக்டர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருக்க வேண்டுமல்லவா? மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இஸ்லாமிய மத தலைவர்களிடம் உங்கள் வாதத்தை ஆணித்தரமாக வைத்து அவர்களை சுயபரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். அது தான் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்லது.

நன்றி வணக்கம்
பாரத் மாதா கீ ஜெய்!!

V.P. ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி 628213
9443382380

மாவட்ட வாரியாக –மக்கள் உதவி மையம் – தனித்திரு! விழித்திரு!! வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

தனித்திரு! விழித்திரு!!
வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்”
கொரோனா தடுப்பு –மக்கள் உதவி மையம்_- இந்துமுன்னணி
மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு வருகின்றனர். மார்க்கெட் மளிகை மருந்து போன்ற கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரானா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

இந்த முக்கியமான பிரச்சனையை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வீடு தேடி கொண்டு போய் சேர்க்கும் “தனித்திரு! விழித்திரு!! வீட்டிற்கு வருகிறோம் பொருட்களை தருகிறோம்” என்ற சேவையை தமிழகம் முழுவதிலும் செய்ய இந்து முன்னணி முடிவு செய்திருக்கிறது.

மாநில தலைமை உதவி மையம் சென்னையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டு அந்த அலுவலகத்தின் அலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும்.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறோம் தங்களுக்கு என்ன பொருள் தேவை என்பதை தெரிவித்தால் அலுவலக பொறுப்பாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள இந்து முன்னணி ஊழியர்கள்
மூலம் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று அந்த பொருட்களை உரிய நேரத்தில் பொதுமக்களிடம் கொடுப்பார்கள். பொருளுக்கான தொகையை பெற்றுக் கொள்வார்கள்.

இதனால் பொதுமக்கள் கடைகளில் சாலைகளில் பொது இடங்களில் கூறுவது தவிர்க்கப்பட்டு கொரானா பரவுவதை பெருமளவில்

முறியடிக்க முடியும்.

ஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா

கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .

பாரதப் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்துமுன்னணி மனதார பாராட்டுகிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள். அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.

எனவே இதைத் தடுப்பது மிக மிக அவசியமாகிறது.
தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால், நாமாக எதையாவது செய்து அது மேலும் சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதை இந்துமுன்னணி இயக்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

அதே சமயம் அரசே இத்தகைய சூழலில் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஆகவே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், இதற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் , மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.

தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அரசின் அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது .
எங்களது சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என ஊடகங்களின் வாயிலாக இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தமிழக மக்கள் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதில் எப்போதும் முன்னோடியானவர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறைகள் மிகக் கட்டாயமாக கடைபிடிப்பது நல்லது.

சாணம் , மஞ்சள் நீர், வேப்பிலை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வேப்ப எண்ணெய் தீபத்தை வீட்டு வாசலிலும் , வீட்டினுள்ளும் ஏற்றி நமது வீட்டை , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மிகுந்த பலனைத் தரும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்ரீ ராமநவமி வருகிறது. ஆகவே ஸ்ரீ ராமநவமி துவங்கி தினந்தோறும் வீடுகளில் இவைகளைக் கடைபிடிப்பதோடு, அன்றிலிருந்து தினசரி மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து 21 தடவை ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராமா மந்திரத்தை சொல்லவேண்டும் .
லட்சக்கணக்கானோர் இந்த நாம ஜெபம் சொல்லும் போது, கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கும் , அரசுக்கும் , சேவைப் பணியாற்றிடும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆன்ம பலத்தை, நம்பிக்கையை தரும். ராம நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம், ஆகவே மக்கள் அனைவரும் இந்த ராம நாம ஜெபத்தை செய்திட வேண்டும் எனவும் ஊடகங்களின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்- மதம் பிரச்சாரம் மூலமாக கொரோனா- சந்தேகம் எழுகிறது…

அனுப்புநர்:

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
அன்புடையீர் வணக்கம்..
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடங்கிய மதப் பிரச்சார குழுக்கள் தங்கி இருந்ததும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் மூலம் பலருக்கும் கொரோனா பரவி இருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மதப்பிரச்சாரம் செய்ய இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சார்ந்த மௌல்விகள் பதுங்கி இருந்ததை அந்த ஊர் மக்களின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பல மசூதிகளில் கூட்டமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த அனுமதியில் இந்தியாவிற்குள் வந்தார்கள்? சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து மத பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இத்தனை நபர்கள் வந்திருப்பதும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியிருப்தும் பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது.
“பயோ ஜிகாத்” என்ற பெயரில் திட்டமிட்டு கொரானா வைரசை பரப்பியதாக மக்கள் பேசி வருகின்றனர். இது பற்றியும் அரசு விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை சோதனை செய்து கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் இருந்தால் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345

இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்

12.03.2020

நா. முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்

இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம்

இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும்,

தியாக மனப்பான்மையுடன் ஹிந்து சமுதாயத்திற்காக பாடுபடும் இந்துமுன்னணி தொண்டர்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் நோக்கத்துடனும்

சுயநலத்தோடு மிகக் கேவலமான செயலில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அவரைச் சேர்ந்த 3 பேரும் இந்துமுன்னனியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பகிடுறார்கள்.

தாயகப் பணியில்

நா.முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்.