![](https://i2.wp.com/hindumunnani.org.in/news/wp-content/uploads/2020/06/img-20200602-wa00359170370385766741697.jpg?w=604&ssl=1)
![](https://i1.wp.com/hindumunnani.org.in/news/wp-content/uploads/2020/04/IMG-20200413-WA0148.jpg?resize=604%2C270&ssl=1)
வழிபாட்டு தலம் திறப்பு சம்பந்தமான அரசின் சிறப்பு கூட்டத்திற்கு இந்து சமய மடாதிபதிகள் , சான்றோர்களை அழைக்க வேண்டும் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர்
![](https://i2.wp.com/hindumunnani.org.in/news/wp-content/uploads/2020/06/img-20200602-wa00359170370385766741697.jpg?w=604&ssl=1)
02.06.2020
பா. ஜ.க.மூத்த தலைவர் திரு. K.N. லக்ஷ்மணன் அவர்களுக்கு அஞ்சலி
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை
பா.ஜ.கமுன்னாள் மாநில தலைவர், முன்னாள் மயிலை சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.இலஷ்மணன் அவர்கள் ஜூன் 1 இரவு 09.05 மணியளவில் பாரத தாயின் திருவடியை அடைந்தார்.
அக்டோபர் 20,1930 பிறந்தவர். 1944 ம் ஆண்டு RSS ல் தன்னை இணைத்துக் கொண்டார்.
1957 ல் BMS நிறுவனர் ஸ்ரீ தந்தோபந்த் தெங்கடி தலைமையில் சேலத்தில் ஜனசங்கம் துவங்கபட்டபொது அதில் இணைந்தவர்.1980 ல் ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சி ஆனது. 1984 முதல் 1989 வரை ; 1996 முதல் 2000 வரை மாநில தலைவராகஇரண்டு முறை இருந்தார்.
2001 முதல் 2006 வரை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
நூற்றுக்கணக்கான போராட்டங்கள் சிறைவாசமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அனுபவித்தவர்.
1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஹிந்தி தடைசெய்யப்பட்டது.நமது குழந்தைகள் ஹிந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் விருப்பம் தெரிவிக்க டில்லிக்கு சென்று C.B.S.E பாடத்திட்டத்தில் பள்ளியை துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்..
1969 ல் செவ்வாய்பேட்டை சுமார் 35 குழந்தைகள் வைத்து துவங்க ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளிகள் இன்று 24 ஊர்களில் 10 ஆயரம் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.
கல்லாக இருந்த தமிழகத்தில் RSS குடும்ப இயக்கங்கள் ஊன்றி தழைத்திட காரணமாக இருந்தவர்.
அன்னாரது ஆத்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அவரது இழப்பு கட்சிக்கும், குடும்பத்திற்கும் பேரிழப்பு. அவர்கலுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்