Tag Archives: சமூக தலைவர்கள்

பயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை

ிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.

திருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.