ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம்

04.05.2020
பத்திரிக்கை அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பொது மக்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தைரியமாக போரிட்டு, பொதுமக்களை காப்பாற்றும் பணியில் நான்கு இராணுவ வீரர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைத்த அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எதனுடனும் ஒப்பிடமுடியாது.

இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று பிணைக் கைதிகளாக இருந்த பொது மக்கள் அனைவரையும் இந்த ஐந்து தியாகிகளும் மீட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலியை இந்து முன்னணி பேரியக்கம் சமர்பிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கும் மத்திய அரசிற்கும் இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில் காடேஸ்வராசுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *