Tag Archives: #அராஜகம்

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம்

06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை

30.04.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தற்போது கொரோனா
காரணமாக144
லாக்டவுன்
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்சிறையில்
சிறைவாசிகளை
சந்திக்கும்
நேர்காணல் மற்றும்
வழக்கறிஞர்கள்
நேர்காணல் தடை
செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை காணமுடியாத
சூழ்நிலையில் சிறைவாசிகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது
இயல்பு.

இத்தகைய நேரத்தில்
சிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின்
கடமை.

அதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்
சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி
கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில்
இந்து சிறைவாசிகளை
கொடுமைப்படுத்துவதும்
தனிமைச்சிறையில்
அடைப்பதும் வாடிக்கையாக
இருந்தது.

சிறைத்துறை அதிகாரிகளிடம்
இந்துமுன்னணி பேச்சுவார்த்தை
நடத்தி இந்து கைதிகளுக்கு
பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை
முஸ்லீம் சிறைவாசிகளுக்கு
செய்து தந்த செளகரியங்கள்
ஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்
ரம்ஜான் காலங்களில்
பிரியாணி செய்ய அனுமதிப்பது என
தாராளம் காட்டியது.

இந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்கு
தடைவிதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .
காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி
பண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .

மேலும் கைது செய்யப்பட்டு
சிறைக்கு செல்லும் சிறைவாசிகளை
சோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்
கான்விக்ட் வார்டன்கள்
கடுமையாக தாக்குவது
என பல்வேறு கொடுமைகளை
அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம் .

சென்ற மாதம் கோவையில்
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்
RSS நிர்வாகி சூரிஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம்
சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க
சலுகை வழங்குகிறது
சிறைத்துறை .

அதே சமயம் கடந்தமாதம்
கைது செய்யப்பட்டு
குண்டர்சட்டத்தில்
அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை
தனிமை சிறையில்
அடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.

எனவே கோவை மத்திய
சிறையில் நடைபெறும்
மதரீதியான
பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும்,சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக
விரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து
கொள்கிறோம்.

சிறைத்துறை வார்டன் பூபால்
அவர்கள் முஸ்லீம்களால்
தாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து
சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம் இந்துமுன்னணி.
இதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி
கேட்டுக் கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345