Monthly Archives: November 2017

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் வாழ்த்து மடல்

உயர்திரு. பாலசுப்ரமணிய ஆதித்தனார் அவர்கள்
தினத்தந்தி நாளிதழ்,
சென்னை.

அன்புள்ள திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களுக்கு வணக்கம்.
தினத்தந்தி நாளிதழ் (75ஆம் ஆண்டு) பவள விழாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த நடுநிலை நாளேடாக என்றும் தினத்தந்தி திகழ்வது பாராட்டுக்குரியது. தமிழை தமிழருக்கு கற்றுத்தந்து, பாமரரையையும் உலக நடப்பு தெரிந்தவனாக ஆக்கிய பெரும் புரட்சியை தினத்தந்தி துவக்கக் காலத்திலிருந்து செய்து வருவதை எண்ணிப் பார்க்கிறேன். எளிய நடை, ஆழமான கருத்து, சிறப்பான வடிவமைப்பு என ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தினத்தந்தி முன்மாதிரியாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.
தினத்தந்தியின் மூன்றாம் தலைமுறை நிர்வாகத்தினராக தாங்கள், உங்கள் பாட்டானாரின் கனவை நினைவாக்குவது பெருமிதம் கொள்ள வைக்கிறது. தற்போது Dt next என்ற ஆங்கில பதிப்பை கொண்டு வந்ததும், தந்தி செய்தி தொலைக்காட்சி, துவங்கிய சில ஆண்டுகளிலேயே அசைக்கமுடியாத இடத்தை பிடிக்க வைத்ததும். இணையதள பத்திரிகையாக வெளியிட்டு வருவது போன்ற தொலைநோக்கு பார்வையுடன் அடுத்த தலைமுறைக்கு தினத்தந்தி கொண்டு சென்றதன் மூலம் பாரம்பரியத்தோடு, நவீன தொழிட்நுட்பம், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சிறந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.
இந்நன்னாளில், உங்கள் பாட்டனார், தந்தை முதலானவர்களின் பன்முகத்தன்மையை எண்ணிப் பார்க்கிறேன். அத்தகையதோர் வளர்ச்சியில் நீங்களும், உங்கள் மகனும் ஊடகத்துறையில் தொடர்ந்து வெற்றி நடைபோட எல்லாவல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வணங்கி, ஆசிர்வதிக்கிறேன்.
தினத்தந்தியின் 75ஆம் ஆண்டு விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொள்வது தினத்தந்தியின் புகழ் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கிறது.
தினத்தந்தி குழுமம் மேலும் மேலும் வெற்றிகள் பல பெற்று தேசத்திற்கு தொண்டாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்