Daily Archives: February 7, 2018

தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம் – இராம கோபாலன் பத்திரிகை அறிக்கை

தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி
தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..

திருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனங்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.

இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது.

கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் பாதிப்புகளினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.

அதுபோல், தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க, இது போன்ற அசந்தர்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்த வழியாகும்.

எனவே, வருகின்ற, தை வெள்ளியான பிப்ரவரி 9ஆம் தேதி மாலை அனைத்து இந்துக்களின் வீட்டின் வாசல்களிலும் கோலமிட்டு, வீட்டின் முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தமிழக நலனுக்கு வேண்டுவோம்.

இந்த நற்செயலுக்கு, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு எல்லா இந்து ஆன்மிக அமைப்புகளும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

கூட்டுப் பிரார்த்தனை, அனைவரும் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது நல்ல பலனையும், மக்களிடையே நேர்மறை சிந்தனையையும் ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.

தமிழக நலனுக்காக எல்லோர் வீடுகளிலும் 9-2-2018 வெள்ளி அன்று மாலை வீட்டின் வாசலில் கோலமிட்டு, தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.