Monthly Archives: August 2014

திருப்பூர்- வடமாநில இந்துக்கள் ஒன்றிணைவு விழா ( uththar baarathiya ektha milan samaroh)

திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வட மாநிலத்தை சேர்ந்த, தொழில் நிமித்தமாக வந்திருந்து குடியேறி தமிழகவாசிகளாகவே ஆகிப்போன வட இந்திய இந்து  சகோதரர்கள் இந்து முன்னணி பேரியக்கத்தில் இணைந்து சமுதாயப்பணி ஆற்ற உள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நடைபெறவுள்ள பெரும் விழாவில் அவர்கள் இந்துமுன்னணியில் இணைகின்றனர்.

இந்த விழாவிற்கு இந்துமுன்னணி மாநிலத் பொதுசெயலாளர் திரு.காடேஸ்வர சுப்ரமணியம் அவர்கள், மாநில அமைப்பாளர் திரு. நா. முருகானந்தம் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

வட மாநில இந்துக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. வித்யா பூஷன் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர்  இந்துமுன்னணியில் இணைகின்றனர்.

மதம் மாறுவது அவமானம் – தாய் மதம் திரும்புவது தன்மானம் – விநாயகர் சதுர்த்தி விழா-ஆகஸ்ட் 29

தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் திரு உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுமார் 1000 இடங்களில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத காகிதக் கூழில்  தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகள் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது.

தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வருகின்ற மதமாற்றம்  தடுத்து நிறுத்தப்பட வேண்டும், மதம்மாறியவர்களை தாய்மதம் திருப்பப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இவ் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட இந்துமுன்னணி தீர்மானித்து உள்ளது.

இவ்விழாவில் அனைவரும் பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.