Monthly Archives: June 2020

இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி

28.06.2020

கே.இராமமூர்த்தி மாவட்ட பொதுச்செயலாளர் இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் அதியமான் என்ற இடத்தில் கோவிலை சர்ச் ஆக மாற்றியுள்ளதாக முகநூலில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இப்படி ஒரு சம்பவம் இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை.
இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறப் போவதும் இல்லை.

ஆகவே இது சம்பந்தமான உண்மையான தகவலை தெரியப்படுத்தினால் இந்து முன்னணி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கே. இராமமூர்த்தி
மாவட்ட பொதுச்செயலாளர் இந்துமுன்னணி, இராமநாதபுரம்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.

27.06.2020

வி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம்

சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

அதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

இரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள் ?

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா ?

இந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா?

தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?

இன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் ?

குற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் ?

திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் ?

முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா ?

அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா?

மரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே

சாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது

இரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி

நயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .

17.06.2020
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

உலகத்தையே கபளீகரம் செய்ய துடிக்கும் நாடு சீனா. திபெத்தை,ஹாங்காங்கை தற்போது விழுங்கி விட்டது. நேபாளத்தை கபளீகரம் செய்ய மறைமுகமான கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.

1962ல் நேருவை ஏமாற்றி, நேரு- சூ என்லாய் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காயும் முன் இந்தியா மீது படையெடுத்து பல சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை பிடித்து தன்வசமாக்கி முதுகில் குத்தியது.

கரோனா வைரஸ் உருவாக்கி உலகமெங்கும் பரப்பி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக இருப்பதற்கு பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆதரவும், சீனா ஆயுதம் வழங்குவதும் தான்.

கம்யூனிஸ்டுகள் மூலம் இந்தியாவை கபளீகரம் செய்ய திட்டமிட்டு சதி செயல்களை நீண்டகாலம் செய்து வருகிறது.

தற்போது உலகின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இந்தியாவோடு சமாதானம் பேசிக் கொண்டே இந்திய வீரர்களைக் கொன்றுள்ளது.

இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது .சீன பொருட்களை இலவசமாக கொடுத்தால் கூட வாங்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய தருணம் இது.

சீனாவை எதிர்த்து கண்டன குரல் தமிழகம் முழுவதும் எழுப்புவோம் கிளைகள் தோறும் கண்டன நிகழ்ச்சி நடத்தி சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி எடுப்போம்.

இந்திய நாட்டிற்காக இன்னுயிர் தந்து வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.

தாயக பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

12.06.2020
பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை.
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை.

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் சில ஊர்களின் பெயர்கள், அவர்களுக்கு வாயில் உச்சரிக்க வராததால், அவர்களுக்கு ஏற்ப பெயர் கொடுத்தனர்.

நீண்ட பாரம்பரியம் மிக்க ஊர்களின் பெயர் கூட மருவி ஆங்கிலேயர் உச்சரிப்புகளில் வழங்கி வந்தன. அதாவது தஞ்சாவூர் என்பது TANJORE என்று அழைக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மீண்டும் ஊர்களின் பெயர்களை மாற்றியமைத்துள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கம் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் மிக நீண்ட பாரம்பரியம் மிக்க பல ஊர்கள் காலப்போக்கில் பெயரே மாற்றம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது.

இந்த மாதிரி பெயரே மாற்றப்பட்ட ஊர்களின் பாரம்பரியப் பெயரை மீண்டும் வைப்பது நமது பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியாகும் .

உதாரணத்திற்கு தற்போது புனித தோமையார் மலை என்பது பிருங்கி முனிவர் வசித்த பகுதியாகும். எனவே அதற்கு பிருங்கி மலை என்று வைப்பது நமது பண்பாட்டை மீட்டுகும் பணி.

ஆகவே தமிழக அரசு இத்தகைய பெயர் மாறிய ஊர்களின் பெயர்களையும் திரும்ப வைக்கவேண்டும் என இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்.

கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மத்திய உள்துறைக்கு கடிதம்- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

தேதி: 11.06.2020பெறுநர்:மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள்பொருள் : உரிய விசாரணை நடத்தாமல் கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மனு வணக்கம். தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் சுமார் 160 இந்து சமுதாய குடும்பங்கள் இருந்து வருகின்றனர் .சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் . இந்து சமுதாய மக்கள் விவசாயிகள் இருந்து வருகிறார்கள் .மேற்கண்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவில் சொத்தானது தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் 1598 மற்றும் பட்டா எண் 1376 உள்ளது . அதை காலம் காலமாக இந்து சமுதாய மக்கள் குலதெய்வ கோவிலாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர் .அந்தக் கோவிலில் பச்சாத்தி மாடன் மண்பீடம் இருந்து வருகிறது . வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோவில் கொடை நடத்தி வருகின்றனர் . இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்காக மண் பீடம் அமைந்திருந்தனர் .கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வருடம் கோவில் கொடை விழா நடத்தப்படவில்லை . மேற்படி மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் பீடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட ஊர் மக்கள் தீர்மானித்தனர் ,ஆனால் சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் இந்து கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக் கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள் .அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர் . மேலும் உண்மை விவரங்களை மறைத்து புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பதாக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர் .அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் , பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து தரைமட்டமாக இடித்துள்ளனர் .மேலும் பட்டா இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள் , பட்டா நிலத்தில் கோவில் கட்டுவதில் எந்தத் தடையும் கிடையாது . இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்கள் .முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்துக்கள் காலம் காலமாக வணங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர் . இதனால் அந்த ஊரில் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வருகிறார்கள் .பட்டா இடத்தில் உள்ள கோவிலை முஸ்லிம்களின் தூண்டுதல் காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ( யாருக்கும் முறையாக தபால் அனுப்பாமல் ) இடித்து தரைமட்டமாக்கிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .தாயகப் பணியில்V.P.ஜெயக்குமார்மாநில துணைத் தலைவர்இந்துமுன்னணி

கோவிலை திறக்க வலியுறுத்தி ஜூன் 10 – ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் – மாநிலத் தலைவர் அறிக்கை

08.06.2020
வணக்கம்.
ஆலயங்களை வழிபாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஜூன் 10 -ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

ஒரு மிகப்பெரிய, நீண்ட ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் திரு, எடப்பாடியார் அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது. சமீபத்தில் நடந்த அனைத்து மத பிரதிநிதிகளின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பக்தர்கள் நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.

ஆலயங்களைத் திறந்தால் கொரானா பரவிவிடும் என்று அச்சமா? என்று பார்த்தோம். ஆனால் ஆலயங்களைவிட அதிகமாக கொரானா பரவக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு வகையான தொழில்களுக்கு, பல்வேறு வகையான மக்கள் கூடும் இடங்களுக்கு குறிப்பாக டாஸ்மாக் போன்றவற்றிற்கு அரசாங்கம் விலக்கு அளித்திருக்கிறது. அவைகள் செயல்பாட்டுக்கும் வந்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து வெளியில் வரும்பொழுது ஒரு மனத் தெளிவு கிடைக்கின்ற வகையிலே ஆலயங்களை நாடி இறைவனிடம் வேண்டுதல் என்பது இயல்பான ஒரு விஷயம்.

ஆனால் திரு. எடப்பாடியார் அரசு மக்கள் மனத் தெளிவிற்கு வழிவகுக்காமல், வழிபாட்டுக்கு தடைவிதித்து இருக்கின்றது. வழிபாட்டுத் தலங்களை விட வேகமாக பரவ வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு எல்லாம் தளர்வுகளை தாராளமாக அளித்துள்ள அரசு ஏன் வழிபாட்டுத்தலங்கள் விஷயத்தில் மட்டும் அடம்பிடிக்கிறது? என்று தெரியவில்லை .

ஒருவேளை திரு.எடப்பாடியார் அரசாங்கம் தமிழகத்திலே கடவுள் மறுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும், மக்கள் மனதிலே கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்தை அகற்றவேண்டும், ஆலயம் செல்லுகின்ற பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ? என்ற இந்து முன்னணி சந்தேகிக்கிறது.

கடந்த மே 26 ம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆலயங்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் மனுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் திரு.எடப்பாடியார் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இதை கண்டித்து “கோவில்களை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆன்மீகத்தை இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு தவறை உணர்ந்து மனம் திருந்தி வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்
தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம்

06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான அரசின் சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் , சான்றோர்களை அழைக்க வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

02.06.2020
பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசுதலைமைச் செயலகம்
சென்னை
அன்புடையீர் வணக்கம்:
பொருள்: வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் மற்றும் சான்றோர்களை அழைக்க வேண்டி – கோரிக்கை
கொரோனா நோயின் காரணமாக கடந்த 70 நாட்களாக தமிழகத்திலுள்ள திருக்கோவில்கள் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய முடியாமல் உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலில் மாநில அரசுகளே வழிபாட்டுத் தலங்கள் திறக்க முடிவு எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மற்றும் மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களை திறக்க அந்தந்த மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், தமிழக அரசாங்கம் தடை தொடரும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை ௦3.௦6.2020 மாலை 4 .45 க்கு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிபாட்டுத்தலம் திறப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது என்று அறிகின்றோம்.
இந்த கூட்டத்தில் இந்து மத சம்பந்தமாக முடிவெடுப்பதற்காக, ஆலோசனை சொல்வதற்கு தமிழகத்தில் முன்னோடி சைவ வைணவ மடாதிபதிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். ஏதோ பெயருக்கு அடையாளம் தெரியாத இந்து மத பிரதிநிதி என்று யாரையோ அழைத்து கூட்டம் நடத்த கூடாது.
மேலும் இந்த கூட்டத்தில் இந்து முன்னணியும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருகிற எட்டாம் தேதி முதல் திருக்கோவில் திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்
தாயகப் பணிகளில்
காடேஸ்வராசி.சுப்பிரமணிம்
மாநிலத்தலைவர்
இந்து முன்னணி தமிழ்நாடு

பா.ஜ.க மூத்ததலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி – இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

02.06.2020

பா. ஜ.க.மூத்த தலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி

மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

பா.ஜ.கமுன்னாள் மாநில தலைவர், முன்னாள் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.இலஷ்மணன் அவர்கள் ஜூன் 1 இரவு 09.05 மணியளவில் பாரத தாயின் திருவடியை அடைந்தார்.

அக்டோபர் 20,1930 பிறந்தவர். 1944 ம் ஆண்டு RSS ல் தன்னை இணைத்துக் கொண்டார்.

1957 ல் BMS நிறுவனர் ஸ்ரீ தந்தோபந்த் தெங்கடி தலைமையில் சேலத்தில் ஜனசங்கம் துவங்கபட்டபொது அதில் இணைந்தவர்.1980 ல் ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சி ஆனது. 1984 முதல் 1989 வரை ; 1996 முதல் 2000 வரை மாநில தலைவராகஇரண்டு முறை இருந்தார்.

2001 முதல் 2006 வரை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

நூற்றுக்கணக்கான போராட்டங்கள் சிறைவாசமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அனுபவித்தவர்.

1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஹிந்தி தடைசெய்யப்பட்டது.நமது குழந்தைகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்க டில்லிக்கு சென்று C.B.S.E பாடத்திட்டத்தில் பள்ளியை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்..

1969 ல் செவ்வாய்பேட்டை சுமார் 35 குழந்தைகள் வைத்து துவங்க ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளிகள் இன்று 24 ஊர்களில் 10 ஆயரம் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.

கல்லாக இருந்த தமிழகத்தில் RSS குடும்ப இயக்கங்கள் ஊன்றி தழைத்திட காரணமாக இருந்தவர்.

அன்னாரது ஆத்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரது இழப்பு கட்சிக்கும், குடும்பத்திற்கும் பேரிழப்பு. அவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் கடிதம்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்
மாநிலத் தலைவர்- இந்துமுன்னணி

01.06.2020

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை

அன்புடையீர் வணக்கம் ,

பொருள்: தமிழகத்தில் கோவில்களை திறக்கவேண்டி கோரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரொனா கொடிய நோயை தமிழக அரசு கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.நான்கு கட்டங்களாக மத்திய அரசும் , மாநில அரசும் ஊரடங்கை அமுல்படுத்தி தற்போது படிப்படியாக சில தளர்வுகள் கொடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமி. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களும் தெய்வபக்தி கொண்டவர்கள். தமிழகத்தில் எல்லா விதமான குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில்களை மையமாக வைத்தே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கடந்த 60 நாட்களாக கோவில்களிள் மக்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்த கொரோனாவால் பல்வேறு பொருளாதார பாதிப்புகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு மனநிம்மதி கொடுக்கும் இடம் கோவில்கள்.

இந்த ஐந்தாவது கட்ட த்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோயில்கள் திறக்கலாம் என்று கூறியுள்ளது . இதனடிப்படையில் கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் கோயிலைத் திறக்க அந்தந்த அரசுகள் முடிவு செய்து இருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களை விட இந்து கோவில்களில் சுலபமாக சமூக இடைவெளி கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழிபாடு செய்ய வசதி உள்ளது. ஆகவே மக்களின் உள்ளக் குமுறல்களை கொட்டுவதற்கான இட மான கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்கு திறந்துவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

தாயகப் பணிகளில்

காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

மாநிலத் தலைவர்