தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *