Tag Archives: #சட்டோவிரோத

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்

மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்

வணக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.

மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.

மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக DGP அவர்கள்

தாயகப் பணியில்

V.P. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்