இராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
26-8-2019
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு..
நேற்று வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அனைவரும் அனைத்து தேசத் தலைவர்களையும் மதிக்கும் பண்பு வளர வேண்டும்.
இப்படி சமூகத்தில் பதட்டத்தில் ஏற்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காரணமாக்கி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளுவதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் நம்பிக்கையை அரசும், அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
சமூக விரோதிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். சாதி சண்டைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் இலங்கை மூலம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் வேளையில், இதபோன்ற சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நடக்கும் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக இருக்க தமிழக அரசு தனிக் கவனம் கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *