Monthly Archives: July 2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மத பாகுபாடு பார்த்து மின் கட்டணமா? – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம்! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

11.07.2020

மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் – சரி செய்யாவிட்டால் கண்டனப்போராட்டம் நடைபெறும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மதப் பாகுபாடு பார்க்கின்றார்கள் என்பது இந்து முன்னணியின் தொடர் குற்றச்சாட்டு.

உதாரணமாக தமிழகத்திலுள்ள கோவில்களை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகின்றது. கோவிலில் வருகின்ற வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கின்றது .

முஸ்லிம்களின் மசூதி ,தர்கா ,கிறிஸ்தவர்களின் சர்ச் இவர்களுடைய வருமானத்தில் அரசு கை வைப்பதில்லை .

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மத பாகுபாடு பார்த்து கட்டணங்களை வசூலித்து வருகின்றது .

அரசுக்கு வருமானம் தராத சர்ச் மசூதிகளுக்கு சாதாரண கட்டணம் 120 யூனிட்டுக்கு 2 ரூபாய் 85 பைசாவும், 500 யூனிட்டுக்கு மேல் 5 ரூபாய் 75 பைசாவும் வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் நிர்வகிக்கும் கோவில்களுக்கு அதிகபட்சமாக எட்டு ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பது என்பது பாரபட்சமானது.

மதசார்பற்ற அரசாங்கம் அனைத்து மதத்தையும் ஒரே மாதிரி பார்ப்பதுதான் சரியானது. ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தினால் பெரும்பான்மையிடம் அதிக கட்டணம் வசூலித்து அவர்களுக்கு கொடுப்பது வேதனைக்குரியது.

தமிழக அரசாங்கம் ஹிந்துக்களை மட்டும் ஓரவஞ்சனையாக நடத்துகிறது என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகின்றது ,வன்மையாக கண்டிக்கின்றது.

இதை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும் அனைத்து இந்து கோயில்களுக்கும் மின்கட்டணச் சலுகை வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கும்.

அனைத்து மின்சாரத்துறை அலுவலகம் முன்பும் இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி! வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநில தலைவர்

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

01.07.2020

கொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு குறிப்பாக கோவில்களைத் திறப்பது உள்ளிட்ட விஷயங்களில் தமிழக அரசு மெத்தனம் காட்டிவிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் பீதியில் , மன உளைச்சலில் உள்ளனர். பல தற்கொலைகள் இதன் காரணமாக நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஏதாவது பாதிப்பு என்றால் மனிதன் கடவுளை நாடித்தான் தீர்வு காண்பான். இதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிகம் இருக்கிறது. அதற்கு காரணம் கோவில்கள் தமிழகத்தில் திறக்கப்படாததுதான் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கோவில்கள் திறந்திருந்த பல மாநிலகளில் இன்று கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்த சமயத்தில் முழு முதற்க் கடவுள் விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் வழிபாடு எத்தகைய கடும் பிரச்சினைகளையும் தீர்க்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்துக்கள் அனைவரது வீட்டிலும் இது கொண்டாடப் படும். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவில்லை என்றால் தெய்வகுற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதும் மிகப் பெரும் நம்பிக்கை. கொரோனா நீங்க வேண்டும் என்றால் கட்டாயம் கடவுள் அனுக்கிரகம் தேவை.
ஆகவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொள்ளவேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது.
அதே சமயம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க ஏற்பாடுகளுடன் எளிமையாக நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் விநாகர் சதுர்த்தி முலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். வியாபார புழக்கம் பெரிய அளவில் ஏற்படுகிறது. கிராமியக் கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள், விநாயகர் திருமேனி செய்பவர்கள் வாகன ஓட்டுனர்கள் இப்படியாக பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடியது விநாயகர் சதுர்த்தி ஆகும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கம் இந்த வருடம் கொரோனாவை விரட்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை சிறப்பாக எளிய முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா ஊர்வலம் சிறப்பாக கொண்டாடுவதில்லை என இந்து முன்னணி முடிவெடுத்துள்ளது.
பாரத பிரதமரின் அறிவுரையின் படி எளிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவிற்கான தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாடுவதென முடிவெடுத்துள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொது மக்களிடம் நன்கொடை வாங்குவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது.
எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதர்கான வழிமுறைகளை ஏற்படுத்தி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தி விநாயகரிடம் முறையிட, கொரோனாவை விரட்ட, விழா சிறப்பாக நடத்த தமிழக அரசு வழிகாட்டி உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணிகளில்

காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்