Tag Archives: இந்துமுன்னணி

கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மத்திய உள்துறைக்கு கடிதம்- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

தேதி: 11.06.2020பெறுநர்:மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள்பொருள் : உரிய விசாரணை நடத்தாமல் கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மனு வணக்கம். தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் சுமார் 160 இந்து சமுதாய குடும்பங்கள் இருந்து வருகின்றனர் .சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் . இந்து சமுதாய மக்கள் விவசாயிகள் இருந்து வருகிறார்கள் .மேற்கண்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவில் சொத்தானது தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் 1598 மற்றும் பட்டா எண் 1376 உள்ளது . அதை காலம் காலமாக இந்து சமுதாய மக்கள் குலதெய்வ கோவிலாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர் .அந்தக் கோவிலில் பச்சாத்தி மாடன் மண்பீடம் இருந்து வருகிறது . வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோவில் கொடை நடத்தி வருகின்றனர் . இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்காக மண் பீடம் அமைந்திருந்தனர் .கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வருடம் கோவில் கொடை விழா நடத்தப்படவில்லை . மேற்படி மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் பீடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட ஊர் மக்கள் தீர்மானித்தனர் ,ஆனால் சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் இந்து கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக் கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள் .அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர் . மேலும் உண்மை விவரங்களை மறைத்து புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பதாக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர் .அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் , பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து தரைமட்டமாக இடித்துள்ளனர் .மேலும் பட்டா இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள் , பட்டா நிலத்தில் கோவில் கட்டுவதில் எந்தத் தடையும் கிடையாது . இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்கள் .முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்துக்கள் காலம் காலமாக வணங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர் . இதனால் அந்த ஊரில் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வருகிறார்கள் .பட்டா இடத்தில் உள்ள கோவிலை முஸ்லிம்களின் தூண்டுதல் காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ( யாருக்கும் முறையாக தபால் அனுப்பாமல் ) இடித்து தரைமட்டமாக்கிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .தாயகப் பணியில்V.P.ஜெயக்குமார்மாநில துணைத் தலைவர்இந்துமுன்னணி

கோவிலை திறக்க வலியுறுத்தி ஜூன் 10 – ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் – மாநிலத் தலைவர் அறிக்கை

08.06.2020
வணக்கம்.
ஆலயங்களை வழிபாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஜூன் 10 -ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை

ஒரு மிகப்பெரிய, நீண்ட ஊரடங்கு காலத்திற்குப் பின் தற்போது மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் ஜூன் எட்டாம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் திரு, எடப்பாடியார் அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது. சமீபத்தில் நடந்த அனைத்து மத பிரதிநிதிகளின் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று பக்தர்கள் நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.

ஆலயங்களைத் திறந்தால் கொரானா பரவிவிடும் என்று அச்சமா? என்று பார்த்தோம். ஆனால் ஆலயங்களைவிட அதிகமாக கொரானா பரவக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு, பல்வேறு வகையான தொழில்களுக்கு, பல்வேறு வகையான மக்கள் கூடும் இடங்களுக்கு குறிப்பாக டாஸ்மாக் போன்றவற்றிற்கு அரசாங்கம் விலக்கு அளித்திருக்கிறது. அவைகள் செயல்பாட்டுக்கும் வந்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து வெளியில் வரும்பொழுது ஒரு மனத் தெளிவு கிடைக்கின்ற வகையிலே ஆலயங்களை நாடி இறைவனிடம் வேண்டுதல் என்பது இயல்பான ஒரு விஷயம்.

ஆனால் திரு. எடப்பாடியார் அரசு மக்கள் மனத் தெளிவிற்கு வழிவகுக்காமல், வழிபாட்டுக்கு தடைவிதித்து இருக்கின்றது. வழிபாட்டுத் தலங்களை விட வேகமாக பரவ வாய்ப்பு இருக்கும் இடங்களுக்கு எல்லாம் தளர்வுகளை தாராளமாக அளித்துள்ள அரசு ஏன் வழிபாட்டுத்தலங்கள் விஷயத்தில் மட்டும் அடம்பிடிக்கிறது? என்று தெரியவில்லை .

ஒருவேளை திரு.எடப்பாடியார் அரசாங்கம் தமிழகத்திலே கடவுள் மறுப்புக் கொள்கையை அமல்படுத்த வேண்டும், மக்கள் மனதிலே கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்தை அகற்றவேண்டும், ஆலயம் செல்லுகின்ற பழக்கத்தை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ? என்ற இந்து முன்னணி சந்தேகிக்கிறது.

கடந்த மே 26 ம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆலயங்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் மனுக்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவை எதற்கும் திரு.எடப்பாடியார் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இதை கண்டித்து “கோவில்களை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆன்மீகத்தை இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு தவறை உணர்ந்து மனம் திருந்தி வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்
தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

23.05.2020

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழக அரசு- சென்னை
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
கடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.
கடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.
இந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநில தலைவர்
இந்து முன்னணி

மங்கலம் சொல்லும் சேதி- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது

நேற்று 08/03/2020
திருப்பூர் மங்கலத்தில்
நடந்தது என்ன..?திருப்பூர் அருகே உள்ளது மங்கலம்..
இங்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் சரிசமமாக வசிக்கிறார்கள்.மங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில்
இந்துக்களே பெரும்பான்மை .இந்நிலையில்
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தினம் தோறும் சாலைகளை மறிப்பது இந்துக்களை தாக்குவது, பெண்களை சீண்டுவது, இந்து கடவுள்களை இழிவு படுத்தி பேசுவது
என இஸ்லாமியர்களின் அராஜகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்தது.இதற்கு முடிவு கட்ட
ஒட்டுமொத்த கிராம மக்களும்
ஒன்று சேர்ந்து இந்து மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி இந்த அராஜகத்திற்கு எதிராக பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.அந்த பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கியது.
நேற்று காலையில் இருந்தே
இஸ்லாமியர்களின் அராஜகமும் துவங்கியது.நிகழ்ச்சிக்காக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது .அதை கழட்ட வேண்டும் என முஸ்லிம்கள் அராஜகம் செய்தனர் .எனவே மூன்று சாலைகளில் இருந்த தேசியக்கொடிகள் போலீசாரின் நெருக்கடியால் கழட்டப்பட்டன.பொதுக்கூட்டத்திற்கு வரும் சாலைகள் மொத்தம் நான்கு
ஒன்று அவிநாசி வழியாக வரும் சாலை, இரண்டு திருப்பூரில் இருந்து வரும் சாலை, மூன்று பல்லடத்தில் இருந்து வரும் சாலை,நான்கு சாமளாபுரத்லிருந்து வரும் சாலை…அவிநாசி சாலையை தவிர
மற்ற மூன்று சாலைகளையும்
முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களை
மறிப்பதும் தாக்குவதும் ஆங்காங்கே அரங்கேறின.தகவல் அறிந்து போலீசார் செல்வதும் அவர்களை கலைப்பதும் என்ற சூழ்நிலை பொதுக்கூட்டம் முடியும்வரை தொடர்ந்தது..பொதுக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் இந்த முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகினர்.பொதுக் கூட்டம் முடிந்து
பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது 3 சாலைகளை முஸ்லிம்கள் ரோட்டில் வந்து அமர்ந்து பாதையை மறித்துக் கொண்டனர்.இதனால் தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.கடைசிவரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை.ஒரு பக்கம் இந்து பொதுமக்கள் தன்னெழுச்சி பெற்று
இஸ்லாமிய அராஜகத்திற்கு எதிராக போராட வந்தது மகிழ்ச்சி என்றாலும்
இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி
ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஒரு உதாரணம்.முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இந்து மக்கள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். ஊரைப் பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் உறுப்பினராக வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறைகூவல் விடுத்தார். அது காலத்தின் கட்டாயம்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி

29.02.2020

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது..

பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் காட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்துகொள்வதை காண்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப்பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களிடம் உள்ள

சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகப் பணியில்

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற கோரி போராட்டம் துவங்கியது- பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த திட்டம்-மாநிலத் தலைவர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற
கோரி காலவரையற்ற போராட்டம் துவங்கியது.திருப்பூரில் இந்துமுன்னணியின் தலைமையில் இந்துக்களின்
போராட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.சட்டவிரோதமாக பங்ளாதேஷ்
நாட்டை சேர்ந்த
முஸ்லிம்கள்
சுமார் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் ஊடுருவியுள்ளனர்.அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை இந்தப்
போராட்டம் காலவரையின்றி
தொடரும் எனவும் இதேபோல்
மேலும் பல மாவட்டங்களில்
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்துக்களே ஒன்று சேருவோம்..
இப்போது இல்லை என்றால்
எப்போதும் இல்லை.

தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினம் – சமுதாய சமர்ப்பண தினம் – செயலையும், செல்வத்தையும் தந்து தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

இந்து தர்மத்தையும் , தேசத்தையும் காக்கும் பணியை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை, நிலங்களை, குளங்களை மீட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கிறித்துவ மோசடி மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளது .

பிரிவினைவாதிகளால் தேசத்திற்கு ஆபத்து நேரிடும் போதும் , இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் போதும் நேரிடையாக களத்தில் இறங்கி போராடிவருகிறது .

தன்னலம் கருதாத பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கமாக இந்து முன்னணி இயங்கி வருகிறது.

இதுபோன்று பல்வேறு வகையில் இந்து தர்மத்தை பாதுகாக்கக்கூடிய பணிகளை இந்து முன்னணி செய்து வருகின்றது .

தங்களைப்போன்ற நல்லோர்களின் ஆதரவைக் கொண்டு இந்து தர்மத்தைக் காக்க இந்துமுன்னணி பாடுபட்டு வருகிறது.

இந்துமுன்னணியின் முதல் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினத்தை சமுதாய சமர்ப்பணதினமாக கொண்டாடி வருகிறோம் .

நாம் நமது சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .

எனவே , தங்களது ஆக்கப்பூர்வமான செயலையும், செல்வத்தையும் தந்து இந்த தெய்வீக பணியில் பங்கு பெற வேண்டுகிறோம் .

தாங்கள் சமர்பிக்கும் நிதி….

1. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதியில் இயங்கி வருகின்ற பாரதியார் குருகுலம் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கின்ற 76 குழந்தைகளின் படிப்பிற்கும், பராமரிப்பிற்கும் செலவிடப்படுகிறது.

இவர்களுக்கு உணவு அளிக்க விரும்புவோர் தாங்கள் அளிக்கும் நிதியை Bharathiyar Gurukulam Trust என்னும் பெயரில் DD / Check ஆகவும் அளிக்கலாம்.

(ஒரு வேளை உணவு செலவு ₹2000, ஒரு நாள் உணவு செலவு ₹5000, ஒரு மாத உணவு செலவு ₹ 1,50,000)

2 . இந்து சமுதாயத்திற்காக இந்து முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேரமாக பணியாற்றும், முழு நேர ஊழியர்களின் அடிப்படை செலவுகளுக்காக செலவிடப்படுகிறது. 84 முழுநேர ஊழியர்கள் தர்மம் காக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களை பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

3. குழந்தைகளுக்கு நமது இந்து தர்மத்தை போற்றும் பண்பாட்டு வகுப்புகள் நடத்த செலவிடப்படுகிறது.

4. கோசாலைகளுக்கு வரும் வயதான பசுக்களை பராமரிக்க செலவிடப்படுகிறது.

5. இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக ஜக்கத் என்ற பெயரில் தனது வருமானத்தை கொடுக்கிறார்கள். கிறிஸ்துவர்களும் தனது வருமானத்தில் தசமபாகம் எனும் பெயரில் தங்களது சமுதாய வளர்ச்சிக்காக கொடுக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தை மேம்படுத்த ஒவ்வொரு இந்துவும் இயன்றதை செய்வோம்.