Tag Archives: #சந்தர்ப்பவாதஅரசியல்

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – மாநில செயலாளர் குற்றாலநாதன்

16.04.2020

அனுப்புநர்
கா.குற்றாலநாதன்
திருநெல்வேலி

பெறுநர்

சென்னை

வணக்கம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 ) தை பொங்கலுக்கு அரிசியும் வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும். மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது.

2. ) அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. தற்போதுள்ள கொரோனா தடை காலத்திலும் அந்த PDSஅமைப்பு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

பொது விநியோக திட்டத்தில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு வழங்கும் அரிசியை பள்ளிவாசலில் வழங்குவது சரியா ? தமிழகத்தில் கொரோணா பரவலுக்கு பெருமளவு காரணம் என்ன என்பதை அறிந்த அரசே மீண்டும் சமூக பரவலுக்கு வழிவகுக்கலாமா ?

3) ஊரடங்கு உத்தரவினால் கோவில்கள், சர்ச்சுகள் எல்லாம் கடந்த 21 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அரிசி வழங்குவதற்காக பள்ளிவாசலை மட்டும் திறக்க சொல்வது நியாயமா?

தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம், புனித வெள்ளி, ஈஸ்டர் என எந்த பண்டிகைக்கும் எந்த வழிபாட்டு தலத்திலும் எந்த மக்களும் அனுமதிக்கபடாத நிலையில் பள்ளிவாசலில் அரிசி வாங்க மட்டும்திறக்கலாமா ? பொதுமக்களை அனுமதிக்கலாமா ? இது பாரபட்சமான நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகிறார்கள்

4 ) கோவில்களையும் சர்ச்சைகளையும் திறந்தால் மட்டும் நோய் தொற்று பரவும் . ரம்ஜான் அரிசி கொடுக்க பள்ளிவாசலை திறந்து கூட்டம் சேர்த்தால் நோய் பெற்று பரவாதா?

ஆகவே ரமலான் நோன்பு அரிசியை வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்களை திரட்டி அரிசி வழங்கி கொரோணா தொற்று பரவலுக்கு அரசே வழிவகுக்காமல் தீபாவளி, பொங்கல் இனாம் போல அனைத்து மக்களுக்கும் மதசார்பற்ற அரசு மத பாகுபாடின்றி பொது விநியோக திட்டம் மூலம் ரேசன் கடைகளில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

கா.குற்றாலநாதன்

மாநில செயலாளர்

இந்துமுன்னணி
நெல்லை