Monthly Archives: February 2020

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி

29.02.2020

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது..

பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் காட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்துகொள்வதை காண்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப்பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களிடம் உள்ள

சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகப் பணியில்

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற கோரி போராட்டம் துவங்கியது- பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த திட்டம்-மாநிலத் தலைவர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற
கோரி காலவரையற்ற போராட்டம் துவங்கியது.திருப்பூரில் இந்துமுன்னணியின் தலைமையில் இந்துக்களின்
போராட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.சட்டவிரோதமாக பங்ளாதேஷ்
நாட்டை சேர்ந்த
முஸ்லிம்கள்
சுமார் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் ஊடுருவியுள்ளனர்.அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை இந்தப்
போராட்டம் காலவரையின்றி
தொடரும் எனவும் இதேபோல்
மேலும் பல மாவட்டங்களில்
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்துக்களே ஒன்று சேருவோம்..
இப்போது இல்லை என்றால்
எப்போதும் இல்லை.

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்

இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சாதி கட்சிகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுபவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அரங்கேறி வரும் சூழலில்,நெல்லையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அரஜாகத்தின் உச்சமாக கடையை பூட்டு போட்டு வெளியூரில் இருந்து சில பயங்கரவாதிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளனர், இதில் கொடுமை என்னவென்றால் அந்த பகுதியில் வியாபாரம் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்சனை என்றால்தான் வரும் ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுக்க கட்சியாவது மண்ணாங்கட்டியாவது தன்மானமே முக்கியம் என கூறி அங்கு கடைவைத்திருந்த கடையின் உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என கட்சி பாராமல் இந்துக்கள் என்ற ஒற்றுமையுடன் இணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.இந்த சூழலில்தான் மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாதிகள் இன்றி சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டுருக்கிறார்கள்.இனி நெல்லையில் ஒற்றை இஸ்லாமிய கடைகளில் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும், எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.
மேலும் அங்கு இந்து அமைப்பு சார்பில் வணிகர் சங்கம் உருவாக்கப்படும் என்றும் இனி இந்துக்கள் கடைகளில் வியாபாரம் செய்வோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பாதிக்கப்படும் போது உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் – சமுதாய சமர்ப்பண தினம் – செயலையும், செல்வத்தையும் தந்து தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

இந்து தர்மத்தையும் , தேசத்தையும் காக்கும் பணியை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை, நிலங்களை, குளங்களை மீட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிறித்துவ மோசடி மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது .

பிரிவினைவாதிகளால் தேசத்திற்கு ஆபத்து நேரிடும் போதும் , இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் போதும் நேரிடையாக களத்தில் இறங்கி போராடிவருகிறது .

தன்னலம் கருதாத பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கமாக இந்து முன்னணி இயங்கி வருகிறது.

இதுபோன்று பல்வேறு வகையில் இந்து தர்மத்தை பாதுகாக்கக்கூடிய பணிகளை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தங்களைப்போன்ற நல்லோர்களின் ஆதரவைக் கொண்டு இந்து தர்மத்தைக் காக்க இந்துமுன்னணி பாடுபட்டு வருகிறது.

இந்துமுன்னணியின் முதல் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினத்தை சமுதாய சமர்ப்பணதினமாக கொண்டாடி வருகிறோம் .

நாம் நமது சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .

எனவே , தங்களது ஆக்கப்பூர்வமான செயலையும், செல்வத்தையும் தந்து இந்த தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

தாங்கள் சமர்பிக்கும் நிதி….

1. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதியில் இயங்கி வருகின்ற பாரதியார் குருகுலம் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கின்ற 76 குழந்தைகளின் படிப்பிற்கும், பராமரிப்பிற்கும் செலவிடப்படுகிறது.

இவர்களுக்கு உணவு அளிக்க விரும்புவோர் தாங்கள் அளிக்கும் நிதியை Bharathiyar Gurukulam Trust என்னும் பெயரில் DD / Check ஆகவும் அளிக்கலாம்.

(ஒரு வேளை உணவு செலவு ₹2000, ஒரு நாள் உணவு செலவு ₹5000, ஒரு மாத உணவு செலவு ₹ 1,50,000)

2 . இந்து சமுதாயத்திற்காக இந்து முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேரமாக பணியாற்றும், முழு நேர ஊழியர்களின் அடிப்படை செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. 84 முழுநேர ஊழியர்கள் தர்மம் காக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களை பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

3. குழந்தைகளுக்கு நமது இந்து தர்மத்தை போற்றும் பண்பாட்டு வகுப்புகள் நடத்த செலவிடப்படுகிறது.

4. கோசாலைகளுக்கு வரும் வயதான பசுக்களை பராமரிக்க செலவிடப்படுகிறது.

5. இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக ஜக்கத் என்ற பெயரில் தனது வருமானத்தை கொடுக்கிறார்கள். கிறிஸ்துவர்களும் தனது வருமானத்தில் தசமபாகம் எனும் பெயரில் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக கொடுக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தை மேம்படுத்த ஒவ்வொரு இந்துவும் இயன்றதை செய்வோம்.

இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் DGP க்கு கடிதம் – சட்டவிரோத போராளிகளினுடைய PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யவேண்டும்.

சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய , மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது .

இந்த போராட்டங்களை இனிவரும் காலங்களில் ஓரளவுக்கு கட்டுபடுத்த வேண்டுமானால் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்படும் நபர்களின் பெயர் விபரங்களை CCTNS பதிவேட்டில் எற்றினால் பிற்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு , கடவுசீட்டு , விசா , தனியார் துறை வேலைக்கான PCC சான்றிதழ் , NOC சான்றிதழ் , ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசியபணிகளில் அவர்களுக்கு தடை ஏற்ப்படும் .

எனவே PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யப்படவேண்டும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதற்கு பயந்து தவறான போராட்ட களத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கமாட்டார்கள் .

ஆகவே தாங்கள் விரைந்து போராட்டத்தில்ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழகத்தை மீண்டும் அமைதி பூங்காவாகமாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் .

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் இந்துமுன்னணி என்றும் பக்க பலமாய் இருக்கும்

அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .

பாதுகாக்கும் காவல் துறைக்கு ஒரு பாதிப்பு என்றால் எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?

அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும் . ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?

அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே…!
பொறுத்தது போதும் .

காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள், என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.

காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ….
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!

இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா? என்று புரியவில்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் .
#இந்துமுன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .

உங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றோம்…..

தமிழக காவல்துறைக்கு பயமா? – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கேள்வி

தமிழக காவல்துறைக்கு பயமா? இல்லை தமிழக முதல்வர் வாய்மொழி உத்தரவாக காவல்துறைக்கு உத்தரவு போட்டு உள்ளதா?

இஸ்லாமியர்களுடைய அராஜகம் நாளடைவில் வலுத்து வருகிறது இது நல்லதல்ல.

காவல்துறை அதிகாரிகள் மனநிலை பாதிக்கப் படுவார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்களே காவல்துறையினர் கை விலங்குகளை அவிழ்த்து விடுங்கள், இல்லையேல் அவர்களே உடைப்பார்கள்.

வி.பி.ஜெயக்குமார்,
இந்து முன்னணி துணைத் தலைவர்,
பரமன்குறிச்சி

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.