ஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

03.08.2020

ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் அதே இடத்தில் கோவில் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. தற்போது நமது கனவு நனவாகப் போகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் பிரம்மாண்டமான கோவில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

மக்கள் அனைவரும் அன்றைய தினம் (ஆகஸ்ட் 5 ம் தேதி – 2020) காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்வோம்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த புண்ணிய தினத்தில் நாமும் பங்கேற்று ஸ்ரீ ராமனது அருளுக்கு பாத்திரமாவோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *