Monthly Archives: March 2018

வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – இசைஞானி இளையராஜா அவர்கள் மீது புகார் தெரிவிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது

சிலநாட்கள் முன்பு, நிகழ்ச்சி ஒன்றில், இசைஞானி இளையராஜா அவர்கள், ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்ற ஒரு ஆவணப் படத்தைப்பார்த்தேன். ஆனால், உண்மையில் உயிர்தெழுந்தவர் மகரிஷி ரமணர் அவர்களே எனக் கூறினார்.

கிறிஸ்தவ மதத்தில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பது கிறிஸ்தவ நாடுகளிலேயே ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டு உள்ளது. இசைஞானி இளையராஜா அவர்கள் அத்தகைய ஒரு செய்தியை, தான் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வு உண்மையில் நமது தமிழ்நாட்டில் ரமண மகரிஷி வாழ்வில் நடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார் இளையராஜா அவர்கள். ஏசு குறித்து அவர் விமர்சனமோ, தனிப்பட்ட கருத்தோகூட தெரிவிக்கவில்லை.

மகாத்மா காந்திஜி, இயேசு கிறிஸ்துவ என்பவர் கண்ணுக்கு தெரியாத பரம்பொருளாக விளங்குகிறார் என்று நீங்கள் நம்பச் செய்கிறீர்கள். ஆனால், நான் முயற்சி எடுத்து, புரிந்துகொண்ட வரையில் அதில் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது, என்று அவர், கிறிஸ்தவ பாதிரிக்கு எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்தில் விடப்போவதாக வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் அறிஞர் கலிலீயோ, உலகம் உருண்டை என்று கண்டுபிடித்து சொன்னார். பைபிளில் உலகம் தட்டை என்று இருப்பதற்கு இது எதிரானது எனக் கூறி, மதநம்பிக்கையை குலைக்கும் கருத்தை தெரிவித்தார் என அவருக்கு விஷம் கொடுத்து கொன்றனர் கிறிஸ்தவ பாதிரிகள். சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலைக்கு, கிறிஸ்தவ மதகுருவான போப் அவர்கள் மன்னிப்பு கோரினார். அறிவியல் உண்மையை கூறிய ஒருவரை கொன்றதற்குக்கூட சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதக்குரு மன்னிப்பு கேட்டது கேலிக்கூத்தானது. பைபிளில் உள்ளது என்பதால், உலகம் தட்டையாக இல்லையே!

கிறிஸ்தவர்கள், நாள்தோறும், வீதிதோறும் சட்டவிரோதமாக, இந்து தெய்வங்களை சாத்தான் என்றும், இந்துக்களை பாவிகள் எனப் பிரச்சாரம் செய்து வருவது எந்த வகையில் நியாயம்? மற்ற மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் கிறிஸ்தவர்கள், தங்கள் மதமான கிறிஸ்தவத்தின் நம்பிக்கை பொய் என வெளியிட்ட விஷயத்தை கூறியதற்கு இசைஞானி இளையராஜாவை ஏன் கண்டிக்க வேண்டும்? ஆர்ப்பாட்டம் ஏன் நடத்த வேண்டும்?

இந்துக்கள் வணங்கும் ஆண்டாளை, தாசி என்று, உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்து, அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியதுடன், பகுத்தறிவாதிகள் இதனை ஏற்பார்கள் என கூறினார் வைரமுத்து. இந்த பொய்யான, அபாண்டமான கருத்தை இந்து முன்னணி கண்டித்தது. இதற்குக்கூட ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இது கருத்துரிமையை முடக்கும் செயல் என வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய கருத்துரிமைவாதிகள் இளையராஜா விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?

இந்த இரட்டை வேடத்திற்குக் காரணம் கோழைத்தனம், அல்லது விலைபோய்விட்டனர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

கிறிஸ்தவர்கள், மற்ற மதங்களின் மேல் செய்யும் வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்த்து பல ஊர்களில் இந்து முன்னணி தொடர்ந்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும், பிரச்சாரம் செய்தவர்களை பிடித்துக்கொடுத்தும் வருகிறது. சட்டவிரோத சர்ச்/ ஜெபக்கூடங்களை அகற்ற உயர்நீதி மன்றம் உத்திரவிட்டதைச் சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது தமிழக அரசு, காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிறிஸ்தவ அமைப்புகள் இசைஞானி இளையராஜா மீது கொடுத்துள்ள புகார் முறையற்றது, கண்டிக்கத்தக்கது என இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.

மதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்- மாவட்டம் தோறும் நடைபெறும்

தேதி 21.03.18, புதன்

மதவெறியை மாய்ப்போம்

1. சட்டவிரோதமாகவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகளை அகற்றக் கோரியும்,

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன் அவர்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்தக் கோரியும்,

3. இந்துக்கள் வாழ்கின்ற பகுதியில் மதமாற்றம் செய்வதற்காக இந்து மதத்தை இழிவு படுத்தியும், இந்து கடவுள்களை பேய், பிசாசு என்று கூறி அவதூறு செய்வதை கண்டித்தும்,

4. சிறுவயது இந்து குழந்தைகளுக்கு போட்டி என்ற பெயரில் சாக்லெட் கொடுத்து மூளைச் சலவை செய்து மதத்தை பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்தும்,

5. இவர்களுக்கு துணை போகும் நயவஞ்சக, இந்து விரோத அரசியல் வாதிகளை கண்டித்தும்

21 மார்ச் 2018 (வியாழக்கிழமை) அன்று
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை  விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2.
தொலைபேசி : 044 28457676
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
16.3.2018
பத்திரிகை அறிக்கை
மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை
விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம
இந்து முன்னணி பேரியக்கம், அச்சுறுத்தி, ஆசைகாட்டி மோசடியாக செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கும் முக்கிய பணியை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சட்டவிரோத கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று பிரசங்கம் செய்து மதமாற்றத்தை செய்து வருகின்றன. சிறு குழந்தைகளை அழைத்து சென்று அவர்களிடம் பொய்யான கதைகளைக் கூறி, சிறுவயதிலேயே மதம் மாற்றுகின்றனர். இச்சட்டவிரோத மோசடி ஜெபக்கூடங்களின் மீதும், அந்த ஜெபக்கூடங்களுக்கு வரும் நிதி ஆதாரம் குறித்தும் மாவட்டந்தோறும், தாசில்தார் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வரையும், காவல்துறையில் இன்ஸ்பெக்டர் தொடங்கி டி.ஜி.பி. அலுவலகம் வரையிலும் நூற்றுக்கணக்கானப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை. மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை இந்துக்கள் தடுக்கும்போது மட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மதச் சுதந்திரம் பறிபோயிற்று என்று போலி மதமாற்ற சக்திகளும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் கூப்பாடு போடுகின்றன.
மதுரையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி சட்டவிரோத ஜெபக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று (11.3.2018) மதுரையின் ஒருபகுதியில் இவ்வாறு நடைபெறும் சட்டவிரோத ஜெபக்கூடமொன்றில் 6,7,8 வயதுடைய இந்து சிறுமிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, இந்து கடவுள்களை சைத்தான்கள், அவை உங்களுக்கு கெடுதல்களை செய்யும் என பயமுறுத்தி, நீங்கள் ஏசு ஒருவரையே வணங்குகள், அவரே உங்களைக் காப்பாற்றுவார் என ஹிப்னாட்டிஸம் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் அச்சத்தில் அலறித்துடித்து கத்த துவங்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி பொது மக்கள், இந்து முன்னணியினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த இந்து முன்னணியினர், பொதுமக்கள் இணைந்து ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த அறையை திறந்தவுடன் குழந்தைகள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். உண்மையில் நடந்தது இதுதான்.
அப்பகுதியில் இந்த செய்தி பரப்பரப்பானதால், இனி இந்த இடத்தில் மோசடி மதமாற்ற ஜெபக்கூடத்தை நடத்த முடியாது, இதனால் வெளிநாட்டு நிதியும் கிடைக்காது என பயந்த பாதிரிகள் திட்டமிட்டு, பிரச்னையை திசைத்திருப்பியுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மறைமுகமாக மாறிய மதிமுத தலைவர் வைகோவும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், உண்மையை மறைத்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்து முன்னணியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இந்து விரோத சக்திகள் இத்தகைய அரசியல்வாதிகள் மூலம் அரசை நிர்பந்தப்படுத்தி இந்து முன்னணியினர் மீது பொய் வழக்குப்போட்டு கைது செய்ய வைத்துள்ளனர்.
மதுரையில் இந்த சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களை தடை செய்யக்கோரி கடந்த மாதம் மதுரை காவல்துறை கமிஷனர், மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேதகு ஆளுநர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இப்புகார்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நேற்று (15.3.2018) அரசு நிர்வாகம் இந்து முன்னணியினர் மீது நடவடிக்ககை எடுப்பதில் மட்டும் போர்கால அவசரத்தில் செயல்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்?
இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சட்டவிரோத ஜெபக்கூடங்களை அகற்ற அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 21.3.2018 புதன் கிழமை அன்று இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சதி செய்து தமிழகத்தின் முக்கிய ஊர்களில், முக்கிய இடங்களில் சர்ச்சுகளை கட்டி விட்டு சென்றனர். அந்த இடங்களில் இன்றும் பிரார்த்தனைகளை கிறிஸ்தவர்கள் நடத்தி வருகின்றனர். யாரும் இதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. ஆனால், பணத்தாசையாலும், மதவெறியாலும், சட்டவிரோத மோசடி மதமாற்றம் செய்யும் ஜெபக்கூடங்களின் மதமாற்ற முயற்சிகளைத்தான் இந்துக்கள் எதிர்க்கிறார்கள்.
ஆகவே, அரசு உடனடியாக சட்டவிரோத மோசடி மதமாற்ற ஜெபக்கூடங்களைத் தடை செய்ய வேண்டும். மோசடி மதமாற்றத்திற்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வரும் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட்கள் மீது அரசு கடும் நவடிக்கை வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

வைகோ அடக்கி வாசிக்க வேண்டும்! மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…

இந்துமுன்னணி ஊழியர்களை தரக்குறைவாக பேசும் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ வன்முறை சம்பவங்கள் குறித்து வாய் திறவாமல் எங்கே சென்றார்?

குரங்கனி மலை தீ விபத்து நக்ஸல் அமைப்புகளின் திட்டம் என இந்துமுன்னணி கருதுகிறது…

மதுரை இந்துமுன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக தேனி #குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

11.10.18

நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்துமுன்னணி மாநில தலைவர் திரு. #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
1. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இயக்க வேலைகளை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்டல பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

2.மேலும் விவசாயி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் மானத்தை தலைநகரில் வாங்கிய அய்யாக்கண்ணு திருச்செந்தூர் கோவிலில் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விதத்தை கண்டித்தார்.
3. ஈவேரா பிரச்சனையில் வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளை கண்டித்தார்.
4. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..

வைகோ, திருமாவளவன்
சீமான் போன்றோர் ஒன்றாக
சேர்ந்து ஒரு தேதி குறித்து
அறிவித்துவிட்டு இந்து
கோயில்களை இடிக்கவரட்டும்
இந்து முன்னணி
மாநில தலைவர்
காடேஸ்வரா C. சுப்ரமணியம்
கோவையில் சவால்

கோவையில் பாஜக அலுவலகம்
மீது பெட்ரோல் குண்டு வீசபட்ட
இடத்தில் பார்வையிட்ட
செய்தியாளர்களை சந்தித்த
அவர்பெரியார் வினை
விதைத்ததன் விளைவு தான்
தற்போது நடைபெற்று வருகிறது.

* H.ராஜா தனி மனிதர் அல்ல
அவருக்கு பின்னால்
இந்து முன்னணி துணை நிற்கும்.

* திரிபுராவில் கம்யூனிசம் தோற்றது
போல் தமிழகத்திலும் திமுக
மற்றும் அதிமுக காணாமல்
போய்கொண்டு இருக்கிறது.
கிறித்துவ, முஸ்லிம் மற்றும்
நக்சலைட்கள் இவர்கள்
பின்னனியில் இருந்து
தமிழகத்தில் ஒரு கலவரத்தை
தூண்ட முயற்சித்து வருவதாக
குற்றம் சாட்டினார்.

* பாரதிய ஜனதா கட்சி
அலுவலகத்தில் தொடர்ந்து
தாக்குதல் நடைபெறுவதாகவும்,
இந்து முன்னணியினரை
அமைதி காக்க கூறியதால்
வன்முறைகள் ஏதும் நடக்காமல்
கட்டுக்குள் இருப்பதாகவும்
எனவே இதன் பின்னணியில்
யார் உள்ளார்கள் என்பது
குறித்து காவல் துறை விசாரிக்க
வேண்டும் என கேட்டு கொண்டார்.

* திருமாவளவனுடன் சேர்ந்து
வைகோ, திருமுருகன்காந்தி,
நாம்தமிழர் கட்சியினர் போன்றோர்
கோவிலை இடிக்க வரட்டும் எனவும்
அப்போது இந்துக்கள்கையை
வெட்டுவார்களா வேறேதும்
வெட்டுவார்களா என தெரியும்
என வைகோவிற்கு
பகிரங்க சவால் விடுத்தார்.

பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..  இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
7-3-2018
பத்திரிகை அறிக்கை
பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீச்சு..
இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
ஜனநாயகத்தில், கருத்திற்கு எதிர் கருத்து தெரிவிப்பது என்பதைத் தாண்டி வன்முறையை தூண்டி, தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் தீய சக்திகளின் கை ஓங்கி வருகிறது. இப்படி பேசுகிறவர்கள், மனிதம், மனித உரிமை பற்றியும், ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் பற்றியும் பேசுவது வேடிக்கையானது!
நேற்று இரவு கோவையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் அருகில் நடந்து சென்ற வயோதிகர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பூணூல், குடுமியை அறுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியிருக்கிறார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவு பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.
இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூர செயல்கள், தமிழகத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு செல்கிறது.
இத்தகைய நடவடிக்கைகளை, எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை. அப்படியானால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் வன்முறையைக் கட்டவழித்துவிட திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான ஒத்திகையாகக்கூட இது நடந்திருக்கலாம். காரணம், தமிழக ஆட்சியின் கைப்பிடி தளர்ந்துள்ளதை பயன்படுத்திக்கொள்ள எல்லோரும் முயலுகிறார்கள். அதில் ஒரு பகுதிதான், பிரிவினைவாத, பயங்கரவாதத்தை அரவணைக்கும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் நடவடிக்கைகளாக இருக்கின்றன.
எனவே, இதுபோன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை, காவல்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கும், பெட்ரோல் பாம் போன்ற ஆயுத கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)