Tag Archives: இந்துமுன்னணி

இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் DGP க்கு கடிதம் – சட்டவிரோத போராளிகளினுடைய PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யவேண்டும்.

சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய , மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது .

இந்த போராட்டங்களை இனிவரும் காலங்களில் ஓரளவுக்கு கட்டுபடுத்த வேண்டுமானால் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்படும் நபர்களின் பெயர் விபரங்களை CCTNS பதிவேட்டில் எற்றினால் பிற்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு , கடவுசீட்டு , விசா , தனியார் துறை வேலைக்கான PCC சான்றிதழ் , NOC சான்றிதழ் , ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசியபணிகளில் அவர்களுக்கு தடை ஏற்ப்படும் .

எனவே PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யப்படவேண்டும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதற்கு பயந்து தவறான போராட்ட களத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கமாட்டார்கள் .

ஆகவே தாங்கள் விரைந்து போராட்டத்தில்ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழகத்தை மீண்டும் அமைதி பூங்காவாகமாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் .

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் இந்துமுன்னணி என்றும் பக்க பலமாய் இருக்கும்

அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .

பாதுகாக்கும் காவல் துறைக்கு ஒரு பாதிப்பு என்றால் எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?

அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும் . ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?

அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே…!
பொறுத்தது போதும் .

காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள், என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.

காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ….
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!

இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா? என்று புரியவில்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் .
#இந்துமுன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .

உங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றோம்…..

தமிழக காவல்துறைக்கு பயமா? – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கேள்வி

தமிழக காவல்துறைக்கு பயமா? இல்லை தமிழக முதல்வர் வாய்மொழி உத்தரவாக காவல்துறைக்கு உத்தரவு போட்டு உள்ளதா?

இஸ்லாமியர்களுடைய அராஜகம் நாளடைவில் வலுத்து வருகிறது இது நல்லதல்ல.

காவல்துறை அதிகாரிகள் மனநிலை பாதிக்கப் படுவார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்களே காவல்துறையினர் கை விலங்குகளை அவிழ்த்து விடுங்கள், இல்லையேல் அவர்களே உடைப்பார்கள்.

வி.பி.ஜெயக்குமார்,
இந்து முன்னணி துணைத் தலைவர்,
பரமன்குறிச்சி

இராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு

15-2-2020

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது,
சர்ச், மசூதிகளை பழுது பார்க்க நிதி ஓதுக்கீடு செய்கிறது..
அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்..

தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.

ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி உள்ளது. இந்நிலையில் மசூதி, சர்ச் பராமரிப்பு என நிதியை தமிழக அரசு அறிவிக்க காரணம் என்ன?

இந்து கோயில்களின் சொத்துக்களைப் பட்டாபோட்டு கொடுக்கவும், உண்டியல் பணத்தை கொள்ளையடிக்கவும் துணைபோவதை இந்துக்கள் உணர வேண்டும்.

மசூதிக்கோ, சர்சுக்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.

பல்லாயிரம் கோயில்கள் சீரழிந்து வருவதை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், கோயில் வருமானத்தை, நிர்வாக செலவினங்கள் என்ற பெயரில் சுரண்டி வருகிறது என்று, இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.

அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது.

பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன. இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.

அப்போதும், இந்த சொரணையற்ற இந்து சமுதாயம், திராவிட அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, நமது தொன்மையான இந்து கலாச்சாரத்தை, இந்து இறையாண்மையை, இந்து மத நம்பிக்கைகளை அழித்துக்கொள்ளப்போகிறதா? அப்படி இருப்பது, நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

மதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை

23.10.19இந்து முன்னணி இந்து மதத்தை வளர்க்கவும், பரப்பவும் மற்றும் இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச உள்ள ஒரு அமைப்பு ஆகும்.தமிழகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இளைஞர் அணி உள்ளதுபோல் இந்து முன்னணியிலும் இந்து இளைஞர் முன்னணி உள்ளது (HYF).இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 15ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினம் தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12 ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது . அன்றைய தினமும் HYF சார்பாக சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் இந்து இளைஞர் முன்னணி இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் நடத்துவதாக கற்பனையாக கூறி அதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருகிறது.இதே கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் (சகோதரத்துவ தினம்) விழாவிற்கு முன்னதாக மாணவர்கள் வண்ணக் கயிறு(கலர்) கட்ட கூடாது, இது சாதியத்தை குறிக்கிறது என்ற பொய் அறிக்கையை வெளியிட்டது இதையும் ஊடகங்கள் தெரிவித்தன.இப்படி தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ அதிகாரிகள் தங்கள் பதவியை பயன்படுத்தி இன்று விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்1.அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் 95% மாணவர்கள் இந்துக்கள் .ஆனால் அவர்களுக்கு கட்டாயமாக கிறிஸ்தவ (இயேசு ஜெபம்) பிரார்த்தனை நடத்துகின்றனர்.2.இப்பள்ளிகளில் பைபிள் போதனையும், பைபிள் விநியோகம் நடைபெறுகிறது3.இந்து மாணவிகள் பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, மஞ்சள் பூசக்கூடாது, மருதாணி வைக்க கூடாது என்று தண்டிக்கப்படுகிறார்கள்4.இந்து மத கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள்5.அரசு பள்ளிக்கூடங்களிலும் பைபிள் வினியோகம் அடிக்கடி ஆங்காங்கே நடக்கிறது இதை எதிர்த்து இந்து முன்னணி நூற்றுக் கணக்கான இடங்களில் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளது.6.கிறிஸ்தவ பள்ளிகள் சுதந்திர தினத்தையும் ,குடியரசு தினத்தையும் முறையாக கொண்டாடுவதில்லை .
இதை எதிர்த்து இந்து முன்னணி பல இடங்களில் போராடி உள்ளது.7. கிறிஸ்தவப் பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ மத போதனை கட்டாயப் படுத்தப் படுகிறது.8.முஸ்லீம் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடுகிறார்கள்.9.கல்லூரிகளில் கூட வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுக்கு தொழுகை நேரம் ஒதுக்கி விடுமுறை அளிக்கிறார்கள். இது சில இந்துக் கல்லூரியிலும் நடக்கிறது .10.நக்சல் அமைப்புகளும், இந்து விரோத அமைப்புகளும் (SFI, DYFI etc) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்11. நக்சல் வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து தேசவிரோத, இந்து-விரோத கருத்துகளை பரப்பி வருகின்றனர்.12.முஸ்லீம் அமைப்புகளும், கிறிஸ்தவ அமைப்புகளும் பள்ளி கல்லூரிகளில் செயல்படுகின்றனர்.இவ்வாறு மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் எந்த சுற்றறிக்கையையும் , எந்த விளக்கத்தையும் கேட்டு கடிதம் எழுதாத கல்வித்துறை இப்போது மட்டும் அறிக்கை கேட்பது ஏன்?உண்மையிலேயே இது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தானா? இல்லை அங்கே வேலை செய்யும் விஷமிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை ஊடகத்திற்கு கொடுத்தார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்து இளைஞர் முன்னணி பள்ளி, கல்லூரிகளுக்குள் செயல்படவில்லை. இது இளைஞர்களுக்கான பொது அமைப்பு. இதைப்பற்றி மட்டும் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை கேட்பது ஏன்?ஆகவே பள்ளி கல்வித்துறை இந்து விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனால் தான் சிறுபான்மை மதவெறி பிடித்த அதிகாரிகள் துணிச்சலுடன் விதிகளை மீறி இதுபோன்ற கடிதங்கள் எழுதுகிறார்கள்.தமிழக கல்வித்துறை மொத்தமாக மதவெறி பிடித்த கிறிஸ்தவ அதிகாரிகளின் கோரப் பிடியில் உள்ளது .தமிழக அரசு இந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்த கிறிஸ்துவ மதவெறியர்களிடமிருந்து மாணவர்களையும் கல்வித் துறையையும் காப்பாற்ற இந்துக்கள் முன்வர வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் இதுபோன்ற எந்த அறிக்கையும் பள்ளிக்கல்வித்துறை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதுவும் ஊடகங்களில் வந்துள்ளது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு இந்து முன்னணி பேரியக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.ஒருவேளை இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை வெளியிடாத பட்சத்தில் பொய்யான தகவல்களை தரும் ஊடகங்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறதுதாயகப் பணியில்சி‌. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

இராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
26-8-2019
தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு..
நேற்று வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அனைவரும் அனைத்து தேசத் தலைவர்களையும் மதிக்கும் பண்பு வளர வேண்டும்.
இப்படி சமூகத்தில் பதட்டத்தில் ஏற்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காரணமாக்கி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளுவதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமூகத்தில் நம்பிக்கையை அரசும், அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
சமூக விரோதிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். சாதி சண்டைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் இலங்கை மூலம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் வேளையில், இதபோன்ற சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நடக்கும் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக இருக்க தமிழக அரசு தனிக் கவனம் கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

வீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .

14-8-2019

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.

அந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.

ஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..?

3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா? இது மதத்தின் அடையாளமாகவில்லையா? இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன?

4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்?!

7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.

எனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,  கவலை அளிக்கிறது.. 

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
19-7-2019
பத்திரிகை அறிக்கை
நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,
கவலை அளிக்கிறது..
அத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.
48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
இது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.
திருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா? கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா?
மாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.
மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

கர்மவீரர் வழி நடப்போம்

பள்ளி செல்லணும் பிள்ளைகளே!
நல்ல பாடம் படிக்கணும் பிள்ளைகளே!
துள்ளித் துள்ளி ஆடிடணும்! நீ
சுறுசுறுப்பாக இருந்திடணும்!

அம்மா, அப்பா மகிழ்ந்திடணும்! நீ
அனைவரும் போற்ற உயர்ந்திடணும்!
நம்மால் இயன்ற உதவிகளை நாம்
நலிந்தோருக்குச் செய்திடணும்!

மதிய உணவுத் திட்டத்தால் ஏழை
மாணவர் படிக்கச் செய்தவரை,
நதிகளில் அணைகள் அமைத்தவரை,
நன்றியுடன் நீ நினைத்திடணும்!

ஆட்சியில் இருந்த போதிலுமே -ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் – காம
ராஜர் சரிதம் மறக்காதே!

பதவிகள் தேடி வருகையிலும் – மனம்
பதறாது உழைத்த பேராளர்!
நிதமும் மக்கள் நலம் கருதி – தன்
குடும்பம் மறந்த தவசீலர்!

எளிமை வாழ்வு, உயர் உள்ளம்- சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை,
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!

நாட்டுக்காக வாழ்ந்தவரை – நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காக படித்திடணும்! பின்
நாட்டை நாமும் காத்திடணும்!

மாணவப் பருவம் படிப்பதற்கே! கல்வி
வாழ்வில் உயர வழிகாட்டும்!
காமராஜரின் கருத்து இது- உன்
கல்வியும் நாட்டுக்கு வழிகாட்டும்!

இன்று (ஜூலை 15) கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்

நன்றி
https://www.facebook.com/vamumurali