Tag Archives: #muslim

தலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
2/131, பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம்
9486482380

பெறுநர்
உயர்திரு.தலைமைச் செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு

ஐயா

இரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
காவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ! என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது!
உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

குறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்

நகல்
1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்

2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு

இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்

மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்

வணக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.

மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.

மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக DGP அவர்கள்

தாயகப் பணியில்

V.P. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

கோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை

30.04.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தற்போது கொரோனா
காரணமாக144
லாக்டவுன்
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்சிறையில்
சிறைவாசிகளை
சந்திக்கும்
நேர்காணல் மற்றும்
வழக்கறிஞர்கள்
நேர்காணல் தடை
செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை காணமுடியாத
சூழ்நிலையில் சிறைவாசிகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது
இயல்பு.

இத்தகைய நேரத்தில்
சிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின்
கடமை.

அதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்
சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி
கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில்
இந்து சிறைவாசிகளை
கொடுமைப்படுத்துவதும்
தனிமைச்சிறையில்
அடைப்பதும் வாடிக்கையாக
இருந்தது.

சிறைத்துறை அதிகாரிகளிடம்
இந்துமுன்னணி பேச்சுவார்த்தை
நடத்தி இந்து கைதிகளுக்கு
பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை
முஸ்லீம் சிறைவாசிகளுக்கு
செய்து தந்த செளகரியங்கள்
ஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்
ரம்ஜான் காலங்களில்
பிரியாணி செய்ய அனுமதிப்பது என
தாராளம் காட்டியது.

இந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்கு
தடைவிதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .
காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி
பண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .

மேலும் கைது செய்யப்பட்டு
சிறைக்கு செல்லும் சிறைவாசிகளை
சோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்
கான்விக்ட் வார்டன்கள்
கடுமையாக தாக்குவது
என பல்வேறு கொடுமைகளை
அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம் .

சென்ற மாதம் கோவையில்
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்
RSS நிர்வாகி சூரிஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம்
சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க
சலுகை வழங்குகிறது
சிறைத்துறை .

அதே சமயம் கடந்தமாதம்
கைது செய்யப்பட்டு
குண்டர்சட்டத்தில்
அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை
தனிமை சிறையில்
அடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.

எனவே கோவை மத்திய
சிறையில் நடைபெறும்
மதரீதியான
பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும்,சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக
விரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து
கொள்கிறோம்.

சிறைத்துறை வார்டன் பூபால்
அவர்கள் முஸ்லீம்களால்
தாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து
சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம் இந்துமுன்னணி.
இதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி
கேட்டுக் கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

ஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை

25.04.2020

கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).

பின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்ததாகவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.

தற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இவர்கள் செயல் நாகரிகமானதா?
கொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா?

மேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ!! ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா? என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.

என்றும் தாயக பணியில்
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி