39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..!

கடந்த 50 ஆண்டுகளூக்கு
மேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.

இந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

சபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,
ஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.

கனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.

நான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.

திருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.

கனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..

இதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.

வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..

இந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த
39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…!

ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *