Tag Archives: முருகன் கோவில்

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்