Monthly Archives: November 2020

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை

27.11.2020

வி.பி. ஜெயக்குமார்
மாநிலத் துணைத் தலைவர், இந்து முன்னணி
தொலைபேசி: 04639-232240,

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..

நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.

அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.

கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
வி.பி. ஜெயக்குமார்,
மாநிலத் துணைத் தலைவர்

ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்

25.11.2020

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூர் மங்கலம் பகுதியில் CAA மற்றும் NRC சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர் .
சிறப்பு பேச்சாளர்களை வெளியூரில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் போராட்டம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களையும், இந்து மத பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை கொச்சை படுத்தி தொடர்ந்து பேசினார்கள் .

இதைத் கண்டு பொதுமக்கள் வெகுண்டெழுந்து CAA மற்றும் NRC ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடத்தினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் .

இது இஸ்லாமியர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது . கூட்டம் முடிந்து மக்கள் திரும்பி செல்லும் வழிகளை மறைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் இஸ்லாமியர்களின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்து எண்ணிக்கை காண்பித்தால் மட்டும் இந்த பிரச்சினை ஓயாது என்பதை புரிந்து கொண்டனர்.

வியாபார தலைமை நம்மிடம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, அவர்களின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்த இஸ்லாமிய வியாபார நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இந்துஸ்தான் என்ற பெயரில் கூட்டு வியாபார நிறுவனங்கள் துவங்கினர்.

ஹிந்துஸ்தான் கால்நடை தீவனக் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது .

இதை அடுத்து வேலாயுதசாமி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் ஹிந்துஸ்தான் ஹோட்டல் மற்றும் பேக்கரி திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதை அடுத்து ஹிந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் விரைவில் துவங்கப்பட உள்ளது .

ஒருங்கிணைந்த இந்து சக்தியின் வெளிப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கு
திருப்பூர் மங்கலம் பகுதி நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்

25.11.2020

த. மனோகரன், மாநிலத் தலைவர்
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம்,
#59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. கைபேசி:9841769852

பத்திரிகை அறிக்கை..

கொரோனா நோய் தொற்றின் ஊரடங்கு தளர்வு தற்போது தான் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பலன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

மேலும், 25 ஆம் தேதி நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது.

இதனால் பாதிக்கப்படபோவது ஆட்டோ தொழிலாளர்கள் தான்.

இடதுசாரிகள் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அரசியலாக்க துடிக்கிறது.

மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் உள்ள பிரச்சனைகளை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு, எங்களது அமைப்பு முன் வைக்க இருக்கிறது.

பேரிடர் காலங்களில் மக்கள் இன்னல்களை போக்குவதற்கு ஒவ்வொவரும் முன்வர வேண்டும். இந்த காலச் சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்தமானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

எனவே, 26.11.2020 அன்று இடதுசாரி தொழிற் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளவதில்லை என முடிவு செய்துள்ளது.

அதே சமயம், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரணப் பணியில் பங்கேற்று துயர் துடைக்க ஆயத்தமாகி வருகிறது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி,

என்றும் சேவைப் பணியில்,

த. மனோகரன்
மாநிலத் தலைவர்
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம்

பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்

18.11.2020

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம்..
சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு
`பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்டிட
இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டி, வெள்ளைக்கார கிறிஸ்தவர்களை நடுங்க வைத்த சுதந்திர போராட்ட சிங்கம் வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் இன்று. தியாகி வ.உ.சிதம்பரனார் தனது கடைசி காலத்தில் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தார். அவரது 84வது நினைவு தினத்தை முன்னிட்டு, அப்பகுயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இந்து முன்னணி சார்பில், எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட இருக்கின்ற மெட்ரோ ரயில் திட்டத்தில், வ.உ.சி. அவர்கள் பெரம்பூர் பகுதியில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம், `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் சூட்டிட சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நாடு சுதந்திரம் அடைய தனது சொத்து, சுகங்களை இழந்து தனது முதுமையில் வறுமையில் வாடிய பொழுதும் கலங்காத உள்ளத்தோடு இருந்தவர் வ.உ.சி. நாடு சுயசார்புடன் முன்னேற சுதேசி சிந்தனை அவசியம் என பாரத பிரதமரால் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்தகைய சுதேசி உணர்வால், ஆங்கிலேய வெள்ளையனுக்கு எதிராக சுதேசி கப்பல் இரண்டை வாங்கி செலுத்தியவர் வ.உ.சி.

இந்து முன்னணி சார்பில் இன்று, தமிழகம் முழுவதும் வ.உ.சி. திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அவரது நினைவு போற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(த. மனோகரன்)
மாநில செயலாளர்

ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியை ராக்கெட் ஏவு தளம் அமைக்க விண்வெளி விஞ்ஞானிகள் தேர்வு செய்து உள்ளனர்.

பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் உள்ளதால் ராக்கெட் எரிபொருளும் மிக குறைந்த அளவு தேவை ஆகையால் தான் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்துள்ளோம் என்று தலைமை விஞ்ஞானி பத்திரிக்கைக்கையார் சந்திப்பில் கூறியுள்ளார்.

சாத்தான்குளம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் தற்போது இல்லை.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது…

தற்போது தெலுங்கானா கவர்னராக இருக்கும் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த போது குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்க தொடர்ந்து பாரத மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் 2019 வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பாரத பிரதமர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் அந்த கடிதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைத்தால் நாடு பலனடையும் என மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளம் தொடர்பாக திருமதி.சசிகலா புஷ்பா MP எழுப்பிய கேள்விக்கு விண்வெளி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் பதிலளித்தார்.

அதன்பின் 2019ல நிலம் தேர்வு செய்து அந்த நிலத்தை எடுப்பதற்காக மத்திய அரசு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக களத்தில் இறங்கி இடம் ஆய்வுசெய்து இடத்தை தேர்வு செய்து இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தாகிவிட்டது.

ஆனால் இப்போது மக்களை தூண்டிவிட்டு அதுவும் அப்பாவி மீனவ மக்களை தூண்டிவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக இந்த திட்டத்தை தடுக்க நினைக்கின்றனர்..

மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அரசு உயரதிகாரிகள் அவர்களும் எக்காரணம் கொண்டும் மணப்பாடு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மணப்பாடு ஊருக்கு செல்ல கூடாது. தேச வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி குந்தகம் விளைவிக்கும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மேலும் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் ஓட்டுக்காக சட்ட மன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் அப்பாவி மினவர்களை‌ பகடைக் காயாக பயன்படுத்தி இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றார்.

2019 ஆண்டு ராக்கெட் ஏவு தளம் அமைக்க ஆதரவளித்த திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தற்போது இந்த போராட்டத்தை ஊக்குவித்து வருவது அவரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது…

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டாலும்,கொலை நடந்தாலும், விபத்து ஏற்பட்டு இறந்தாலும், அதனை காரணமாக வைத்து பிண அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ராக்கெட் ஏவு தளம் விஷயத்தில் மௌனமாக இருப்பது ஏன்???

வி.பி.ஜெயக்குமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்,
ராக்கெட் ஏவு தளம் ஆதரவு குழு தலைவர்,
பரமன்குறிச்சி

வெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு கண்டனம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

06.11.2020

தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், நமது பண்பாடு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பதை முன்னிருத்தியும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று முதல் அதன் தமிழக தலைவர் திரு எல்.முருகன் அவர்கள் வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் இருந்து துவங்கி தமிழகம் முழுவதும் செல்ல இருந்த நிலையில், இன்று தமிழக அரசு இந்த யாத்திரையை தடை செய்து திரு.எல்.முருகன் உட்பட ஆயிரக்கணக்கான பேர்களை கைது செய்துள்ளது.

இந்த பாரபட்ச போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தில் தி.மு. க சார்பில் உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையை காட்டி மகளிர் அணி தலைவி கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றார்கள்.

கோவையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கொரோனா வழிமுறையை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அவர்களைத் தடுக்காமல் நல்ல நோக்கத்துக்காக ஒரு ஆன்மீக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட யாத்திரையை அரசு தடுப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு இடம் கொடுக்காமல், பாரபட்சம் பார்க்காமல் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி வணக்கம்
தாயகப் பணியில்



காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்