Monthly Archives: April 2016

உள்துறை அமைச்சரை சந்தித்தார் வீரத்துறவி

தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஜிகாதி பயங்கரவாதத்தைத் தடுக்க NIA விசாரணை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.

ஹிந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு இராம கோபாலன் அவர்கள் 14-4-2016 அன்று காலை 11 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்  அவர்களை, புது தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தமிழக ஜிஹாதி படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத சம்பவங்கள் குறித்த, ஆங்கில ஆவணப்படத்தை திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் அளித்தார். இந்த ஆவணப் படங்கள் கடந்த பிப்ரவரி 21 அன்று தமிழில் வெளியிடப்பட்டது.

ஆவணங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஜிகாதி சம்பவங்கள் மீது NIA விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்  உறுதியளித்தார்.

image

வீரத்துறவி – மத்திய இணையமைச்சர் சந்திப்பு

வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் இன்று மத்தியஉள்துறை இணையமைச்சசர் திரு.கிரண்ரிஜிஜூ அவர்களை சந்தித்து தமிழகத்தில் ஜிகாதி பயங்கரவாவாதம் அதிகரித்துள்ளதுபற்றி கூறி அதன் மீது NIA விசாரணைநடத்த வலியுறுத்தினார்.
The founder Organiser of HINDUMUNNANI Sri. Rama. Gopalan ji met the MINISTER OF STATE FOR HOME AFFAIRS  Sri. KIRAN RIJUJU and asked for a probe in JIHADI EXTREMISM(terrorism) in tamilnadu

image