Tag Archives: கொரோனா

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

01.07.2020

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு குறிப்பாக கோவில்களைத் திறப்பது உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் பீதியில் , மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான். இதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிகம் இருக்கிறது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாததுதான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் வழிபாடு எத்தகைய கடும் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இது கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.
ஆகவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.
அதே சமயம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க ஏற்பாடுகளுடன் எளிமையாக நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விநாகர் சதுர்த்தி முலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். வியாபார புழக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. கிராமியக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், விநாயகர் திருமேனி செய்பவர்கள் வாகன ஓட்டுனர்கள் இப்படியாக பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடியது விநாயகர் சதுர்த்தி ஆகும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக எளிய முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலம் சிறப்பாக கொண்டாடுவதில்லை என இந்து முன்னணி முடிவெடுத்துள்ளது.
பாரத பிரதமரின் அறிவுரையின் படி எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொது மக்களிடம் நன்கொடை வாங்குவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதர்கான வழிமுறைகளை ஏற்படுத்தி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தி விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்

காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு மாநில துணைத் தலைவர் கடிதம்

V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணை தலைவர்

2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.628213
9443382380

பெறுநர் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

ஐயா வணக்கம்,

கடந்த மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாஅத் தலைமை பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் பகுதியை சார்ந்த அரசு மருத்துவர் Dr.பாஷில் என்பவர் கலந்து கொண்டு ஊர் திரும்பி உள்ளார். அவருடன் காயல்பட்டணத்தை சேர்ந்த ஷேக் முகமது என்பவரும் சென்று வந்துள்ளார் . ஷேக் முகமதின் மனைவி Dr.நசிலிம் பாத்திமா திருச்செந்தூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவர்).

சேக் முகமது அவர்கள் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தது அவருடைய மனைவி Dr.நசிலிம் பாத்திமா அவர்களுக்கு நன்கு தெரியும்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் இந்த சூழ்நிலையில் அந்த நோயின் தாக்கம் முழுவதும் ஒரு மருத்துவராகிய இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் இவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அவர்களுடைய மருத்துவப் பணியைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.இது மன்னிக்க முடியாத குற்றம்.

நம் பாரத பிரதமர் அவர்கள் பல முறை தொலைக்காட்சி வாயிலாக மக்கள் முன் இந்த கொடிய நோயின் உடைய தாக்கம் குறித்தும் பல முன்னேறிய நாடுகள் இந்த நோயினால் படும் திண்டாட்டம் குறித்தும் விளக்கம் கொடுத்து மக்களை சுயக்கட்டுப்பாடு உத்தரவு மூலம் வீட்டிலேயே இருப்பதற்கு அறிவுறுத்தினார். மேலும் வெளியூர் சென்று வந்தவர்கள் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அனைவரையும் பரிசோதனை மேற்கொள்ளவும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தினார்.

அதனையும் மீறி இந்த இரண்டு மருத்துவர்களும் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

ஒரு பாமர மக்கள் கூட இந்த நோயின் கொடுமையை புரிந்துள்ள இன்றைய சூழ்நிலையில் இவர்கள் வெளியே வந்து மருத்துவம் பார்ப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

ஒரு நாளைக்கு எத்தனை பொதுமக்களை இவர்கள் சந்திக்க நேர்ந்திருக்கும், இவர்கள் மூலம் எத்தனை பேருக்கு அந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு அந்த அறிகுறி தென்படாமல் இருந்தாலும் அவர்கள் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பரவும் என்பது மருத்துவத் துறையில் இருக்கும் இவ்விருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.

ஆனால் இவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறு பணியை தொடர்ந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அரசாங்கமே அந்த மாநாட்டிற்கு சென்று வந்த பயணிகளின் விபரங்களை வைத்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளது. இந்த இரண்டு மருத்துவர்கள் செய்த தவறினை வேறு யாரும் செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இவர்களுடைய மருத்துவர் சான்றையும் (degree certificate) அவர்கள் மருத்துவம் பார்ப்பதற்கான அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்துமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யுமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்- மதம் பிரச்சாரம் மூலமாக கொரோனா- சந்தேகம் எழுகிறது…

அனுப்புநர்:

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
அன்புடையீர் வணக்கம்..
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடங்கிய மதப் பிரச்சார குழுக்கள் தங்கி இருந்ததும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் மூலம் பலருக்கும் கொரோனா பரவி இருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மதப்பிரச்சாரம் செய்ய இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சார்ந்த மௌல்விகள் பதுங்கி இருந்ததை அந்த ஊர் மக்களின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பல மசூதிகளில் கூட்டமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த அனுமதியில் இந்தியாவிற்குள் வந்தார்கள்? சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து மத பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இத்தனை நபர்கள் வந்திருப்பதும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியிருப்தும் பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது.
“பயோ ஜிகாத்” என்ற பெயரில் திட்டமிட்டு கொரானா வைரசை பரப்பியதாக மக்கள் பேசி வருகின்றனர். இது பற்றியும் அரசு விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை சோதனை செய்து கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் இருந்தால் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்