Daily Archives: October 15, 2020

சமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்

14.10.2020

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் திருமங்கலங்குறிச்சி‌ ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைகுளம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையில் (ஆடு சம்பந்தமாக) பிரச்சனை எனத் தகவல் வந்தது .

இந்தத் தகவல் கிடைத்ததும் சந்தர்ப்ப வாத அரசியல் கட்சிகளும், ஜாதிக் கட்சி தலைவர்களும் பிரச்சினையை ஊதி பெரிதாக்கி ஆதாயமடைய நினைத்தனர்
ஊடகங்களும் தங்கள் பங்குக்கு அதில் விளம்பர விளையாட்டை நடத்தினர்.

பிரச்சினை என்றால் இரு தரப்பையும் சந்தித்து பேசி அதை சீர் செய்ய வேண்டும். ஆனால் வந்த அரசியல்வாதிகள் உட்பட அத்தனை பேரும் தங்களுக்கு எது ஆதாயமோ அதை மட்டுமே செய்தனர்.

இந்நிலையில் இதில் உண்மை என்ன என்பதை கண்டு அறிய இந்துமுன்னணி தீர்மானித்தது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P.ஜெயக்குமார் அவர்கள் உண்மை நிலவரம் கண்டறிய நேரில் சென்றார்.

பாதிக்கப்பட்டவர் பால்ராஜ் என்பவர் . அவரது மகன் கருப்பசாமி.

தகப்பனார் அங்கு இல்லாத காரணத்தால் மகன் கருப்பசாமியிடம் பேசினோம்.

“எங்கள் ஊரில் கோவில் கொடை , விழா மற்றும் சுடுகாடு அனைத்தும் ஒன்றுதான்.
சாதி மற்றும் அரசியல் கட்சிக் கொடிகள் ஊரில் கிடையாது”, என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

பாதிக்கப்பட்ட பால்ராஜ் அவர்களின் அண்ணன் திரு.தங்கபாண்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்.

இரண்டு‌ பேரையும் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் சந்தித்தோம். அவர்கள் ,”இந்த சம்பவம் எங்க ஊருக்கு ஒரு திருஷ்டி” எனக் கூறினார்கள்.

இந்த பிரச்சினையை இத்துடன் ‌முடிவுக்கு கொண்டு வருவதுடன், இதுபோல சம்பவம் இனி எங்கள் பகுதியில் நடை பெறாது என்று உறுதி படக் கூறினார்கள்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியிடம் பேசிய போது, “எங்கள் வீட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் சொந்த வீட்டிற்கு வந்து செல்வது போல் வருவார்கள்.இன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் பத்துபேர் வேலை செய்கின்றார்கள்.
எவ்வித மன பேதமும் இல்லாமல் ஒற்றுமையாக உள்ளதாக” ஊராட்சி மன்ற தலைவர் மனைவி அவர்கள் கூறிய விதம் எங்களுக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தது.

ஒன்றாகக் கூடிவாழும் மக்களிடம் திட்டமிட்டு பிரிவினை உருவாக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சுயநல முகத்தை உணர்த்திவிட்டு எக்காலத்திலும் இந்துக்கள் பிரியக்கூடாது. ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை கூறி, இந்துமுன்னணி என்றும் உடனிருக்கும் என்ற உறுதிமொழி அளித்து வந்தனர் பொறுப்பாளர்கள்.

இந்து முன்னணி சார்பில் பார்வையிட்டு பேசவந்த இந்து முன்னணி மாநில துணைத் தலைவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் T.K.R.ராமச்சந்திரன் உடன் சென்றனர்.

இந்துக்களின் நலன் காக்கும் பணியில் என்றும் இந்துமுன்னணி முன்னணியில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு இது.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்

15.10.2020

தமிழகத்தில் காவல்துறை சிறுபான்மையினரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் அவலம் தொடர்ந்து நடக்கிறது.

சமூக வளைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியதன் பேரில் கொடுத்த புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆனால், முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாட்டை கேலிச்சித்திரமாக வரைந்த திரு. வர்மா என்பவரை கைது செய்கிறது காவல்துறை.

தமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டும் கருத்துரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இந்துக்களை கேவலப்படுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய திராவிடர் கழக வீரமணி, கிறிஸ்தவ பாதிரிகள் மோகன் சி. லாசரஸ், எஸ்றா சர்குணம், தடா ரஹீம் போன்ற பலர் மீது தொடுத்த வழக்கை விசாரணை அளவில்கூட எடுக்காத காவல்துறை, இன்று (15.10.2020) விடியற்காலை கார்டூனிஸ்ட் வர்மாவை மீண்டும் கைது செய்துள்ளது.

கோவையில் ஈவிரக்கமற்ற வகையில் குண்டு வைத்து, பல நூறு பேர் உடல் சிதறி இறக்கவும், பல நூறு பேர் உடல் ஊனமாகி நடைபிணமாக வாழவும், காரணமான இஸ்லாமிய மதவெறியன் பாஷாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போஸ்டர் போடும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது.

சென்னை புழல் முதல் கோவை சிறை வரை சிறைத் துறை அதிகாரிகளை இஸ்லாமியர்கள் தாக்கியதை நியாயப்படுத்தவும், பொதுத் தளத்தில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. இங்கெல்லாம் காவல்துறை முணுமுணுக்கக்கூடவில்லை.

கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் மீண்டும் இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ததன் மூலம், தைரியமாக கருத்து தெரிவிக்கும் இந்துக்களை முடக்க நினைக்கிறது காவல்துறை. இது ஜனநாய விரோதமானது. கருத்துத் தெரிவிப்பதை தடுக்க நினைக்கும் காவல்துறையின் செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக கார்டூனிஸ்ட் வர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்



T.மனோகர்

மாநில செயலாளர்