Monthly Archives: February 2017

பட்டாசு தொழிற்சாலையை நசிந்துபோக செய்துவிடாதீர்கள்!! – இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு, 

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

28-2-2017

மத சம்பிரதாயத்தில் தலையீட நீதிமன்றத்திற்கோ, அரசிற்கோ அதிகாரம் இல்லை..

பட்டாசு தொழிற்சாலையை நசிந்துபோக செய்துவிடாதீர்கள்!

பட்டாசு மற்றும் வெடி வெடிப்பது என்பது இந்து மதத்தின் சம்பிரதாயம். தீபாவளி, கோயில் திருவிழா போன்றவற்றில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியம். இது இந்துக்களின் வழிபாட்டில் ஒரு பகுதியாக தென் தமிழகத்திலும், வட தமிழகத்தில் மனிதர்களின் இறுதி ஊர்வலத்திலும் எந்நாளும் நிகழ்த்தப்படுகிறது.
வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் மக்கள்  பட்டாசு தொழிற்சாலைகள் மூலமாகத் தான் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தை வருடம் முழுவதும் பெறுகிறார்கள். இதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்வதில்லை, அவர்களும் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால், இந்தத் தொழிலால் வரி மூலம் அரசாங்கத்திற்கும் ஏராளமான வருவாய் கிடைத்து வருகிறது.
முதலில் தீபாவளிக்கு கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம், தற்போது பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகளின் லைசென்சுக்கு புதிய சட்டத்திருத்தம் அறிவிப்பதன் மூலம் ஒட்டு மொத்த கடைகளும், வியாபாரத்தையும் சீரழித்துவிடும் என அஞ்சுகிறோம். இதன் மூலம் உள்நாட்டு சுதேசி வியாபாரமானது துடைத்தெறியப்பட்டு, சீன பட்டாசு வருகை பெருகிவிடும் என்பது யதார்த்தமான உண்மை.
புதிய வரைவு சட்டமானது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கிவிடும். மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையீடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த நடவடிக்கையால் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
ஆபத்து எதில் தான் இல்லை, பாதுகாப்பிற்குத் தகுந்த வழிமுறைகளை வலியுறுத்தலாம். சில இடங்களில் அசம்பாவித  சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டு ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடக்குவது என்பது எந்தவிதத்தில் நியாயம். இதன் மூலம் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பதையும் இந்து முன்னணி கடுமையாக எதிர்த்து ஜனநாயக வழியில் மக்களை ஒருங்கிணைத்து அறப்போராட்டம் நடத்தும் என எச்சரிக்கிறோம்.
நீதிமன்றங்கள், மக்களின் உணர்வுகளையும், அரசியல் சாசனம் தரும் வழிபாட்டு சுதந்திரத்தை மதித்தும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழப்பது ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
சுதேசி பட்டாசு தொழிலை காத்திட சிவகாசியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இந்து முன்னணி ஆதரித்தது. தமிழக அரசு, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள `வரைவு சட்டத்திருத்த விதி’யை ரத்து செய்து, பட்டாசு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கருத்துகளைக் கேட்டு, நடைமுறைக்கு ஏற்ற சட்ட முன்வரைவை கொண்டு வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

கோபால் ஜி- பத்திரிக்கை அறிக்கை 

24-2-2017

பத்திரிகை அறிக்கை

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் எஸ்.ஆர். சரவண பெருமாள், சு. சிதம்பரம் ஆகியோர் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. எஸ்.ஆர். சரவண பெருமாள் அவர்கள் அகால மரணச் செய்தியை அடுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சு. சிதம்பரம் மறைந்த செய்தி வந்தது. இருவரும் ஆரம்ப காலம் தொட்டே தமிழகத்தில் இந்துத்துவ கொள்கை ஏற்றெடுத்து வளர்த்தவர்கள். தன்னலம் கருதா தொண்டாற்றி முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தூத்துக்குடிச் சேர்ந்த சரவணபெருமாள் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பல பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியவர்.

சு.சிதம்பரம், இந்து முன்னணி தொடங்கிய காலம் தொட்டு சுமார் 20 ஆண்டுகள் பெரும்பணி ஆற்றியவர். இந்து முன்னணியின் அலுவலக செயலாளராக தொடங்கிய அவரது இயக்கப் பணி, இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளராக சிறப்பாக செயலாற்றியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.  பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்று பல பொறுப்புகளை வகித்து வந்தார்.

இருவரது மறைவுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களது திடீர் மறைவால் வருத்தமுறும் இயக்க சகோதரர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இந்து முன்னணி ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவர்கள் இருவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

தன்மானம் காத்த தாணுலிங்க நாடார் 

தாணு லிங்க நாடார்

  • 17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
  • இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
  • 1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
  • 1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  • 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
  • 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
  • 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
  • 1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
  • 1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
  • 14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
  • 16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
  • 13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
  • 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
  • 13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
  • 2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
  • 1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்தநாள்-சமுதாய சமர்பண தின விழா 

தாணு லிங்க நாடார்

வாழ்கைத் துளிகள்

  • 17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
  • இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
  • 1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
  • 1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  • 1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
  • 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
  • 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
  • 1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
  • 1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
  • 1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
  • 14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
  • 16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
  • 13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
  • 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
  • 13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
  • 2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
  • 1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த RSS ஸ்டாதாபகர் டாக்டர் ஜி அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.
  • அவரது பிறந்த நாளை இந்துமுன்னணி பேரியக்கம் சமுதாய சமர்பண தின விழாவாக அனைத்து கிளைக்கமிட்டி களிலும் நடத்தி  வருகிறது. 
  • தேசத்திற்காக நமது வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு கூறப்படுகிறது. 

HINDU JAGRAN MANCH MEETING 

Hindumunnani called Nation vice as HINDU JAGRAN MANCH.  It’s yearly gathering held in MANGALURU. 

Office bearers (pranth karya karini) of all the states participated in this meeting. 

RSS  Akil Bharathiya Vyavastha pramukh (treasurer)  Sri. Mangesh ji,  Akil Bharathiya Bouthik pramukh (ideology) Sri. Swantharanjan ji, Hindu JAGRAN akil bharathiya sahyojak(coordinator) Sri. Ashok Prabhakar ji, Akil bharathiya sah sahyojak Sri. Kamlesh Ji and other akil bharathiya dignitaries preceded the meeting. 

State President Sri. Subramaniam ji,  State Organizer Sri.  Bakthan ji,  State General Secretaries Sri. Muruganandham, Sri. Arasuraja, Sri. Parameswaran ; State vice president Sri. Jayakumar, Sri. Karthikeyan and other state officers attended the meeting. 

Various issues discussed to make reach of the organization in each and every part of our Country. 

இந்து முன்னணி மீது பொய் குற்றச்சாட்டு கூறும் மதவாத, பிரிவினைவாத அமைப்புகளைக் கண்டிக்கிறோம்  – வீரத்துறவி   

அரியலூர் சிறுகடம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற பெண் மானபங்கப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என சிலரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன், முன்பு இந்து முன்னணியின் பஞ்சாயத்துப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதைக் காரணம் காட்டி இந்து முன்னணி அமைப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்திட இஸ்லாமி அமைப்புகள், கட்சிகள், தி.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவை முனைவதை வன்மையாக் கண்டிக்கிறோம்.
இந்த வழக்கு சம்பந்தமான செய்தி வெளியிட்ட ஊடகங்கள், அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் முன்பே இந்து முன்னணி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளன. இருந்தும் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களிலும், பத்திரிகை அறிக்கைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இந்து முன்னணி பேரியக்கத்தை சம்பந்தப்படுத்தி இஸ்லாமிய அமைப்பினரும், இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சினர் பேசிவருவது உள்நோக்கம் கொண்டது. பொய் பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை இந்து முன்னணி அணுகியுள்ளது.

இந்து முன்னணி பேரியக்கம் இந்து சமுதாய ஒற்றுமைப்பணியிலும், தேசியப் பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றிவருகிறது. எந்த ஒரு தனிநபரின் குற்றச் செயலுக்கும் இந்து முன்னணி அமைப்புத் என்றும் துணை போனது இல்லை என்பது காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் நன்கு தெரியும்.

அரியலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டவும், வன்முறையை ஏற்படுத்தவும் தி.க. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி பொன்பரப்பியில் பொதுக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யதுள்ளதாகத் தெரிகிறது. இக்கூட்டத்திற்கு வெளியூரிலிருந்து ஆட்களைக் கொண்டுவர முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளாக அறிகிறோம். எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. 

முஸ்லீம் அமைப்புகள், தி.க., விடுதலை சிறுத்தை உள்பட சில அமைப்புகள் இந்து முன்னணி மீது குற்றம் சுமத்திவருவதை இந்து முன்னணி கண்டிக்கிறது. மேலும் இவ்விஷயத்தில் சட்டரீதியாக பொய் குற்றம் சாட்டு சுமத்துவோர் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


இளைஞர்கள் எழுச்சியாக இருந்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் – கங்கை  அமரன்

இந்துமுன்னணி இளைஞர் பிரிவான இந்து இளைஞர்  முன்னணி நடத்திய, தேசிய இளைஞர் தினம் முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழா கருத்தரங்கு நிகழ்வில் பேசிய பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் குல தெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமான விஷயம் என்றார்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முன்னேற்றம் அடைய இளைஞர் எழுச்சி பெற வேண்டும் என்றார். 

இந்த   விழாவில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநி செயலாளர் கிரண்குமார் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .