முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் பிறந்ததினம் – சமுதாய சமர்ப்பண தினம்

17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.

  • இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
  • 1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
  • 1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  • 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
  • 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
  • 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
  • 1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
  • 1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
  • 14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
  • 16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
  • 13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
  • 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
  • 13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
  • 2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
  • 1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்

இந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட்டது…

தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…

இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.

மோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

நாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…

இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.

மோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

நாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…

இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.

மோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.

நாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

புல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.
பாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.
பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.
நேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
மத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
நாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.
மேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
15-2-2019
பத்திரிகை அறிக்கை
தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது!
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .
இந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.

கொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.

ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.

செட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவில் இருக்கும் தன்மானமும்,  சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை

திமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,

சுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்..
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், நேற்று ஒரு இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், திமுக திருந்தவே திருந்தாது என்பதை இவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
திமுகவின் தலைவராக இருந்தவரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதி, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு, இஸ்லாத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், அங்குபோய் இந்துக்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்து புண்படுத்துவார். அந்த வழியில், தற்போது ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.
ஈவெரா காலம், கருணாநிதி காலம் மாதிரி இப்போது இந்து சமுதாயம் இல்லை என்பதை திமுகவிற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது. இந்து என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது. அதனை எதிர்கொள்ளாமல் என்னவெல்லாம் சாமாதானமாக பேசினார் கருணாநிதி என்பதை இந்து சமுதாயம் மறக்கவில்லை. திமுகவில் இருக்கும் சுயமரியாதையும் தன்மானமும் உள்ள இந்துக்கள் சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
தமிழ் இலக்கியங்கள் ஐவகை திருமணங்களை குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வேள்வி திருமண சடங்கு உள்ளது. அது அறிவியல் பூர்வமான சடங்கு. அதே சமயம் பலவகையான திருமண சடங்குகள் இந்து சமுதாயத்தில் இருக்கிறது. இதனை எல்லாம் இந்து திருமண சட்டம் ஏற்றும் கொண்டுள்ளது. திருமணத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நபரும் இந்து சமுதாயத்தில் குறிக்கீடு செய்ய முடியாது. அவரவர் சமுதாய வழக்கத்தை அவரவர் குடும்பமே முடிவு செய்கிறது.
திமுக தலைவர் நடத்தும் திருமண சடங்கான, திருமண விழாவை எழவு வீடாக நினைத்து தனது சொந்த கருத்தையும், கட்சி அரசியலையும் புகுந்தும் அநாகரிக திருமணமும் இந்து திருமணத்தின் படிதான் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய திருமணங்களில் திமுக தலையீடவும் முடியாது, அந்த மதங்கள் அதற்கு இடமும் தருவதில்லை. அங்குபோய் கலந்துகொள்ளலாம், அந்த அளவு மட்டுமே திமுக தலைவருக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள். திருமணத்தை நடத்துவது பாதிரியார், முல்லா மௌல்வி போன்றோர் தான்.
இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவிற்கு போனதற்கு, திமுகவின் பாணியில் அங்கு இல்லாத நிக்காஹ் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அங்கு போய் இந்து திருமணங்களைப் பற்றி கேவலமாக பேசியிருப்பது ஸ்டாலின், திமுகவை இந்து விரோத கட்சியாக கொண்டு செல்லவே விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவரவர் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினால், வெகுண்டெழுகிறார்கள். ஆனால் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் கோழைகளாக நினைத்து, ஸ்டாலின் போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும், கருத்து தெரிவிக்க வேண்டும். திமுக திருந்தாத கட்சி, அதன் இறுதி அத்தியாயத்தை எழுதவே ஸ்டாலின் இதுபோல் நடந்துகொள்கிறார் என கருதுகிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.

திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.