மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

13.10.2020

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயார் தவசாயி அம்மாள், கடந்த ஒரு வாரகாலமாக சேலம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு 1.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம்.

தாயாரை இழந்து வாடும் தமிழக முதலமைச்சருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தவசாயி அம்மாள் அவர்கள் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *