Tag Archives: திருச்செந்தூர்

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்